அற்புதமான மருந்துகள்

*உலகில் எந்த மருந்தகங்களிலும் கிடைக்காத அதி அற்புதமான மருந்துகள்* 1. உடற்பயிற்சி என்பதும் ஒரு மருத்துவம் 2. விரதம் இருப்பதும் ஒரு மருத்துவம் 3. இயற்கை உணவு உண்பதும் ஒரு மருத்துவம் 4. சிரிப்பு என்பதும் ஒரு மருந்து 5. நல்ல தூக்கம் என்பதும் ஒரு மருந்து 6. பச்சைக் காய்கறிகள் உண்ணுவதும் ஒரு மருந்து 7. சூரிய ஒளியும் ஒரு மருந்து 8. ஒருவரிடம் அன்பாய் இருப்பதும் ஒரு மருத்துவம் 9. நன்றி உணர்வோடு இருப்பதும் ஒரு மருத்துவம் 10. தவறை மன்னிப்பதும் ஒரு மருத்துவம் 11. தியானம் என்பதும் ஒரு மருத்துவம் 12. இறைவனை நினைப்பதும் துதிப்பதும் ஒரு மருத்துவம் 13. மனதிற்கு பிடித்தமான பாடல் பாடுவதும் கேட்பதும் மற்றும் இசைக்கு நடனம் ஆடுவதும் ஒரு அற்புத மருத்துவம் 14. சரியாகச் சிந்திப்பதும் சரியான மனநிலையில் இருப்பதும் ஒரு மருத்துவம் 15. நல்ல நண்பர்களுடன் இருப்பது ஒரு நல்ல மருத்துவம் *இந்த மருந்துகளை போதுமான அளவு நாம் எடுத்துக் கொண்டால் மருந்தகங்களில் உள்ள மருந்துகள் நமக்கு அரிதாகவே தேவைப்படும்*.

நமக்கான நேரம் வரும்

படித்ததில் பிடித்தது இரண்டு மாம்பழங்களும் ஒரே மரத்தின் ஒரே கிளையில்தான் வளர்ந்துள்ளன. ஒன்று ஏற்கனவே பழுத்துவிட்டது, மற்றொன்று இன்னும் பழுக்கவில்லை. பழுக்க அதற்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது. இந்த மாம்பழங்கள் மூலம் இயற்கை நமக்கு ஒரு முக்கியமான பாடத்தை கற்பிக்கிறது. நமக்கு முன்னால் சிலர் வெற்றி பெற்றுவிடுவதால், நாம் தோல்வியடைந்தவர்கள் என்று அர்த்தமல்ல. நமது நேரம் இன்னும் வரவில்லை என்று அர்த்தம். எனவே, நாம் பொறுமையாக இருக்க வேண்டும், உற்சாகமாக இருக்க வேண்டும், விரக்திக்கு அடிபணியாமல் இருக்க வேண்டும். நம் சொந்த வெற்றியின் சந்தோஷத்தை அடைவதற்கு இன்னும் சிறிது காலம் தேவைப்படலாம் அவ்வளவுதான். நினைவில் கொள்ளுங்கள்! நமக்கான நேரம் வரும் - அதற்கு தேவை பொறுமை, விடாமுயற்சி மற்றும் நம்பிக்கை ...

அமோகமாக வாழும்

ஒவ்வொரு குடும்பத்துலயும் ஒரு நல்ல பிள்ளை ஒன்னு இருக்கும். அது இளிச்சவாயா இருக்கும். அது எல்லாத்துக்கும் எல்லாத்தையும் குடுத்துரும். கொடுக்கலைன்னாலும் கொடுக்க வச்சிருவாங்க. அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி எல்லாரும் நல்லா இருக்கட்டும்னு நினைக்கும். But அந்த ஒரு ஜீவன் மட்டும் அப்போதைக்கு நல்லாவே வாழாது. அதுகிட்ட இருந்து எடுத்துக்கிட்டவங்க யாரும் திருப்பி எதுவும் செய்ய மாட்டாங்க. பொழைக்க தெரிலனு comment வேற செய்வாங்க. அதெல்லாம் அது எதையும் கண்டுக்காது. கண்டிப்பா கஷ்டம் தான் படும். ஆனாலும் திரும்ப திரும்ப நல்லது தான் செய்யும். அது வாங்கற அடி யாராலும் வாங்கியிருக்க முடியாது. அவ்வளவு அடி மேலே அடி வாங்கிட்டு திரும்ப வந்து செஞ்சிட்டே இருக்கும் அந்த இளிச்ச வாய் ஜீவன் ‌‌. பிகு. இன்னொன்று சொல்ல மறந்துவிட்டேன். அது கெட்டு போகாது. அமோகமாக வாழும் ...

வாழ்ந்து பாருங்கள்

_ படித்ததில் பிடித்தது *வாடாமல்லிக்கு ஆயுள் அதிகம் ஆனால் வாசம் இல்லை. வாசமுள்ள மல்லிக்கோ ஆயுள் குறைவு.*_ _கொம்புல்ல மானுக்கோ வீரமில்லை._ _வீரமுள்ள கீரிக்கு கொம்பு இல்லை._ _கருங்குயிலுக்கு தோகை இல்லை_ _தோகை உள்ள_ _மயிலுக்கோ இனிய குரல் இல்லை._ _*நீருக்கு நிறம் இல்லை, நெருப்புக்கு ஈரம் இல்லை, கதிரவனுக்கு நிழல் இல்லை, காற்றுக்கு உருவமில்லை.*_ _*ஆக அது இருந்தால் இது இல்லை. இது இருந்தால் அது இல்லை.*_ _ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான் இறைவன்._ _ஒவ்வொன்றுக்கும் காரணம் வைத்தான்._ _எவர் வாழ்விலும் நிறைவில்லை, எவர் வாழ்விலும் குறைவுமில்லை._ _*இதைப் புரிந்து கொண்டு அமைதி கொள்ளுங்கள். வாழ்வு ஒரு முறை வாழ்ந்து பாருங்கள். இந்த பிரபஞ்சம் பரந்து விரிந்திருக்கிறது உங்களுக்காக.*_