காலம் முடிவு!!!

*யாரெல்லாம் நம்மோடு இருப்பார்கள், விலகுவார்கள் என்று காலம் முடிவு செய்வதில்லை. அவரவர்களின் வார்த்தையும், நடத்தையும் தான் முடிவு செய்கிறது.* *வாய் தவறி விழும் பேச்சுக்கள். கை தவறி விழும் கண்ணாடியை விட கூர்மையானது. யாரிடம் பேசுகிறோம் என்பதை விட என்ன பேசுகிறோம் என்பதை அறிந்து கொண்டு பேசுங்கள்.* *நிம்மதியுடன் வாழ்கிறேன் என யாராலும் எளிதில் சொல்லப்படுவதில்லை. வாழ்க்கை அவ்வளவு எளிதில் நிம்மதியை யாருக்கும் தந்து விடுவதில்லை.* *மற்றவர் தவறைக் கவனித்துக்கொண்டே இருப்பவர்கள். தன் தவறுகளை வளர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.* *பணம் இருந்தால் நீங்கள் உயர்ந்தவர் நடித்தால் நீங்கள் நல்லவன். உண்மை பேசினால் பைத்தியக்காரன். அன்பு காட்டினால் ஏமாளி. எடுத்துச் சொன்னால் கோமாளி.* *இறைவன் தனக்குப் பிடித்தவர்களுக்கே அதிகப் பொறுப்புகளை கொடுத்து. அதன் பொருட்டு சோதனைகளை ஏற்படுத்தி பக்குவத்தையும், நிதானத்தையும் பரிசளிக்க விரும்புகிறான்.* *நிலவை தூரத்தில் இருந்து ரசிப்பதை போல சில உறவுகளையும் தூரத்திலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ள வேண்டும். சில வலிகள் இல்லாமல் இருக்கும்.* *தன்னுடைய செயலும் தன்னுடைய வார்த்தைகளும் மட்டும்தான் சரியன்று வாதாடுபவர்கள் மத்தியில் அமைதி மட்டும் உங்கள் ஆயுதமாக வைத்துக்கொள்ளுங்கள்.* *அவர்களுக்கு புரியவைக்க வரும் காலம் ஒன்று உள்ளது. சிந்தித்து செயல்படுங்கள். இதுவும் கடந்து போகும்.* *நிலையென்று ஒன்றுமில்லை இவ்வுலகில். ஒவ்வொரு சோகமும், துன்பமும் வாழ்க்கையில் நல்ல பாடத்தை கற்று தரவே வருகின்றது.* *யாரும் உங்கள் கண்ணீரை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் கவலைகளை பார்ப்பதில்லை. யாரும் உங்கள் வலிகளை பார்ப்பதில்லை. ஆனால் எல்லோரும் உங்கள் தவறை மட்டும் பார்ப்பார்கள்.* *மனிதனும் வாழை மரமும் ஒன்று தான். தேவைப்படும் வரை வைத்திருப்பார்கள். தேவை முடிந்தவுடன் வெட்டி வீசி விடுவார்கள்.*

தேங்காய் பூ

தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை, இதை சாப்பிட்டாலே போதும்.
தேங்காய் பூ தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது. இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும். நோய் எதிர்ப்பு சக்தி :- தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும் சக்தி தரும் :- மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா? ட் ரை பண்ணிப் பாருங்களேன். ஜீரண சக்திக்கு :- உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது சர்க்கரை வியாதிக்கு :- தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது, இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும். இதயம் :- இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும். தைராய்டு :- நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது. புற்று நோய் :- ஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது. உடல் எடை :- உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடை குறையும். சிறு நீரகம் :- சிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறுநீரகத்தை பெறலாம். முதுமை :- தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

நெருக்கமான அந்த வாழ்வைத்தான்

வீட்டில் பிரிட்ஜ் இல்லாத நாட்களில், ஐஸ் வாட்டருக்காக ஏங்கி இருக்கிறேன் ... இப்போது என் வீட்டிலும் ஏஸி, பிரிட்ஜ் இருக்கிறது ... நம்ப மாட்டீர்கள் ... வாங்கிய நாளிலிருந்து, இன்று வரை பிரிட்ஜில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை ... அங்குமிங்கும் பார்த்துப் பார்த்து, வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடவும் தோன்றுவ தில்லை ... வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப் போனவனுக்கு, வீட்டிலிருக்கும் போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி ..! சோஃபாவும் அப்படித் தான் ! பீட்ஸா, பர்கர், தலப்பாக்கட்டின்னு என்றெல்லாம் விதவிதமான பேர்களில் பாஸ்ட் புட் உணவுகளை சொன்னாலும் கூட, என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன் ! கல்யாண வீடோ அல்லது அசைவ விருந்துக்கே போய் மூக்கு முட்ட சாப்பிட்டாலும், வீட்ல வந்து கொஞ்சமா ஏதாவது சாப்பிட்டா தான் மனசே நிறையுது... வயிறும் நெகிழ்கிறது... வெளிய ஆடம்பர ஓட்டல்களில் அல்லது அரண்மனையிலே தூங்கினாலும், வீட்ல வந்து தரையில படுத்தாத் தான் உடல் மீண்டும் இயல்பு நிலைக்கே வர்றது, 8 GB RAM, Quardcore Processor, 128 GB in built Memory என்று அனைத்துமே பார்த்து பார்த்து, அதிக காசைப் போட்டு வாங்கிய மொபைல் போனில் வெறுமனே Facebook, WhatsApp ல் மூழ்குவதை நினைத்து அவ்வப் போது, எனக்கு நானே சிரித்துக் கொள்வேன் ... ஆயிரம் பரிசோதனை களைச் செய்து பார்த்த பிறகு வாங்கி வைத்தேன் ... ஒரு தொலைக்காட்சி பெட்டி .. ஆனால் ... இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு, இல்லை .. வாரத்திற்கு ஒரு அரை மணிநேரம் டிவி பார்த்தாலே அது பெரிய விஷயம் ..! அதுவும் நியூஸ் மட்டுமே...? காலமாற்றம் .... இப்போது கையிலேயே உலகத்தை காணும் வசதி இருக்கிறது .. அதற்காக ஒரு வருடத்திற்கு சந்தாவும் கூட செலுத்தியாகி விட்டது ... எல்லாம் இருந்தும், எதையும் சரிவர பயன் பாட்டுக்கு கொண்டு வருவதில்லை ... பயன் படுத்துவதும் இல்லை ... வெத்து பந்தா... வரட்டு கெளரவம்ன்னு கூட சொல்லுவேன் ... அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கி விட்டு, அளவு சாப்பாடு சாப்பிடுபவனைப் போல, எதையும் அளவாகத்தான் பயன் படுத்தவே முடிகிறது ... எல்லாவற்றையும் நினைத்துப் பார்த்தால்... எல்லாமே ஒரு மாயையாக தோன்றுகிறது ... இது இப்ப கடந்து போகிற ஒரு Duplicate வாழ்க்கை என்று நன்றாகவே உணர முடிகிறது ... வீட்டை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்ச நேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பில், தினசரி எனக்காகக் காத்திருக்கும் தலையணையைத்தான், கண்கள் தேடுகிறது ... இப்படியாக பல சுய பரிசோதனை களின் வாயிலாக சில விஷயங்கள் உணர்த்தின... உரைத்தன ... உணரவும் செய்தது .. இப்போது ஓரளவு பண வரவு, வசதிகளோடு இருந்தாலும், வாழ ஆசைப் படுவது என்னவோ ? ! நமது பழைய ஆரம்ப கால மனதுக்குப் பிடித்த நெருக்கமான அந்த வாழ்வைத்தான் ...! ஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும் .... நோ பீஸ் ஆப் மைண்ட் ... அனைத்தும் இருந்தும் வாழத்தெரியாமல் வாழ்கிறோம், என்று தெரியாமலே வாழ்வதும் நாமாகத்தான் இருக்க முடியும்.. இனிய உறவுகளே போகிற போக்கில் உங்களுக்கான வாழ்வை வாழ்ந்து விட்டு போங்கள் உற்ற உங்கள் உறவுகளோடு .......

