ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?...


ஆவணங்கள் தொலைந்தால்... எப்படி திரும்பப் பெறுவது?
 
தகவல்கள்
எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் சில நேரங்களில் ரேஷன் கார்டுடிரைவிங் லைசென்ஸ்கிரயப் பத்திரம்இன்ஷூரன்ஸ்பாலிசி என ஏதாவது ஒரு முக்கியமான ஆவணத்தைத் தொலைத்துவிட்டு பலரும் தவிப்பதை நாம் பார்க்கலாம்அப்படி தொலைந்துபோனால் அல்லது மழையில் நனைந்து கிழிந்து அழிந்து போனால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி என்பதை இங்கேதெரிந்துகொள்ளலாம்.
இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்றுபுகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம்செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும்இது தவிரகவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ்தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறைவிண்ணப்பம் அளித்த     15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.  
நடைமுறைநகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள்அதில் ஒருஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடுஆவணங்களைஇணைத்து தர வேண்டும்.  
மதிப்பெண் பட்டியல்!
யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல்பள்ளி மாற்றுச் சான்றிதழ்கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?  
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்புரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.  
கால வரையறைவிண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.
நடைமுறைகாவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ்வாங்கியபிறகுமுன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்துதாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும்அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்டகல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும்இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித்தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பவேண்டும்பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.
ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள்வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.  
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை  
எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.
கால வரையறைவிண்ணப்பம் அளித்த  45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.
நடைமுறை:  சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து,அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும்அவர்களின் விசாரணைக்குப் பிறகுபுது குடும்ப அட்டை  அனுப்பி வைக்கப்படும்.
டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).
கால வரையறைவிண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.
நடைமுறைகாவல் துறையில் புகார் தெரிவித்துஅவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப்போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.
பான் கார்டு!
யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டுஅடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.
எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறைவிண்ணப்பித்தப் பிறகு      45 நாட்கள்.
நடைமுறைபான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக்குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.  
பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?
சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ்பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.  
எவ்வளவு கட்டணம்தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லைஆனால்பங்குகளின் சந்தைமதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.
கால வரையறைவிண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.
நடைமுறைமுதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும்இதன் அடிப்படையில் காவல்துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும்பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும்தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும்சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில்விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.
கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம்பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம்யாரிடமும் இருந்து ஆட்சேபனைவரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழிசர்வே எண் விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்ஆவணக் கட்டணம் 100 ரூபாய்இது தவிரகூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20ரூபாய்.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறைகிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துஅவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில்விளம்பரம் செய்ய வேண்டும்இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.
டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?
சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.
கால வரையறைவங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.
நடைமுறைடெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்குதகவல் தெரிவித்துஅதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும்.அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறுகோர வேண்டும்.
மனைப் பட்டா!
யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.
கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.
நடைமுறைமுதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும்அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாகஅதிகாரி (வி...), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்இதன் அடிப்படையில் தாசில்தார்அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.  

