தேங்காய் பூ

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை, இதை சாப்பிட்டாலே போதும்.
தேங்காய் பூ தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும். நோய் எதிர்ப்பு சக்தி :- தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும் சக்தி தரும் :- மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ட் ரை பண்ணிப் பாருங்களேன். ஜீரண சக்திக்கு :- உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது சர்க்கரை வியாதிக்கு :- தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது, இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும். இதயம் :- இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும். தைராய்டு :- நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது. புற்று நோய் :- ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது. உடல் எடை :- உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடை குறையும். சிறு நீரகம் :- சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை பெறலாம். முதுமை :- தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

நெருக்கமான அந்த வாழ்வைத்தான்

வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில், ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன் ... இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது ... நம்ப மாட்டீர்கள் ... வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை ... அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து, வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடவும் தோன்றுவ தில்லை ... வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப் போனவனுக்கு, வீட்டிலிருக்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி ..! சோஃபாவும் அப்படித் தான் ! பீட்ஸா, பர்கர், தலப்பாக்கட்டின்னு என்றெல்லாம் விதவிதமான பேர்களில் பாஸ்ட் புட் உணவுகளை சொன்னாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் ! கல்யாண வீடோ அல்லது அசைவ விருந்துக்கே போய் மூக்கு முட்ட சாப்பிட்டாலும், வீட்ல வந்து கொஞ்சமா ஏதாவது சாப்பிட்டா தான் மனசே நிறையுது... வயிறும் நெகிழ்கிறது... வெளிய ஆடம்பர ஓட்டல்களில் அல்லது அரண்மனையிலே தூங்கினாலும், வீட்ல வந்து தரையில படுத்தாத் தான் உடல் மீண்டும் இயல்பு நிலைக்கே வர்றது, 8 GB RAM, Quardcore Processor, 128 GB in built Memory என்று அனைத்துமே பார்த்து பார்த்து, அதிக காசைப் போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsApp ல் மூழ்குவதை நினைத்து அவ்வப் போது, எனக்கு நானே சிரித்துக் கொள்வேன் ... ஆயிரம் பரிசோதனை களைச் செய்து பார்த்த பிறகு வாங்கி வைத்தேன் ... ஒரு தொலைக்காட்சி பெட்டி .. ஆனால் ... இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை .. வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம் ..! அதுவும் நியூஸ் மட்டுமே...? காலமாற்றம் .... இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது .. அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தாவும் கூட செலுத்தியாகி விட்டது ... எல்லாம் இருந்தும், எதையும் சரிவர பயன் பாட்டுக்கு கொண்டு வருவதில்லை ... பயன் படுத்துவதும் இல்லை ... வெத்து பந்தா... வரட்டு கெளரவம்ன்னு கூட சொல்லுவேன் ... அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கி விட்டு, அளவு சாப்பாடு சாப்பிடுபவனைப் போல, எதையும் அளவாகத்தான் பயன் படுத்தவே முடிகிறது ... எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தால்... எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது ... இது இப்ப கடந்து போகிற ஒரு Duplicate வாழ்க்கை என்று நன்றாகவே உணர முடிகிறது ... வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்ச நேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில், தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையணையைத்தான், கண்கள் தேடுகிறது ... இப்படியாக பல சுய பரிசோதனை களின் வாயிலாக சில விஷயங்கள் உணர்த்தின... உரைத்தன ... உணரவும் செய்தது .. இப்போது ஓரளவு பண வரவு, வசதிகளோடு இருந்தாலும், வாழ ஆசைப் படுவது என்னவோ ? ! நமது பழைய ஆரம்ப கால மனதுக்குப் பிடித்த நெருக்கமான அந்த வாழ்வைத்தான் ...! ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் .... நோ பீஸ் ஆப் மைண்ட் ... அனைத்தும் இருந்தும் வாழத்தெரியாமல் வாழ்கிறோம், என்று தெரியாமலே வாழ்வதும் நாமாகத்தான் இருக்க முடியும்.. இனிய உறவுகளே போகிற போக்கில் உங்களுக்கான வாழ்வை வாழ்ந்து விட்டு போங்கள் உற்ற உங்கள் உறவுகளோடு .......