வெத்திலைபெட்டி மாத்திரைபெட்டி

<வெத்திலைபெட்டி மாத்திரைபெட்டியாக மாறிபோனது ஏன்???? பற்கள் வெண்மையாக இருக்க வேண்டும் என்று ஒரு பிரச்சாரத்தை கோல்கேட் பற்பசை கம்பெனி கடுமையாக விளம்பரம் செய்தது பற்கள் வெள்ளையாக இருந்தால் தான் சமுதாயம் மதிக்கும் என்ற அளவிற்கு பிரச்சாரம் செய்தார்கள் அதன் பாதிப்பு வெற்றிலைக்கு விடை கொடுத்தது. நமது மூதாதையர்களின் பற்கள் யாருக்கும் வெண்மையான பற்கள் இல்லை அனைவரும் வெற்றிலை போட கூடியவர்களாக இருந்தார்கள் இன்று நம்மை போன்று பெட்டி பெட்டியாக மாத்திரையை பயன்படுத்தியவர்கள் அல்ல அவர்கள் ஏனென்றால் வயோதிகத்தில் ஏற்படக்கூடிய பல நோய்களுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தில் தீர்வு இருந்தது நல்ல ஜீரண தன்மையை வெற்றிலை ஏற்படுத்தியது முதுமையில் ஏற்படக்கூடிய சுண்ணாம்புச்சத்து இழப்பை வெற்றிலை பாக்கில் உள்ள சுண்ணாம்பு ஈடு செய்தது எந்த சிக்கலான உணவை சாப்பிட்டாலும் அதை ஜீரணமாகும் தன்மை வெற்றிலை என்னும் காரத்தன்மையுள்ள பொருளிலும் பாக்கு என்னும் துவர்ப்பு தன்மை உள்ள பொருளிலும் சுண்ணாம்பு என்னும் எரிப்பு தன்மை உள்ள பொருளிலும் கலந்து இருந்தது . என்று தமிழர்கள் வெற்றிலைப் பாக்கு போடும் பழக்கத்தை ஆங்கில மருத்துவர்களின் பேச்சைக்கேட்டு கை விட்டார்களோ அன்றே இவர்களுக்கு பல்வேறு நோய்கள் வர ஆரம்பித்தது சர்க்கரை நோய் மிக அதிகமாக பரவியதற்க்கு வெற்றிலை போடும் பழக்கத்தை கை விட்டதும் ஒரு காரணமாகும். இந்த வெற்றிலை போடும் நல்ல பழக்கத்தை ஒழித்துக் கட்டுவதில் ஆங்கில மருத்துவர்கள் மிகவும் மும்முரமாக இருந்தார்கள் காரணம் இந்த பழக்கம் இருந்தால் அவர்களுக்கு வருமானமே கிடைக்காது என்பதுதான் உண்மை. தற்போதைய நிலைமை என்ன தெரியுமா நாம் வெற்றிலை போடலாம் என நினைத்தாலும் கூட நகர்ப்புறங்களில் கிடைப்பதில்லை அந்த அளவிற்கு வெற்றிலையை ஒழித்துக் கட்டி விட்டனர் இப்போது மெடிக்கல் ஷாப்பில் மருந்துகள் மாத்திரை வடிவில் அமோக வியாபாரம்..

