மாவீரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....




பிறந்தான் தமிழாய்...பிரபாகரன்.!

என்னோடு சேர்ந்து நீங்களும்  வாழ்த்துங்கள் தோழர்களே........

ஒரு இக்கட்டான நிலையிலும் இன்று தமிழினம் துவண்டு போய்விடவில்லை!
தலைவன் கொடுத்த நெஞ்சுரம் இன்று இளையோர் மனத்தில் வேர் பாய்ச்சியிருக்கிறது!
தமிழீழத் தாயகம் உலகத்தமிழர்களின் தாகம் என்று முழங்குவோம்!
ஒன்றாய் வீழ்ந்தால் பல நூறாய் எழு எழுவோம்!
இப்பொழுதும் கிடைத்துவிடுவார் திடீரென்று தோன்றி உரையாற்றுவார் என்றுதானே அனைத்து தமிழுள்ளங்களும் ஏங்கிகொண்டிருக்கின்றனர்..


முன்பும் பலமுறை
தொலைந்து தொலைந்து
மீண்டும்
கிடைத்திருக்கிறாய் எங்களுக்கு.
இப்போ பலநாட்கள் ஆகியும்
பதுங்கு குழிகள் மூடப்பட்டும்
விதையுண்ட வீரர்களின்
நினைவுத் தூண்கள்
இடியுண்ட பின்னாலும்
இன்னமும் காணோமே உன்னை.
தோழா எங்கே நீ !

எல்லோரும் எதிர்ப்பார்க்கிறோமே,
இன்றைய பொழுதுக்குள் உன் குரல் கேட்டுவிட்டால்
போதுமென்றே .... செவிபசியுடன் காத்துக் கிடக்கிறோம்.
உரிமையுடன் அழைக்கிறேன்.. வாடா அண்ணா...........