"பிளாக் டீ' ...!


பால் சேர்க்காத "பிளாக் டீ' அருந்துவது இதயநோய்களிலிருந்து காப்பாற்றும் என ஆய்வுத் தகவல் தெரிவித்துள்ளது.
இத்தாலியின் லாகிலா பல்கலைக்கழகம், லிப்டன் தேயிலை நிறுவன ஆதரவுடன் பிளாக் டீ அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வு சுமார் 33 வயதிலிருக்கும் ஆரோக்கியமான 19 ஆண்களிடம் நடத்தப்பட்டது. ஒவ்வொருவருக்கும் நாளொன்றுக்கு 5 முறை பால் சேர்க்காத நறுமணப்பொருள்கள் சேர்க்கப்பட்ட தேநீர் கொடுக்கப்பட்டது. ஒருவாரம் இதேபோல் கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டவர்கள் நாளடைவில் நறுமணப் பொருள்கள் அடங்கிய உணவு, பானங்களை ஒதுக்கிவிட்டு பால் சேர்க்காத தேநீரையே விரும்பி அருந்துகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. பால் சேர்க்காத தேநீர் அருந்துவது ரத்த அழுத்தத்தைக் குறைத்து ரத்த நாளங்களின் மீள்தன்மையை அதிகரிக்கின்றன.
தினமும் ஒருவேளை பால் சேர்க்காத தேநீர் அருந்தினால் இதயநாளங்கள் வலுப்படும் எனப் பேராசிரியர் கிலாடியோ ஃபெரி தெரிவித்தார். உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக மக்களால் அருந்துவது தேநீர் தான் என்பது குறிப்பிடத்தக்கது

வரம் வேண்டும்....!



இந்த‌ உலகத்தில் எனக்கென்று ஓர் தேசம் வேண்டும்.

அதில் நான் மட்டுமே ராஜாவாக இருக்க வேண்டும்.
ஆழ் கடலின் மேல் நடந்து செல்ல இரண்டடி பாதை வேண்டும்.
துன்பத்தில் தோல் சாய்ந்து கொள்ள மனைவி என்ற பெயரில் தோழி வேண்டும்.
கண்ணீரைத் துடைக்கும் கைக்குட்டையாக நட்பின் கரங்கள் வேண்டும்.
கடந்த கால வாழ்க்கையை மீண்டும் ஒரு முறை திருத்தி வாழ வேண்டும்.
துணிகளை போலவே மனித மனங்களையும் சலவை செய்ய வேண்டும்.
அன்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடும் பட்டியலில் என் பெயரும் இருக்க வேண்டும்.
ரவி வர்மாவின் ஓவியம் கூட உயிர் பெற்று என்னுடன் நட்புறவாட வேண்டும்.
கடவுள்கள் அனைவரும் வருடத்திற்கு ஒரு முறை மனிதனாக மாறும் சாபம் பெற்று மக்களின் துயர் அறிய வேண்டும்.
காதல் என்ற பெயரில் துரோகத்தை பரப்பும் தோழிகள் மாறும் நிலை வர வேண்டும்.
இந்த உலகத்தை புரிந்து கொள்ள இன்னும் ஓர் இதயம் வேண்டும்.
காதலைப் பற்றி தெரிந்து கொள்ள ஓர் மிகப்பெரிய காதல் தோல்வி வேண்டும்.
எந்தன் நிழல் கூட உறுப் பெற்று எனக்கு நண்பனாக வரும் நிலை வரவேண்டும்.
நினைத்தவுடன் மரணம், விரும்பியவுடன் ஜனனம் கிடைக்கும் உன்னத நிலை வேண்டும்.
அழியாத கல்வியையும், குறையாத செல்வத்தையும் கொடுக்கும் விலை நிலம் வேண்டும்.
காணி நிலம் வேண்டும் என் பாடிய பாட்டுடைத் தலைவன் பாரதி எனக்கு குருவாக வரும் வரம் வேண்டும்.
எனது கண்ணீரை மட்டுமல்ல எனது இதயத்தில் ஏற்பட்ட வலிகளையும் துடைத்தெரிய வேண்டும்.
சிலந்தியின் கூட்டில் சில நாள் சிறையிருக்க ஜில்லென்ற வரம் ஒன்று வேண்டும்.
பறவையின் கூட்டில் பன்னிரு இரவு படுத்துறங்க பஞ்சு மெத்தை வேண்டும்.
துன்பம் மொத்தமாக தொடர்ந்து வந்தாலும் சந்தோசம் தவணை முறையிலாவது கிடைக்கும் நாள் வர வேண்டும்.
நெஞ்சத்தை கிழித்து இதயத்தை பிடுங்கி அதன் வலிகளை எந்தன் பட்டு விரல்களால் தடவி கொடுக்கும் மாபெரும் வரம் வேண்டும்..
பூ, காய், கனி, செடி, கொடி, மரம் இவையனைத்தும் பேச வாய் முளைத்து என்னுடன் பேச வேண்டும்.
மான், மயில், குயில், புறா, நாய் இவையனைத்தும் எனக்கு நட்புறவாட வேண்டும்.
மீண்டும் மழலையாக மாறும் வரம் வேண்டும்.
பொய்யொன்று பேசாத உலகம் வேண்டும்.
உதவி என்றால் உயிரையும் கொடுக்கும் உறவுகள் வேண்டும்.
நிலவினை கையில் பிடித்து அதனுடன் கவிதைகள் பேசும் தருணங்கள் வேண்டும்.
நட்புக்கு இலக்கணம் நான் என்று என் பெயரும் பொன்னேட்டில் ஏற வேண்டும்.
சொர்க்கமோ நரகமோ எங்கிருந்தாலும் அம்மா நான் நலமாக இருக்கிறேன் என்று தகவல்கள் அனுப்ப கருவிகள் வேண்டும்.
பென்சில் கோடுகளைப் போல என் துன்பத்தையும் துடைத்து எடுக்க ஒரு அழிப்பான் வேண்டும்.
எனக்கு சந்தோஷம் கூட மலிவு விலையில் கடைகளில் கிடைக்கும் நாள் வர வேண்டும்.
நம்பிகைகுரிய நட்புகள் வேண்டும்.
சாதிகள் இல்லாத சமுதாயம் வேண்டும்.
சாக்கடை கலக்காத அரசியல் வேண்டும்.
மரண தேவன் கூட மக்களின் அனுமதி பெற்று உயிரை எடுக்கும் நிலை வர வேண்டும்.
எப்போது எல்லாம் இந்த உலகம் பிடிக்கவில்லையோ
அப்போது எல்லாம் மீண்டும் தாயின் கருவறை
உள்ளே சென்று படுத்துக் கொள்ளும் உன்னத வரம் வேண்டும்.
தலையணைக் கூட தாய் மடியாக மாற வேண்டும்.
மனிதலோகத்திற்கும் மரணலோகத்திற்கும்
சென்று வர ஒரு நூறடி பாதை வேண்டும்.
இவையனைத்தும் உண்மையாக நடக்கும் என்றால்
இன்னொரு பிறவி நான் பிறக்க வேண்டும்.

