தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......* 😁😁😁😁😁😁😁😁 *கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்து* _பல் விளக்கச்சொன்னபோது_ , *பட்டிக்காடு* என *இளித்த பற்கள்* *இன்று வேரற்று போனபோது*... *ஓடி நின்றேன்* *சர்வோதயா காதிகிராப்ட்*.. *பல்பொடி வாங்க*... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்... *வெந்தயமும் சிகைக்காயும்* *வடிதண்ணீரில் அரைத்து* *தேய்த்துக்குளி என்றபோது* , *பித்துக்குளிகள்* என *எள்ளி நகையாடி*... *சிக் ஷாம்புவை* *சிக்கென பிடித்தும்* *இன்று வெண் கேசம்* *வந்தபின்பு* *ஓடுகின்றேன்* _சீகைக்காய் வாங்க_...... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்... *பாசிப்பயறோ* *கடலை மாவோ* *அரைத்துக்குளி* என்ற போது , *லிரில்* , *லக்ஸ் சினிமா* *நட்சத்திரங்களின்* *அழகு சோப்* என *கைகாட்டிய* *கட்டிகளை* *எல்லாம் போட்டு*,, *தோள் சுருங்கி* *வயோதிகம் தெரிந்த பின்பு*.. *ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க*.... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்..... *இருமலோ தும்மலோ* *வந்தபோது*... *துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு போட்டு* *கசாயம் தந்தபோது* , *முகத்தைச் சுளித்து* *காஃப் சிரப் குடித்து* *தைராய்டு வரை சென்ற பின்பு* , *ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்செடி வளர்க்க*..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்..... *வயிற்று வலி என்றபோது* *வெறும் வயிற்றில்* *வெந்தயக்களியோ*,, *கற்றாழைச்சாறோ* *கொண்டு வந்து தந்தபோது*.. *சீறித் தூக்கி எறிந்து* , *ப்ருஃபென்னும்* *பெயின்கில்லரும்* *போட்டு* *கருப்பை பழுதடைந்த பின்பு* , _ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க_ ...... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்..... *நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி* *மணமாய் தந்தபோது* , *சன்ஃபிளவர் ஆயில்* *பார்* *முகம் காட்டும் தூய்மை* எனக்கூறி *முகத்தில் அறைய,* *பதிலுரைத்துவிட்டு*, *இன்று உடல் நோய்க்கு* *ஓடுகின்றேன் செக்கு நோக்கி* ..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்.... *மண்பானை சமையல்* *மண்பானை குளிர் நீரை* எல்லாம் மாற்றி விட்டு , *ஆர்வோ வாட்டர் என* *புழு பூச்சி கூட வாழத்தகுதியற்ற* *நீரைக்குடித்து குடித்து* *சவமான பின்பு ஓடுகின்றேன்* *மண்பானை வாங்க*..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்...... *படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து*.. *குருகுலக்கல்வியை* *கோடிக்கணக்கான ரூபாய்* *கல்வியாக்கி* , *கொல்லைப்புற துளசியின்* *வைத்தியம் மறந்து* , *மாடிகளில் குளீருட்டப்பட்ட அறைக்கு* *இலட்ச இலட்சமாய்க்கொட்டி* *நடைப்பிணமாக வாழும்* *வாழ்வில் எங்கே சுதந்திரம்* *ஏது சுகாதாரம்* என்று அலைகிறேன்..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள் ....... *மூத்தோர் சொல்லு *முது நெல்லிக்காயும்* *முன்னே கசக்கும்* , *பின்னே இனிக்கும்*