பேரிச்சம்பழம்



பழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ஒன்றான பேரிச்சம்பழமும். சிறியவர் முதல் பெரியவர் வரை அன்றாடம் உணவு உண்டபின் ஒரு வேளையாவது 2 அல்லது 3 பேரிச்சம்பழங்களைத் தொடர்ந்து சாப்பிட்டால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். 
The image “http://www.koodal.com/contents_koodal/health/images/sigha.jpg” cannot be displayed, because it contains errors.
அரபுநாடுகளில் உற்பத்தியாகும் பேரிச்சை பழங்கள் வெவ்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன . தடித்த தோலுடன் காணப்படும் பேரிச்சம் பழம் நல்ல இனிப்பாகவும் இருக்கும் . பழத்துக்கு உள்ளே விதை இருக்கும் . அதனை சாப்பிட கூடாது . தேனுடன் கலந்து பேரிச்சம் பழத்தை சாப்பிடால் உடம்புக்கு நல்லது . துப்பரவான இடத்தில் வைத்து ஈ , பூச்சிகள் தீண்டாத வண்ணம் வைத்து பாதுகாக்கலாம் . 
http://www.all-creatures.org/recipes/images/i-dates-barhi.jpg
நீரில் கூடுதலான நேரம் வைத்து பேரிச்சம் பழத்தை கழுவக் கூடாது . தினமும் இரவில் பேரிச்சம்பழத்தை பாலில் வேகவைத்து சாப்பிடுங்கள். அல்லது கொய்யாப்பழம் சாப்பிட்டு பால் அருந்துங்கள். மலச்சிக்கல் உடனே தீரும் என்கிறார்கள் . மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.  இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும். பேரிச்சம்பழம் இரண்டை மதியம் தேனில் ஊற வைத்து மறுநாள் காலையில் உணவுக்கு முன் சாப்பிட்டு வந்தால் இதயவலி குணமாகும்.
http://2.bp.blogspot.com/_TWmjEu4Rs8E/TRG61cBhmxI/AAAAAAAABG8/a0q-6Anuy6I/s1600/dates+1.jpg

உடலின் மேலுள்ள தோல். கண் சம்பந்தமான கோளாறுகள் வராது. இருந்தாலும் குணமாகும். எந்த வகையான தொற்று நோயும் அணுகாது. சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாகும். தாது விருத்தியும், போக சக்தி குறையுடையவர்கள் பேரிச்சம்பழத்தைத் தேனில் ஊறவைத்து நாள்தோறும் சில துண்டுகளைச் சாப்பிட்டு பால் அருந்தினால் நல்ல குணம் தெரியும். இருமல், கபம் போன்ற கோளாறுகளுக்குப் பேரிச்சம்பழத்தைப் பாலில் வேகவைத்து உண்டால் நல்ல பலனுண்டு. எல்லோரும் பயனடையலாம் . கிழமைக்கு ஒருதடவை சாப்பிட்டு பாருங்கள் எல்லோரும் .
http://www.sheppardsoftware.com/images/Middle%20East/factfile/411px-Dates_on_date_palm.jpg
சாப்பாட்டுக்கு பின்பு எல்லோரும் பேரிச்சை பழம் சாப்பிடுங்கள் . பயன் அடையுங்கள் . உடல் நலத்துக்கு மிகவும் நல்லது . எல்லோருக்கும் உகந்தது . பேரிச்சம் பழத்தை வாங்கி ஒருதடவை சாப்பிட்டு பாருங்கள் . சிலர் இந்த பழத்தை சாப்பிடுவதில்லை . ஏனெனில் , துப்பரவாக இருக்காது , நாள்ப்பட்டது , வண்டுகள் வருகிறது என்று சிலர் இந்த பழத்தை சாப்பிடுவதில்லையாம் . அவர்களுக்கு நான் என்ன கூறுகிறேன் என்றால் நீங்கள் பொதி செய்யப்பட்ட திகதியை பார்த்து வாங்குங்கள் . 
http://www.commubiz.com/images/Products/6291104290020.jpg
பைக்கற்றுக்குள் அடைத்து வைக்கப்பட்ட பேரிச்சம் பழத்தை வாங்குங்கள் . பேரிச்சம் பழத்தில் செய்த கேக் கூட கடைகளில் இருக்கிறது . மிகவும் ருசியானதாக இருக்கும் . எனக்கு ரொம்பவும் பிடிக்கும்


பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கும் வாழைமரம்!