அதிகமாகத் தெரிந்தாலும் ஆபத்து

இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர். 🤔 அப்டியா ன்னுட்டு படுத்தேன்.👍 👉 வலது பக்கமாக படு ன்னார் இன்னொருத்தர் 🤔 ஓகே சொல்லி படுத்தேன்.👍 👉மறந்தும் குப்புற படுத்திராதீங்க ..படுத்தி விட்டுரும் பயமுறுத்தினார் ஒருத்தர்... வா பிளந்து குறட்டை விட மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர்..🤔 👉 படுக்கவிடாமல் படுத்தாறங்களே...😰 👉 காலையில் நடக்க சொன்னார்கள்..🤔 நடந்தேன்.🚶 நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுத் தான் நடக்க வேண்டும் என்று ஒருத்தர் சொல்ல, இன்னொருவர் ஒம்போது மாதிரி நளினமா நடங்க என்றார்🤔.. 👉 காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தேன்.🤔 போதாது போதாது.. அதனுடன் எலுமிச்சையும் பிழிந்து குடிக்க வேண்டும் என்று சொன்னார்கள் ..🤔 கேன்சர் உறுதியாக வராதாம்.!!🤔 👉 உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாயு என்றார்..🤔 வாயில் படுவதை மறந்தேன்...🤔 வாயு பகவான் நிக்காம ராகம் போட ஆரம்பிச்சதே மிச்சம்.. 👉 இனிப்பை தொட்டுவிடாதீர்கள்.. அவ்வளவுதான்.. Sugar ஏறிவிடும் என்றார்..🤔 சரி என்று நிறுத்தினேன்.🙏 👉 நடக்கும் போது நண்பர் சொன்னார்.. low sugar ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் sugar சாப்பிடுங்க என்றார்..🤔 👉 இப்படித்தான் குளிக்க வேண்டும் என்றார்...🤔 ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்...🤔 தந்திரமா குளிக்கனும் என்றார்.👍நல்லவேளை தலை கீழா நின்னு குளி என யாரும் சொல்லலை... குளிக்கக்கூட சுதந்திரம் இல்லை...😭 👉 காபி, டீ வேண்டாம்,👎 👉 அரிசி கஞ்சி வேண்டாம்,👎 👉 பால் வேண்டாம்,👎 👉 ஐஸ் வாட்டர் வேண்டாம்,👎 👉 பாட்டில் ஜூஸ் வேண்டாம் என்றார்...👎 👉 சரி என்று பழகினேன்..👍 👉 ஒன்று புரிந்தது..🤔👌 👉 ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து,😳 👉 அதிகமாகத் தெரிந்தாலும் ஆபத்து..😳 👉 "Over qualification is disqualification" என்று எங்கோ படித்த நினைவு..🤔👌 👉 Too much information will make you to suffer from distinguishing between useful & useless information.👍 👉 நல்லா போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு...😰 👉 எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து.. ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து..🤔 👉 வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த ரசம் போல.. எந்தப் பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே?🤔 👉 அதிக விஷயம், விஷம்.😳 👉 இயல்பா இருங்க. ஒண்ணும் குடி முழுகிப் போய்விடாது.👍🙏 👉 என்ன நான் சொல்றது.?🤔

நமக்கு இதுவே தேவை!!

மண்ணை உழுபவருக்கு பெண்ணைக் கொடு.. மரத்தை நடுபவருக்கு விருதைக் கொடு.. பொது வேலையில் ஈடுபட சொல்லிக் கொடு.. பொது சேவை செய்பவருக்கு புகழ் கொடு.. தண்ணீரை சேமிக்க சொல்லிக் கொடு.. தாமதித்தால் பாலைவனமாகும் என்பதை சொல்லி விடு.. தாய் தந்தைக்கு நல்லதைச் செய்.. அவர்கள் தளர்ந்த பின் நீ தளராமல் செய்.. உனக்காக ஒர் மரம் வை.. உன் குடும்பத்திற்காக ஒரு பத்து மரம் வை.. இதை சொந்தங்களையும் செய்யச் சொல்லி வை.. பிள்ளை பிறந்தாலும் மரம் வை.. பேர் வைத்தாலும் மரம் வை.. மகள் பெரியவள் ஆனாலும் மரம் வை.. நாட்டுக்காக நாளும் நூறு மரம் வை.. இச்செயலை நண்பர்களையும் செய்ய வை.. இதை ஊராரிடமும் சொல்லி வை.. பசுமையைப் பற்றி சொல்லிக் கொடு.. அதை உருவாக்க இப்பவே முயற்சியை எடு.. பணம்..வாழத் தேவை.. காற்று..வாழவே தேவை. மரம் அதற்குத் தேவை.. நமக்கு இதுவே தேவை.. மறந்தால் நாம் தான் பேதை.. குளத்தை வெட்டி வை.. மரத்தை நட்டு வை.. நிலத்தை உழுது வை.. தண்ணீரை சேமித்து வை.. பல்லுயிரும் செழிக்க பசுமை வேண்டும் என்று சொல்லி வை.. பூமித்தாயை குளிர்விக்க நாம் விதைப்போம் ஒரு செடியை.. நம்மை குளிர்விக்க அந்த செடி மரமாக வளர்ந்து நமக்கு ஆயுளைத் தரும்!!!