அப்போதும் கூட எனது நட்புகள் தான்
எந்தன் சுவாசக் காற்றாக இருக்க வேண்டும்..........
உன் இதயக் கோவிலில் நான் குடியிருக்க வேண்டும்.

கோயிலில் திருமணம் செய்வதே சிறப்பு!


இன்றும் பலர் கோயில்களில் திருமணங்கள் செய்கிறார்கள். மிகப்பெரிய பணக்காரர்கள் கூட கோயில் திருமணங்கள் செய்வதைப் பார்க்கிறோம். குறிப்பாக திருப்பதியில் திருமணங்கள் செய்வது அதிகம். அங்கே மலை மேல் மண்டபங்கள் நிறைய இதற்காகவே இருக்கிறது. திருத்தணியிலும் இதுபோல மண்டபங்கள் இருக்கிறது. கோயில் சார்ந்த மண்டபங்கள். கோயிலிற்கு உள்ளே சாமி முன்னிலையில் கொடி மரத்திற்கு அருகில் தாலியை கட்டிக்கிட்டு, சாமியை தரிசனம் செய்துவிட்டு, பிறகு கோயிலிருற்கு அருகில் இருக்கும் மண்டபங்களில் வரவேற்பெல்லாம் வைத்துக் கொள்வதும் உண்டு.

ஆலயங்கள் அதற்கென்ற ஆகம விதிப்படி உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். சிவன் என்று சொன்னால், அதிகார நந்தி, ஆத்மார்த்த நந்தி என்று நந்தியிலேயே ஐந்து வகைகள் உண்டு. கடைசியாக இருக்கிற நந்தி ரகசிய நந்தி. அதனால்தான் அவருடைய காதில் எல்லோரும் போய் சொல்விட்டு வருவது. ஏனென்றால் அவர் அந்த விஷயங்களை வைத்துக் கொண்டு, நேரம் பார்த்து சிவனிடம் சொல்வார் என்று.

இந்த மாதிரி பெரிய ஆன்மீக அடிப்படையில் உருவானது. அந்தந்த இடத்தில் அந்தந்த அவதாரங்கள் இருந்தால் அந்த இடத்திற்குப் போய்வரும் போது நமக்கு ஒரு சக்தி கிடைக்கும். ஒரு உணர்வு பிறக்கும். நம்மை அறியாமலேயே ஒரு உற்சாகம் உண்டாகும் என்பது போன்று செய்து வைத்திருக்கிறார்கள். இதுபோன்ற ஆகம விதிப்படி உருவாக்கப்பட்ட ஆலயங்களில் திருமணங்கள் செய்யும் போது வேறு ஏதாவது தோஷங்கள் இருந்தாலும் அவைகள் நீங்கும்.

 திருமண மண்டபங்களை எடுத்துக் கொண்டால், எல்லா மண்டபங்களும் வாஸ்து பிரகாரம் உருவாக்கப்பட்ட மண்டபங்கள் அல்ல.

(ஏற்கனவே கூட நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மண்டபம் இருக்கும் இடத்தில் முன்பு என்ன இருந்து என்று நமக்குத் தெரியாது என்று.)

ஆமாம், அங்கு ஒரு சிறிய இனம் கூட போராடியிருக்கலாம்.

ஸ்ரீரங்கம் கல்யாண மண்டபத்தில் பற்றி எரிந்ததையெல்லாம் நான் சீரியஸாக எடுத்துப் பார்த்தேன். அதிலெல்லாம் பார்த்தீர்களென்றால் வாஸ்துப்படி எதுவும் கிடையாது. வடக்கு, வடகிழக்கு திசையெல்லாம் ‌திற‌ப்பே இ‌ல்லாம‌ல் மூடியிருந்தது. இதையெல்லாம் விட ஆயிரங்கால் மண்டபமெல்லாம் திறந்தவெளியாகத்தான் இருக்கும். இறைவனுக்கு அருகில் இருக்கும். அப்பொழுது அங்கு ஒருவித உணர்வு பிறக்கும்.
எனவே கோயிலில் திருமணம் செய்வதே சிறப்பு