நெருக்கமான அந்த வாழ்வைத்தான்

வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில், ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன் ... இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது ... நம்ப மாட்டீர்கள் ... வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை ... அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து, வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடவும் தோன்றுவ தில்லை ... வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப் போனவனுக்கு, வீட்டிலிருக்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி ..! சோஃபாவும் அப்படித் தான் ! பீட்ஸா, பர்கர், தலப்பாக்கட்டின்னு என்றெல்லாம் விதவிதமான பேர்களில் பாஸ்ட் புட் உணவுகளை சொன்னாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் ! கல்யாண வீடோ அல்லது அசைவ விருந்துக்கே போய் மூக்கு முட்ட சாப்பிட்டாலும், வீட்ல வந்து கொஞ்சமா ஏதாவது சாப்பிட்டா தான் மனசே நிறையுது... வயிறும் நெகிழ்கிறது... வெளிய ஆடம்பர ஓட்டல்களில் அல்லது அரண்மனையிலே தூங்கினாலும், வீட்ல வந்து தரையில படுத்தாத் தான் உடல் மீண்டும் இயல்பு நிலைக்கே வர்றது, 8 GB RAM, Quardcore Processor, 128 GB in built Memory என்று அனைத்துமே பார்த்து பார்த்து, அதிக காசைப் போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsApp ல் மூழ்குவதை நினைத்து அவ்வப் போது, எனக்கு நானே சிரித்துக் கொள்வேன் ... ஆயிரம் பரிசோதனை களைச் செய்து பார்த்த பிறகு வாங்கி வைத்தேன் ... ஒரு தொலைக்காட்சி பெட்டி .. ஆனால் ... இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை .. வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம் ..! அதுவும் நியூஸ் மட்டுமே...? காலமாற்றம் .... இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது .. அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தாவும் கூட செலுத்தியாகி விட்டது ... எல்லாம் இருந்தும், எதையும் சரிவர பயன் பாட்டுக்கு கொண்டு வருவதில்லை ... பயன் படுத்துவதும் இல்லை ... வெத்து பந்தா... வரட்டு கெளரவம்ன்னு கூட சொல்லுவேன் ... அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கி விட்டு, அளவு சாப்பாடு சாப்பிடுபவனைப் போல, எதையும் அளவாகத்தான் பயன் படுத்தவே முடிகிறது ... எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தால்... எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது ... இது இப்ப கடந்து போகிற ஒரு Duplicate வாழ்க்கை என்று நன்றாகவே உணர முடிகிறது ... வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்ச நேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில், தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையணையைத்தான், கண்கள் தேடுகிறது ... இப்படியாக பல சுய பரிசோதனை களின் வாயிலாக சில விஷயங்கள் உணர்த்தின... உரைத்தன ... உணரவும் செய்தது .. இப்போது ஓரளவு பண வரவு, வசதிகளோடு இருந்தாலும், வாழ ஆசைப் படுவது என்னவோ ? ! நமது பழைய ஆரம்ப கால மனதுக்குப் பிடித்த நெருக்கமான அந்த வாழ்வைத்தான் ...! ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் .... நோ பீஸ் ஆப் மைண்ட் ... அனைத்தும் இருந்தும் வாழத்தெரியாமல் வாழ்கிறோம், என்று தெரியாமலே வாழ்வதும் நாமாகத்தான் இருக்க முடியும்.. இனிய உறவுகளே போகிற போக்கில் உங்களுக்கான வாழ்வை வாழ்ந்து விட்டு போங்கள் உற்ற உங்கள் உறவுகளோடு .......