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்

தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்......* 😁😁😁😁😁😁😁😁 *கரியையும் சாம்பல்தூளையும் கொடுத்து* _பல் விளக்கச்சொன்னபோது_ , *பட்டிக்காடு* என *இளித்த பற்கள்* *இன்று வேரற்று போனபோது*... *ஓடி நின்றேன்* *சர்வோதயா காதிகிராப்ட்*.. *பல்பொடி வாங்க*... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்... *வெந்தயமும் சிகைக்காயும்* *வடிதண்ணீரில் அரைத்து* *தேய்த்துக்குளி என்றபோது* , *பித்துக்குளிகள்* என *எள்ளி நகையாடி*... *சிக் ஷாம்புவை* *சிக்கென பிடித்தும்* *இன்று வெண் கேசம்* *வந்தபின்பு* *ஓடுகின்றேன்* _சீகைக்காய் வாங்க_...... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்... *பாசிப்பயறோ* *கடலை மாவோ* *அரைத்துக்குளி* என்ற போது , *லிரில்* , *லக்ஸ் சினிமா* *நட்சத்திரங்களின்* *அழகு சோப்* என *கைகாட்டிய* *கட்டிகளை* *எல்லாம் போட்டு*,, *தோள் சுருங்கி* *வயோதிகம் தெரிந்த பின்பு*.. *ஓடுகின்றேன் பயத்த மாவு அரைக்க*.... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்..... *இருமலோ தும்மலோ* *வந்தபோது*... *துளசி, தூதுவளை, சுக்கு, மிளகு போட்டு* *கசாயம் தந்தபோது* , *முகத்தைச் சுளித்து* *காஃப் சிரப் குடித்து* *தைராய்டு வரை சென்ற பின்பு* , *ஓடுகின்றேன் துளசி , தூதுவளைச்செடி வளர்க்க*..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்..... *வயிற்று வலி என்றபோது* *வெறும் வயிற்றில்* *வெந்தயக்களியோ*,, *கற்றாழைச்சாறோ* *கொண்டு வந்து தந்தபோது*.. *சீறித் தூக்கி எறிந்து* , *ப்ருஃபென்னும்* *பெயின்கில்லரும்* *போட்டு* *கருப்பை பழுதடைந்த பின்பு* , _ஓடுகின்றேன் கற்றாழை வளர்க்க_ ...... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்..... *நல்லெண்ணெய் செக்கில் ஆட்டி* *மணமாய் தந்தபோது* , *சன்ஃபிளவர் ஆயில்* *பார்* *முகம் காட்டும் தூய்மை* எனக்கூறி *முகத்தில் அறைய,* *பதிலுரைத்துவிட்டு*, *இன்று உடல் நோய்க்கு* *ஓடுகின்றேன் செக்கு நோக்கி* ..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்.... *மண்பானை சமையல்* *மண்பானை குளிர் நீரை* எல்லாம் மாற்றி விட்டு , *ஆர்வோ வாட்டர் என* *புழு பூச்சி கூட வாழத்தகுதியற்ற* *நீரைக்குடித்து குடித்து* *சவமான பின்பு ஓடுகின்றேன்* *மண்பானை வாங்க*..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள்...... *படித்த தலைமுறை எனும் நாகரீகத்தில் திளைத்து*.. *குருகுலக்கல்வியை* *கோடிக்கணக்கான ரூபாய்* *கல்வியாக்கி* , *கொல்லைப்புற துளசியின்* *வைத்தியம் மறந்து* , *மாடிகளில் குளீருட்டப்பட்ட அறைக்கு* *இலட்ச இலட்சமாய்க்கொட்டி* *நடைப்பிணமாக வாழும்* *வாழ்வில் எங்கே சுதந்திரம்* *ஏது சுகாதாரம்* என்று அலைகிறேன்..... தாத்தாவும் பாட்டியும் சிரிக்கிறார்கள் ....... *மூத்தோர் சொல்லு *முது நெல்லிக்காயும்* *முன்னே கசக்கும்* , *பின்னே இனிக்கும்*

முன்னோர்கள் சொன்ன பழமொழி

🌝 தவளை கத்தினால் மழை. 🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம். 🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை. 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல். 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 🌝 தை மழை நெய் மழை. 🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு. 🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய். 🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு. 🌝 களர் கெட பிரண்டையைப் புதை. 🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. 🌝 நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு. 🌝 நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். 🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும். 🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை. 🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. 🌝 உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ. 🌝 அகல உழவதை விட ஆழ உழுவது மேல் . 🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. 🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. 🌝 ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும். 🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் . 🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 🌝 நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். 🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். 🌝 தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். 🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை. 🌝 சொத்தைப் போல் விதையை பேண வேண்டும். 🌝 விதை பாதி வேலை பாதி. 🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு. 🌝 கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது. 🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும். வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! எல்லா உயிர்களும் இன்பமாக வாழ்ந்தால் மட்டுமே நாம் நலமோடு வாழ இயலும். #உழவே_தலை. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். நீர் இன்றி அமையாது உலகு. "என் மக்கள்" கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம். கடைசி மரமும் வெட்டி உண்டு கடைசி மரமும் விஷம் ஏறிக் கடைசி மீனும் பிடி பட அப்போதுதான் உறைக்கும். இனி பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!! ஆறும் குளமும் மாசு அடைந்தால் சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!. நீர் நிலைகளை காப்போம். இணைவோம். நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. மேழிச் செல்வம் கோழை படாது... #முன்னோர்கள் சொன்ன பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது.. அனைவரும் அறிந்துகொள்ள #பகிருங்கள்... 😍😍👌👌👍👇

