பணம்

படித்ததி பிடித்தது பணத்தால் சந்தோஷத்தை வாங்க முடியாது . பணத்தால் அவமானம் படாமல் வாழலாம். 1.பணம் உங்களிடம் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு பெரிய நேர்மையாளனாக இருந்தாலும் உங்கள் மீது எவ்வளவு மரியாதை இருந்தாலும் அது கானல் நீர் ஆகிவிடும் . 2. உங்களிடம் பணம் இல்லை என்றால் உதாசீனப்படுத்தப்படுவீர்கள் 3. உங்களிடம் பணம் இல்லை என்றால் உங்களை ஒதுக்கி வைத்து அவமானப்படுத்துவார்கள் 4. உங்களிடம் பணம் இல்லை என்றால் கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள்,உறவுகள்,நண்பர்கள் இவர்களால் பல நேரங்களில் அவமானப்பட நேரிடும். 5. மரம் சுட்டே கரியாகவில்லை மயிறு சுட்டா கரியாக போகிறது என்கிற வசனம் எல்லாம் பேசுவதற்கு நல்லா இருக்கும். அவமானத்தை தலை குனிவதை தடுக்க இயலாது. 6. பணத்தால் எல்லாவற்றையும் சாதித்து விட முடியாது என்கிற டயலாக் எல்லாம் தூக்கி போடுங்கள் பணம்தான் உங்களை மரியாதை உள்ள மனிதனாக வாழ வைக்கும் .இது நான் கண்ட அனுபவ உண்மை. 7. நம்மிடம் பணம் இல்லை என்றால் நம் மனமே நம் சொல்வதைக் கேட்காது நம் எண்ணமே நம்மை தூற்ற தொடங்கும்.இவன் ஒரு Useless, பிழைக்கத் தெரியாதவன்,வாய் பட்டா, என்று பேசுவது நக்கலாக பார்ப்பது இதெல்லாம் நடக்கும். 8. இளமையில் பணத்தை தேடி சம்பாதிக்கவில்லை என்றால் முதுமையில் அவமானப்பட வேண்டி இருக்கும் .மனம் சஞ்சல ப்படும். 9. உன்னிடம் உள்ள குறைந்த தொகை வைத்து சிறப்பாக நீ வாழ்ந்தாலும் மற்றவரிடம் கையேந்தி நிற்காமல் இருந்தாலும் சபைகளில் சங்கடங்களுக்கு நிச்சயமாக ஆளாக வேண்டி வரும். 10. இளமையில் சம்பாதித்த தந்தையின் சொத்தை சந்ததிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்க நன்றாக சம்பாதியுங்கள் தங்களை வளர்த்த பெற்றோர்கள் சந்தோஷமாக வாழ பணம் ஒரு பிரதானம். 11. எனது பதிவில் நிச்சயமாக பலருக்கு மாற்று கருத்து இருக்கலாம் .சர்க்கரை என்று சொல்லியும் பேப்பரில் எழுதியும் நாக்கால் நக்கினால் நிச்சயம் இனிக்காது. 12. ஓடுகின்ற வரை ஓடிக்கொண்டே இருங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள் பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருங்கள் கடைசி காலம் வரை. 13.எந்த கஷ்டமாக இருந்தாலும் பணத்தால் அதை தீர்ப்பதற்கும் குறைப்பதற்கும் வழி வகை உண்டு . 14.ஏதோ ஒரு சில சந்தர்ப்பங்களில் பணத்தால் முடியாத சில சூழல்களும் மனிதனுக்கு ஏற்படுவது உண்டு. 15.அதை விதிவிலக்காக வைத்துக் கொள்வோம் பணத்தைத் தேடி ஓடுவோம் பந்தங்களும் பாசங்களும் சொந்தங்களும் நட்புகளும் நாடிவரும். உங்களை தேடி வரும். மீண்டும் ஒரு பதிவுடன்

எறும்புகள்

என்ன ஒரு அற்புதமான கண்டுபிடிப்பு*! எறும்புகள், குளிர்காலத்திற்காக சேமித்து வைக்க வேண்டிய தானியங்கள் மற்றும் விதைகளை சேகரித்த பிறகு, அவற்றை தங்கள் கூடுகளில் சேமிப்பதற்கு முன்பு பாதியாக உடைக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏனென்றால், விதைகளை பாதியாக உடைப்பதன் மூலம், மிகவும் சரியான சூழ்நிலைகள் இருந்தபோதிலும் அவை முளைப்பதைத் தடுக்கிறது. ஆனால் எறும்பு கூட்டில் சேமிக்கப்பட்ட கொத்தமல்லி விதைகள் எப்போதும் 2 துண்டுகளுக்குப் பதிலாக 4 துண்டுகளாக உடைக்கப்படுவதைக் கண்டுபிடித்தபோது விஞ்ஞானிகள் திகைத்துப் போனார்கள். சில ஆய்வக ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, கொத்தமல்லி விதை மட்டுமே இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகும் முளைக்கக்கூடிய ஒரே விதை, ஆனால் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பிறகும் முளைக்க முடியாது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அப்படியானால் இந்த சிறிய சிறிய உயிரினங்கள் இதையெல்லாம் எப்படி அறிந்தன? மேலும் மனிதர்களாகிய நாம் கடவுளின் ஒரே புத்திசாலித்தனமான படைப்புகள் என்று நினைத்தோம். உண்மை என்னவென்றால், நமக்கு மிகக் குறைவாகவே தெரியும் & ஒவ்வொரு உயிரினத்திலிருந்தும் அது மிகவும் சிறியதாக இருந்தாலும் கூட கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது. *கடவுள் பெரியவர் & பாரபட்சமற்றவர்*