இறைவழிபாடில் வாழை ஒரு முக்கிய இடம் பெறுகிறது. வாழைப்பழத்தை வைத்துத்தான் இறைவனுக்கு நைவேதியம் செய்கிறார்கள். வாழை மரத்தை தெய்வமாக வணங்குகிறார்கள். வாழையை பெண்ணாக பாவிக்கிறார்கள். வாழ வைக்கும் மரமாக நினைக்கிறார்கள். வடக்கு நோக்கி குலை தள்ளினால் அந்த வீடு சிறக்கும். தெற்கு நோக்கி குலை தள்ளினால் அழிவு உண்டாகும். கிழக்கு நோக்கி குலை தள்ளினால் பதவி கிடைக்கும், மேற்கு நோக்கி குலை தளளினால் அரச பயம் உண்டாகும். இதுபோன்று பல மொழிகள் வாழை மரத்திற்கு உண்டு. வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது. வாழையின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் மக்களுக்கு பயன்படுகிறது. பூ, இலை, காய், கனி, தண்டு, நார்ப் பகுதி என்ற எதுவும் வீணாகாது. இத்தகைய வாழை மரத்தை கோயில் விழாக்களில் தோரணம் கட்டினாலும் அல்லது கோயில்களில் வாழைக்கன்று வைத்தால் வீட்டில் காணாமல் போனவர்கள் அல்லது பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சைன‌ஸ்க்கு ‌தீ‌ர்வுகாணு‌ம் மூ‌லிகை வை‌த்‌திய‌ம்!



சைனஸுக்காக எனக்குத்தெரிந்த காது- மூக்கு- தொண்டை மருத்துவரிடம் சென்றபோது ஆபரேஷன் பண்ணவேண்டும் என்றார். வீடு திரும்பிய நான், ஏற்கனவே இயற்கை வைத்தியம் பற்றி அறிந்து வைத்திருந்ததால் எனக்கு நானே சுயபரிசோதனை செ‌ய்து கொண்டேன். அதாவது, நொச்சி இலையை பறித்து வந்து அதனுடன் சிறிது நல்லெண்ணெ‌ய் கலந்து அடுப்பில் நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைத்தேன். சூடு ஓரளவு ஆறியதும் பொறுக்கும்சூட்டில் உச்சந்தலையில் தே‌ய்த்து அரைமணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்தேன். எண்ணெ‌ய் பிசுக்கு போவதற்காக சீயக்கா‌ய் தே‌ய்த்தேன். வாரத்துக்கு இரண்டுநா‌ள் வீதம் சுமார் ஒன்றரை மாதம் செ‌ய்தேன். மூக்கடைப்பு மெல்லமெல்ல விலகி சைனஸ் தொந்தரவிலிருந்து மீண்டேன். ஆனாலும் இப்போதும்கூட தயிர், மோர், குளிர்ந்த பானங்க‌ள் சாப்பிட்டால் கொஞ்சம் மூக்கடைப்பு ஏற்படும். அப்போது கொஞ்சம் வெந்நீர் குடித்தால் நிவாரணம் கிடைக்கும்.

வாழ்க்கை...!




வாழ்க்கைப் புத்தகத்தை
புரட்டிப் பார்க்கையில்
வாழ்ந்த பக்கங்கள்
வாசம் மிகுந்தவை
வலிகளும் நிறைந்தவை!

பாசமுள்ள உறவுகள்
வேசமுள்ள நெஞ்சங்கள்
தோள் கொடுக்கும் உறவுகள்
காலை வாரும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

கண்ட இடத்திலே கைகுலுக்கும்
போலி உறவுகள்
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.....!

வாழ்க்கை அா்த்தத்தோடு
வாழும் உறவுகள்
எப்படியும் வாழலாம்
என்றெண்ணும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

பாசத்தை விலை பேசி
பங்கு போடும் உறவுகள்
வறுமையிலும் வாழ்ந்து காட்ட
போராடும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்!

துவழ்ந்து போனால்
தூக்கி வீசும் உறவுகள்
நிமிர்ந்து நிற்கையில்
மார்தட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்......!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் உறவுகள்
தன்னை விட உயர்ந்திட்டால்
பழமை குத்திக்காட்டும் நெஞ்சங்கள்
இப்படியே ஏராளம்.......!

வாழ்க்கைப் புத்தகத்திற்கு
பக்கங்கள் இரண்டு
நல்லதும் கெட்டதும்
நானிலத்தில் உண்டு
புரிந்து கொண்டால்
சொர்க்கமே நமக்கு....!