FMB யில் நிலத்தின் அளவுகள்

நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.. #சர்வே_புல_வரைப்படத்தில்_கண்டிப்பாக #தெரிந்து_கொள்ள_வேண்டிய #7_முக்கிய_செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர். 6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள். 7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும். நிலத்தை அளக்கும் அளவு முறைகள் ********************** நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது. 1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா, 2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை 3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ் ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன. நில அளவீடுகள் ***************** 1 சென்ட் – 40.47 சதுர மீட்ட‍ர் 1 ஏக்க‍ர் – 43,560 சதுர அடி 1 ஏக்க‍ர் – 40.47 ஏர்ஸ் 1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்ட‍ர் 1 சென்ட் – 435.6 சதுர அடி 1 ஏர்ஸ் – 100 சதுர மீட்ட‍ர் 1 குழி – 144 சதுர அடி 1 சென்ட் – 3 குழி 3 மா – 1 ஏக்க‍ர் 3 குழி – 435.6 சதுர அடி 1 மா – 100 குழி 1 ஏக்க‍ர் – 18 கிரவுண்டு 1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள் ஏக்கர் 1 ஏக்கர் – 100 சென்ட் 1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர் 1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ் 1 ஏக்கர் – 43560 ச.அடி 1 ஏக்கர் – 4046 ச மீ செண்ட் 1 செண்ட் – 001 ஏக்கர் 1 செண்ட் – 0040 ஹெக்டேர் 1 செண்ட் – 0.405 ஏர்ஸ் 1 செண்ட் – 435.54 ச.அடி 1 செண்ட் – 40.46 ச மீ ஹெக்டேர் 1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர் 1 ஹெக்டேர் – 247 செண்ட் 1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ் 1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி 1 ஹெக்டேர் – 10,000 ச மீ ஏர்ஸ் 1 ஏர் – 2.47 செண்ட் 1 ஏர் – 100 ச.மீ 1 ஏர் – 1076 ச.அடி 100 குழி = ஒரு மா 20 மா = ஒரு வேலி 1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங், 40 கம்பங்கள், அல்லது 220 கெஜம் 1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம் நீட்டலளவை • 10 கோண் = 1 நுண்ணணு • 10 நுண்ணணு = 1 அணு • 8 அணு = 1 கதிர்த்துகள் • 8 கதிர்த்துகள் = 1 துசும்பு • 8 துசும்பு = 1 மயிர்நுனி • 8 மயிர்நுனி = 1 நுண்மணல் • 8 நுண்மணல் = 1 சிறு கடுகு • 8 சிறு கடுகு = 1 எள் • 8 எள் = 1 நெல் • 8 நெல் = 1 விரல் • 12 விரல் = 1 சாண் • 2 சாண் = 1 முழம் • 4 முழம் = 1 பாகம் • 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்) . 4 காதம் = 1 யோசனை • வழியளவை • 8 தோரை(நெல்) = 1 விரல் • 12 விரல் = 1 சாண் • 2 சாண் = 1 முழம் • 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம் • 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல் • 4 குரோசம் = 1 யோசனை • 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்) நிலவளவை குழிக்கணக்கு வருமாறு 16 சாண் = 1 கோல் 18 கோல் = 1 குழி 100 குழி = 1 மா 240 குழி = 1 பாடகம் கன்வெர்ஷன் 1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர் 1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர் 1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர் 1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர் பிற அலகுகள்1 ஏர் = 100 சதுர மீட்டர் 1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர் தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது. நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும். 1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர் 1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர் நில அளவை 100 ச.மீ - 1 ஏர்ஸ் 100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர் 1 ச.மீ - 10 .764 ச அடி 2400 ச.அடி - 1 மனை 24 மனை - 1 காணி 1 காணி - 1 .32 ஏக்கர் 144 ச.அங்குலம் - 1 சதுர அடி 435 . 6 சதுர அடி - 1 சென்ட் 1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட் 100 சென்ட் - 1 ஏக்கர் 1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர் 2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர் 1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் ) 1 ஏக்கர் = 4840 குழி (Square Yard) 100 சென்ட் = 4840 சதுர குழிகள் 1 சென்ட் = 48.4 சதுர குழிகள் 1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter ) 1 ஏக்கர் = 43560 சதுர அடி

அழகு எல்லாம் 45சில் பளிச்சிடும்...

45 வயதிற்கு பிறகு நமக்கென்ன வேண்டி கிடக்கிறது என எதையும் புறந்தள்ளாதீர்கள்... அதன் பின்பு தான் வாழ்வே தொடங்குகிறது... பதினெட்டில் வராத அழகு எல்லாம் 45சில் பளிச்சிடும்... இளைத்து விட்டேன், பருமனாகி விட்டேன், தோல் தடிமனாகி விட்டது, வயிற்றுப் பகுதி பெருத்து விட்டது, குழந்தைகள் தான் இனி, நமக்கெதற்கு இதெல்லாம், இனி என்ன என்ற உப்புக்கு சப்பில்லாத கேள்வி யோசனைகளை தூக்கி எறியுங்கள்... இப்போது நீங்கள் இருக்கும் நிலை தான் அழகு... அது எந்த நிலையில் இருந்தாலும் அழகென்பது “தான்” முடிவு செய்வது... அடுத்தவர் பார்த்து முடிவெடுப்பது அல்ல... தன்னை அழகாக்கிக்கொள்ள தன்னை தன்னம்பிக்கை யாக்க தன்னை உயிர்ப்பாக காட்டிக்கொள்ள என்ன தயக்கம் உங்களுக்கு... எவருக்கும் வயது ஏறாது குறைந்து கொண்டு தான் போகும்... வயது ஏறிவிட்டதென்ன எதையும் ஒதுக்காதீர்கள்... எனக்கு இதில் உடன்பாடில்லை என்றால் விட்டுவிடுங்கள்... அடுத்தவர்கள் என்ன சொல்ல போகிறார்கள் என்று நினைத்தால் இன்றே அதற்குண்டான வேலைகளை தொடங்குங்கள்... வாழ்க்கைக்கும் வயதுக்கும் சம்பந்தமேயில்லை... இதுவும் கடந்து போகும்... வயதல்ல வாழ்க்கை...!...!...!

*நம் நெல் அறிவோம்*கல்லுருண்டை

*நம் நெல் அறிவோம்* *கல்லுருண்டை நாம் மறந்து போன பாரம்பரிய நெல் வகைகளின் நன்மைகளை இந்த தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தினமும் ஒரு பாரம்பரிய நெல் இரகத்தின் அரிசியை பற்றி பதிவிட்டு வருகிறேன். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது *கல்லுருண்டை* என்கிற பாரம்பரிய ரகம் நெல் பற்றி தான்.  பாரம்பரிய நெல்  வகையைச்சார்ந்த கல்லுருண்டை நெல் தமிழகத்தநாகப்பட்டினம்மாவடபகுதிகளில் விளையக்கூடிய நெல் இரகமாகு 126 சென்டிமீட்டர் உயரம் வரையில் வளரக்கூடிய இதன் நெற்பயிர், 120 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது. களிகலப்பு மண் வகைக்கு ஏற்ற, மற்றும் நன்கு வளரக்கூடிய இந்த கல்லுருண்டையின் நெற்பயிர், வறட்சி,  பூச்சி மற்றும் உப்புத் தன்மையை எதிர்க்கும் ஆற்றல் கொண்ட நெல் இரகமாகும். கல்லுருண்டை நெல்லின் தானியமணி, கருப்பு நிற மங்கிய கோடுகளுடன் காணப்படும், மஞ்சள் நிறமுடைய நெல்லாகும். மேலும் இதன் நெல் மணி சற்று தடித்தும் (மோட்டா) வெளிறிய மஞ்சள் நிறமுடன் உள்ளது. உணவு பயன்கள் இந்த நெல்லின் அரிசி இட்லி, தோசையும், மற்றும் பிற உணவு வகைகளுக்கும் ஏற்றதாக உள்ளது. மேலும் இந்த நெற்பயிரிலிருந்து கிடைக்கக்கூடிய  வைக்கோல், கூரை  வேய்தலுக்குப் பயன்படுகின்றது. பருவகாலம் குறுகியகாலப் பயிரான கல்லுருண்டை, தாளடி, பிசாணம் எனப்படும் பின்சம்பா (பட்டம்) பருவகாலமான செப்டம்பர் 15 முதல், - பிப்ரவரி 14 முடிய உள்ள இடைப்பட்ட காலத்திலும், மற்றும் நவரை பட்டம் எனப்படும் டிசம்பர் 15 முதல், - மார்ச் 14 முடிய, இந்த இரகத்திற்கு ஏற்ற பருவங்களாகும். கல்லுருண்டை சம்பா அரிசியில் செய்த உணவுகளை உண்பவர்களுக்கு தோள் வலிமைபெறும். அதாவது மல்யுத்தக்காரர்கள் கூட எதிர்க்க இயலாத தோள் வலிமையை தரும். கல்லுருண்டை சம்பா அரிசியில் செய்த உணவுகளை உண்பவர்களுக்கு நல்ல வார்த்தை வளமும் உண்டாக்கும்.

குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*

நீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே கால் மேல் காலைப் போடாதே கவட்டையில் துணியை சொருகாதே காலையில் அதிகம் தூங்காதே மாலையில் அதிகம் சிரிக்காதே தொடையில் தாளம் போடாதே தரையில் வெறுமென கிடக்காதே மலஜலம் அடக்கி வைக்காதே மார் தட்டி பேசாதே நகத்தை நீட்டி வளர்க்காதே ஆலயம் செல்லத் தவறாதே அளவு இல்லாமல் உண்ணாதே அள்ளிக் கொடுக்க மறவாதே அனைத்தையும் உண்ணத் தவறாதே அதிகமாக பேசி நோகாதே எண்ணெய் தேய்க்க மறக்காதே முச்சந்தியில் நீயே உண்ணாதே விரிப்பைச் சுருட்ட மறக்காதே பகலில் படுத்து உறங்காதே இரவில் உறங்காமல் இருக்காதே குளிக்கும் முன்பு புசிக்காதே ஈரம் சொட்ட நிற்காதே திரு நாமம் சொல்ல மறக்காதே நல்ல குடியைக் கெடுக்காதே தீய வார்த்தை பேசாதே தீமைக்கு துணை போகாதே தீயோர் சொல் கேட்காதே நின்று தண்ணீர் குடிக்காதே எதையும் காலால் தட்டாதே எச்சில் பட்டதை திண்ணாதே 40ல் 50 போகாதே... கொண்டோரே, சான்றோரே, ஆண்டோரே, எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே எம் மூத்தோரே இப்போது எல்லாம் கேட்டு தெரிந்தும் நோய் நொடியில் சிக்கி தவித்தீரே சிந்தனை செய்ய மறந்தீரே புத்தியை தீட்ட தவரிட்டீரே வந்தவன் போனவன் ஆண்டானே... ஆண்டவன் எந்நாட்டவன் தெரியாதே. *என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*

நல்ல குடும்பம் 🌹🌹

நல்ல குடும்பம்...!! வேதாத்திரி மஹரிஷி பேசுகிறார். மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். *இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால், அதற்கு என்ன வழி?* மூன்று பண்புகள்: 1. விட்டுக் கொடுப்பது, 2. அனுசரித்துப் போவது, 3. பொறுத்துப் போவது. இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது. இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார். “விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்... யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா? பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!” எல்லோரும் ஆவலோடு மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா? மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார். “யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.” அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது. ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்: “அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம், அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும். அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள். அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!” அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை ஏற்படுத்துவதை உணர முடிகிறது. விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது. அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி.. அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை கவனத்தில் கொள்வோம். *பத்து வழிகள்:* 1. நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே. 2. கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது. 3. குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது. 4. வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும். 5. ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம். அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும். 6. கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிற்க்கு இடம் தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது. பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது. 7. குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும் 8. பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும். 9. தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும். 10. நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும். *வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!* *தத்துவஞானி வேதாத்திரி மகரிசி* *நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!!*

