அரசு அதிகாரிங்க எதோ பேசிட்ருந்தாங்களாம்


*ரெண்டு அரசு அதிகாரிங்க எதோ பேசிட்ருந்தாங்களாம்.. . . *அப்போ அங்க வந்த ஒரு பத்திரிக்கையாளர் எதப்பத்தி சீரியஸா டிஸ்கஸ் பண்ணிட்ருக்கிங்கனு கேட்டாராம்..? *அதுக்கு அவங்க ஆயிரம் விவசாயிகளையும் நயன்தாராவையும் கொல்ல போறதா அரசாங்கம் முடிவெடுத்துருக்குனு சொன்னாங்களாம்.. *அதகேட்ட பத்திரிக்கையாளர் நயன்தாராவ எதுக்கு கொல்லனும்னு கேட்டாராம்.. *அப்போ அந்த ரெண்டு அதிகாரிகள்ல ஒருத்தர் இன்னொருத்தர்கிட்ட சொன்னாராம்.. *நான் அப்பவே சொன்னேன்ல அந்த ஆயிரம் விவசாயிங்க சாகறதபத்தி இவனுங்க யாரும் கண்டுக்க மாட்டாங்கனு. *சிரிக்க மட்டுமல்ல இக்கதை சிந்திக்கவும்*. . .படித்ததில் பிடித்தது .