அற்புதமான மருந்துகள்

*உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்* 1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம் 2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம் 3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம் 4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து 5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து 6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து 7. சூரிய ஒளியும் ஒரு மருந்து 8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம் 9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம் 10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம் 11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம் 12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம் 13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம் 14. சரியாகச் சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம் 15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம் *இந்த மருந்துகளை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும்*.

நமக்கான நேரம் வரும்

படித்ததில் பிடித்தது இரண்டு மாம்பழங்களும் ஒரே மரத்தின் ஒரே கிளையில்தான் வளர்ந்துள்ளன. ஒன்று ஏற்கனவே பழுத்துவிட்டது, மற்றொன்று இன்னும் பழுக்கவில்லை. பழுக்க அதற்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது. இந்த மாம்பழங்கள் மூலம் இயற்கை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. நமக்கு முன்னால் சிலர் வெற்றி பெற்றுவிடுவதால், நாம் தோல்வியடைந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நமது நேரம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம். எனவே, நாம் பொறுமையாக இருக்க வேண்டும், உற்சாகமாக இருக்க வேண்டும், விரக்திக்கு அடிபணியாமல் இருக்க வேண்டும். நம் சொந்த வெற்றியின் சந்தோஷத்தை அடைவதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம் அவ்வளவுதான். நினைவில் கொள்ளுங்கள்! நமக்கான நேரம் வரும் - அதற்கு தேவை பொறுமை, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை ...

அமோகமாக வாழும்

ஒவ்வொரு குடும்பத்துலயும் ஒரு நல்ல பிள்ளை ஒன்னு இருக்கும். அது இளிச்சவாயா இருக்கும். அது எல்லாத்துக்கும் எல்லாத்தையும் குடுத்துரும். கொடுக்கலைன்னாலும் கொடுக்க வச்சிருவாங்க. அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்கட்டும்னு நினைக்கும். But அந்த ஒரு ஜீவன் மட்டும் அப்போதைக்கு நல்லாவே வாழாது. அதுகிட்ட இருந்து எடுத்துக்கிட்டவங்க யாரும் திருப்பி எதுவும் செய்ய மாட்டாங்க. பொழைக்க தெரிலனு comment வேற செய்வாங்க. அதெல்லாம் அது எதையும் கண்டுக்காது. கண்டிப்பா கஷ்டம் தான் படும். ஆனாலும் திரும்ப திரும்ப நல்லது தான் செய்யும். அது வாங்கற அடி யாராலும் வாங்கியிருக்க முடியாது. அவ்வளவு அடி மேலே அடி வாங்கிட்டு திரும்ப வந்து செஞ்சிட்டே இருக்கும் அந்த இளிச்ச வாய் ஜீவன் ‌‌. பிகு. இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். அது கெட்டு போகாது. அமோகமாக வாழும் ...

வாழ்ந்து பாருங்கள்

_ படித்ததில் பிடித்தது *வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம் ஆனால் வாசம் இல்லை. வாசமுள்ள மல்லிக்கோ ஆயுள் குறைவு.*_ _கொம்புல்ல மானுக்கோ வீரமில்லை._ _வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை._ _கருங்குயிலுக்கு தோகை இல்லை_ _தோகை உள்ள_ _மயிலுக்கோ இனிய குரல் இல்லை._ _*நீருக்கு நிறம் இல்லை, நெருப்புக்கு ஈரம் இல்லை, கதிரவனுக்கு நிழல் இல்லை, காற்றுக்கு உருவமில்லை.*_ _*ஆக அது இருந்தால் இது இல்லை. இது இருந்தால் அது இல்லை.*_ _ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன்._ _ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான்._ _எவர் வாழ்விலும் நிறைவில்லை, எவர் வாழ்விலும் குறைவுமில்லை._ _*இதைப் புரிந்து கொண்டு அமைதி கொள்ளுங்கள். வாழ்வு ஒரு முறை வாழ்ந்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது உங்களுக்காக.*_