*மாங்கல்ய சரடும், தலைமுடி கூந்தலின் மகத்துவமும்

*அக்ரஹார சாஸ்த்ரம்:* *மாங்கல்ய சரடும், தலைமுடி கூந்தலின் மகத்துவமும்!* *இன்றைய காலக்கட்டத்தில் பேஷனாக எண்ணிக் கொண்டு பலரும் தங்கச்சங்கிலியில் மாங்கல்யத்தை சேர்த்து விடுகின்றனர். "மாங்கல்யச் சரடைத்தான்" சுமங்கலித்துவம் நிறைந்த மங்களப் பொருளாகக் குறிக்கின்றனர் சான்றோர்.* *பஞ்ச பூத சக்திகள் நிறைந்து கிட்டுவதுதான் சுமங்கலித்துவம் ஆகும். பருத்தி இழைகளால் ஆன மாங்கல்யச் சரடிற்குத்தான் பஞ்ச பூத தெய்வீக சக்திகளை ஈர்த்து சுமங்கலித்துவ சக்தியாக மாற்றக்கூடிய அருட்சக்தி உண்டு. ஆதலின் மாங்கல்யத்தை மாங்கல்யச் சரடில்தான் கோர்க்க வேண்டுமே தவிர தங்கச்சங்கிலியில் ஒரு போதுகூடாது.* *சரடினால் மாங்கல்யம் போடுபவர்கள் மட்டும் நீண்ட ஆயுளுடன் இருப்பாரா? என்ற சந்தேகம் எழலாம். ஆனால் நீங்கள் நினைக்கும் எண்ணம் வேறு சாதாரணமான நிலையில் கூட பெண்களின் மஞ்சள் கயிற்றுக்கு என்று ஒரு மகிமை உண்டு. தோஷங்கள் உடனே அவரை பாதிக்காது. கர்ம வினைகள் குறையத் தொடங்கும்.* *குங்கும அர்ச்சனையின் பலன்கள் சரடுக்கு உண்டு. உடனே போகும் உயிரை கூட அந்த தாலி சரடின் மகத்துவம் காக்கும். தீவினை தோஷங்களில் ஒரு பகுதியை மாங்கல்யச் சரடானது தம்முன் ஈர்த்து ஆத்மாக்னியில் பஸ்மம் செய்து விடுகின்றது.* *ஏனெனில் மாங்கல்யமானது ஒரு இல்லறப் பெண்மணியின் கழுத்தில் எப்போதும் திகழ்வதால் அதுவே தெய்வீகத் துணையாக இருந்து எப்போதும் சுமங்கலித்துவதைக் கட்டி காப்பதாகும். பெண்களுக்கு மாங்கல்யமே பிரம்ம முடிச்சு ஆகும்.* *பின்னலின் மகத்துவம்:* *பின்னல் என்பது உறவைக் குறிக்கிறது. முடியை விரித்து விடுவது அமங்கலமானது. அதாவது முடி என்பது அழகான கூந்தல். அந்த கூந்தலை பின்னி பூ வைத்து பார்ப்பதன் அழகே தனி. ஆனால் இன்றைய சூழல் அப்படியா?* *தலைமுடியின் நுனி வழியாக ஆத்மசக்தி வெளியேறுகிறது. நல்ல, தீய உணர்வுகள் அல்லது அதிர்வுகள் வந்து செல்வதற்கான ஊடகம் போன்றது முடியின் நுனி. அப்படியானால் மொட்டை அடித்துக் கொள்கிறார்களே அவர்களை என்ன சொல்வது என்ற கேள்வி எழும் உங்களுக்குள். வெளியிலிருந்து பெறுவதற்கும் ஒன்றுமில்லை. நம்மிடமிருந்து போவதற்கும் ஒன்றுமில்லை என்பதை உணர்த்துவற்காக.* *தலைவிரி கோலத்தை தவிர்ப்போம். இது உறவின் மீதான பிடிப்பை அறுக்கக்கூடியது. பின்னல் இதன் அமைப்பு திரிவேணி சங்கமத்தை ஒத்தது. 3 நதிகள் சேரும் போது இரண்டு நதிகள் கண்களுக்கு புலப்படும். (கங்கை, யமுனை) ஒரு நதி கண்களுக்கு புலப்படுவதில்லை (சரஸ்வதி). இதுபோலவே பின்னலின் 3 பகுதிகளில் இரண்டு பகுதிகளே புலப்படுகின்றன.* *பின்னலின்* *வலது - பிறந்த வீடு* *இடது - புகுந்த வீடு* *நடுப்பகுதி - பெண்.* *தன்னை மறைத்து இரு வீட்டாரையும் இணைத்து அழகுற தோற்றமளிக்கச் செய்வதே இதன் பொருளாகும். தன்னை முன்னிறுத்தும் பெண்ணை காட்டிலும் தன் குலத்தை முன்னிறுத்துபவளே உயர்ந்தவள் ஆவாள். ஆகையினால் பின்னல் வெறும் அலங்காரம் அல்ல. வாழ்வின் தத்துவம்.*