தை பிறந்தால் வழி பிறக்கும் – என்ன காரணம் தெரியுமா ?


தை மாதம் நாளை பிறக்கிறது, தை மாதத்தில் இருந்து உத்ராயண புண்ய காலம் தொடங்குகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் அதற்கான காரணம் தெரியுமா?


'உத்தர்' என்றால் வடமொழியில் வடக்கு என்றும் 'அயனம்' என்றால் வழி என்றும் பொருளாகும். சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும். நம்முடைய ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகும். உத்தராயணம், தட்சிணாயனம் ஆகிய இரு அயன காலங்களில் உத்தராயணம் மிகவும் புனிதமான காலமாக போற்றப்படுகிறது.


மகாபாரதத்தில் பீஷ்மர் மோட்சம் 


பீஷ்மர் தனது தந்தையாகிய சந்தனுவிடமிருந்து தான் விரும்பினால் மட்டுமே சாகக் கூடிய 'இச்சா மிருத்யு' என்னும் வரத்தை பெற்றிருந்தார். அவர் அனுமதி கொடுக்காவிட்டால் மரணம் கூட அவரை அணுக முடியாது. பாரதப் போரில் பீஷ்மர் உடல் முழுவதும் அர்ஜுனன் எய்த அம்புகள் ஒரு அங்குலம் இடை வெளிகூட இல்லாமல் பாய்ந்திருக்க, கீழே சாய்ந்த பீஷ்மர் உடனே மரணம் அடையவில்லை. தான் பெற்றிருந்த வரத்தை உபயோகப் படுத்தி மரணத்தை உடனே தன்னை நெருங்க விடாது தடுத்திருந்தார். ஏனென்றால் பாரதப்போர் மார்கழி மாதம் தட்சிணாயன காலத்தில் நடைபெற்றது. இக்காலத்தில் மரணம் அடைந்தால் மறுபிறவி உண்டு என்பதால், அம்பு படுக்கையில் இரத்தம் சொட்டச் சொட்ட உத்தராயண காலம் ஆரம்பிக்கும் வரை தனது உயிரை விடாமல் நிறுத்தி வைத்து, உத்தராயண காலம் தை மாதம் 1 -ஆம் தேதி ஆரம்பமானவுடன் மரணமடைந்தார். இதிலிருந்தே இந்த உத்தராயண காலம் எவ்வளவு புனிதம் வாய்ந்தது என்பது தெளிவாகும். தை மாதம் 1 -ஆம் தேதியன்று உத்தராயணம் ஆரம்பிப்பதைதான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


அறுவடை காலம் முடிந்ததும்


இந்த பழமொழிக்கு மற்றுமொரு காரணமும் கூறப்படுகிறது. வயல் வெளியில் தை மாதத்தில் கதிர்கள் அறுவடைக்குத் தயாராகி, தலை சாய்த்து, வரப்புகளின் மேல் படர்ந்து, நடந்து செல்ல வழி இல்லாமல், பாதைகளை மறைத்து இருக்கும்.தையில் அறுவடை முடிந்த பிறகே மேற்கொண்டு தொடர்ந்து செல்ல வழி பிறக்கும். மேலும் அறுவடை முடிந்த பின்புதான் கடனில் மூழ்கி இருக்கும் விவசாயின் வாழ்க்கையிலும் நல்ல வழி பிறக்கும் என்பதையே இவ்வாறு கூறியுள்ளனர்

குட்டி தேவதைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து...!



குட்டி தேவதை ! எந்தன்
குட்டி தேவதை !

எட்டி எட்டிப் பார்த்திடும் !
கட்டி முத்தம் தந்திடும் !

பட்டுப் போல படர்ந்திடும் !

சின்னப் பாதம் தொட்டிட்டால்
கன்னங் குழிய சிரித்திடும் !

குறும்புப் பார்வை பார்த்திடும் !
கரும்பு போல சுவைத்திடும் ! 
குட்டி தேவதை இதே போல எந்நாளும் சந்தோசமாய் வாழ வேண்டும் என வாழ்த்துகிறேன்..
என்  இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...!