வாழ்க்கை வேறு மாதிரி

எனக்குத் தெரிந்து 80 -களில் தொலைக்காட்சிப் பெட்டி வரும் வரை வாழ்க்கை வேறு மாதிரி இருந்தது....! * சாயங்கால வேளைகளில் வீட்டில் விளக்கேற்றி விட்டு, பெரியவர்கள் சிறிது நேரம் வாசலில் உட்கார்ந்து கொண்டு, அக்கம், பக்கத்தவர்களுடன் பேசிக்கொண்டிருப்பார்கள். * குழந்தைகள் அனைவரும் ஓடி, ஆடி, விளையாடிக் கொண்டிருப்பார்கள். * தெருவில் வேக வாய்த்த கடலை, கருப்பு உளுந்து, பஞ்சு மிட்டாய், இன்னும் பல நொறுக்குத் தீனி விற்பவர்கள் விற்றுக் கொண்டிருப்பார்கள். * மெல்ல பொழுது சாயும் நேரத்தில், குழந்தைகள் வீட்டுப்பாடம் செய்ய சென்றவுடன், அம்மாக்களும் வீட்டுக்குள் சென்று விடுவார்கள். * வேலை முடிந்து அப்பாக்களும் வரும் நேரம் அது. சில வீடுகளில் அப்பாக்கள் வெளியே செல்லும் நேரமும் கூட..! பாட்டிக்கள் மட்டும் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பார்கள். * வாழ்க்கைச் சக்கரம் மெதுவாக நிதானமாக போய் கொண்டிருந்தது..! * ஆல் இந்தியா ரேடியோவில் பகல் வேளையில் பல நல்ல நிகழ்ச்சிகளை ஒலிப்பரப்புவார்கள்...! மிக நல்ல கருத்துகளையும், புதிர்களையும் நடு நடுவே சொல்வார்கள்...! * இரவுகளில், இனிமையான, அருமையான பாடல்கள் ஒலிப்பரப்பாகும். எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டு, அந்த அமைதியானச் சூழலில் TMS, AM ராஜா, P.சுசீலா, PB Srinivas, SPB...... பாடிய பழைய பாடல்களை கேட்க ஆனந்தமாக இருக்கும்...! * வணிக விளம்பரம் இல்லாமல், முழுப் பாடல்களையும் கேட்க முடிந்த காலமது...! இலங்கை வானொலியும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருந்தது. * அப்துல் ஹமீது , கே.எஸ். ராஜாவின் காந்தக் குரலால் கவரப்பட்டவர்கள் பலர். பல நிகழ்ச்சிகளையும் நிறைய தகவல்களுடன் கேட்பவர் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் தொகுத்து வழங்கியவர்கள்...! * அநேகமாக எல்லோர் வீட்டிலும் வானொலி பெட்டி மிகவும் பெரியதாக இருந்தது. அதை on பண்ணியவுடன், நிதானமாக(?) ஒரு பல்பு உள்ளே எரியும். அதைத் தொடர்ந்து சிறிய சத்தத்துடன் வேண்டுமென்ற அலை வரிசையில் பாட்டு கேட்கலாம். * உள்ளே இருக்கும் vaccum tubes எல்லாம் வெளியே தெரியும். knobs எல்லாம் பெரியதாக இருக்கும். பார்ப்பதற்கே பிரம்மாண்டமாக இருக்கும் அந்த வானொலி பெட்டிகள் எல்லாம் எடையும் அதிகம். மின் இணைப்பில் மட்டுமே வேலை செய்யும். * வெளியே ஏதாவது மோட்டார் பைக் சென்றாலோ அல்லது வேறு அதிர்வு ஏற்பட்டாலோ , ரேடியோ கொர்ர் ர் ர் ர் ...... என்று சத்தம் போடும்..! * அப்போதெல்லாம் மர்பி ரேடியோ மிகவும் பிரபலம். அந்த விளம்பரத்தில் வாயில் விரலை வைத்து இருக்கும் கொழுகொழு குழந்தை படம் அதை விடவும் பிரபலம். * காலையில் அம்மா எழுந்து ஸ்கந்த ஷஷ்டி கவசம் , சுப்ரபாதம் போன்ற பாடல்களை டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்டுக் கொண்டே வேலைகளை பார்த்துக் கொண்டிருப்பார். அதற்கென்று ஒரு சிறிய டேப் ரெக்கார்டர் வைத்திருந்தார். * நடு நடுவே பாட்டு நிற்கும் பொழுது, கேசட்டை வெளியே எடுத்து ஒரு பேனாவோ , பென்சிலோ வைத்து மெதுவாக அந்த துளையில் வைத்து சுற்றி சரி செய்வார்கள்...! * விவரம் தெரியாத குழந்தைகள் டேப் மேக்னடிக் ரீலை முழுவதுமாக உருவி அலம்பல் செய்வதும் உண்டு...! * சில சமயங்களில், மேக்னடிக் ரீல் உள்ளே மாட்டிக்கொண்டு 'கிர்' என்ற சத்தத்துடன் நின்று போவதும் உண்டு...! * இன்றும், பாட்டுக் கேட்டு கொண்டே வீட்டு வேலைகள் செய்வதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது...! * பல (தமிழ்/ஹிந்தி ) சினிமா பாடல் காசெட்டுகள், சுவாமி பாட்டு காசெட்டுகள், ஐயப்பன் சீசனில் யேசுதாஸ், மதுரை சோமுவின் பாடல்கள், கார்த்திகை மாதத்தில் TMS - இன் உள்ளம் உருக வைக்கும் முருகன் பாடல்கள்,சினிமா வசனங்கள் உள்ள காசெட்டுகள், சௌராஷ்டிரா நாடகங்கள், நாங்கள் பேசி அதை ரெக்கார்ட் செய்த காசெட்டுகள் என்று பலவும் எங்களிடம் இருந்தன. பட்டிக்காடா பட்டணமா , தில்லானா மோகனம்பாள், திருவிளையாடல், திரிசூலம் மற்றும் பல சிரிப்புக் காட்சி வசனங்கள் மனப்பாடம் செய்யும் அளவுக்கு கேட்டிருக்கிறோம். * இதற்கு முன், கிராமபோன் இருந்தது. அதை சுற்ற சுற்ற , ஊசி முனையை கவனமாக இசைத்தட்டின் மேல் வைத்தால் பாட்டு கேட்கும். ஸ்பீக்கர் மிகவும் பெரியதாகவும், அழகாகவும் இருக்கும். இன்னும் சிலர், அதை வைத்திருக்கிறார்கள்...! இசைத்தட்டுக்கள் சிறிய மற்றும் பெரிய வடிவங்களில் கிடைக்கும். * பிறகு, கையில் வசதியாக பிடித்துக் கொள்ளும் வகையில், மிகச் சிறிய வானொலி பெட்டி வந்தது. அதை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்து செல்லலாம். மிகவும் வசதியாக இருந்தது. * பள்ளி, கல்லூரி நாட்களில் மாணவர்கள் காதோடு காதாக கிரிக்கெட் ஸ்கோர் கேட்கவும், கமெண்டரி கேட்கவும் வசதியாக இருந்தது. அதுதான், அப்போதைய பேஷன்...! * ஆர்வ மிகுதியால், உள்ளே என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்து விட்டு (அழகாக சிறியதாக இருந்த diode , capacitors ), மூட தெரியாமல் அடி வாங்கிய அனுபவமும் உண்டு...

விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள்.

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன. பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது . ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது . கடலை எப்படி வற்றவைப்பது? முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும். இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின. இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம். அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார். மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர். உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன. உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன. நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக. முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின . அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார். அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது. அன்பு நண்பர்களே . எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே, இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம். பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும். எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிடுங்கள். உழைத்திடுங்கள் . வாடா மல்லிக்கு வண்ணம் உண்டு வாசமில்லை, வாசமுள்ள மல்லிகைக்கோ வயது குறைவு. வீரமுள்ள கீரிக்கு கொம்பில்லை, கொம்புள்ள கடமானுக்கோ வீரம் இல்லை. கருங்குயிலுக்குத் தோகையில்லை.. தோகையுள்ள மயிலுக்கோ இனிய குரலில்லை. காற்றுக்கு உருவமில்லை.. கதிரவனுக்கு நிழலில்லை நீருக்கு நிறமில்லை நெருப்புக்கு ஈரமில்லை ஒன்றைக் கொடுத்து ஒன்றை எடுத்தான், ஒவ்வொன்றிற்கும் காரணம் வைத்தான், எல்லாம் இருந்தும் எல்லாம் தெரிந்தும் கல்லாய் நின்றான் இறைவன். அவனுக்கே இல்லை, அற்பம் நீ உனக்கெதற்கு பூரணத்துவம்? எவர் வாழ்விலும் நிறைவில்லை எவர் வாழ்விலும் குறைவில்லை புரிந்துகொள்... 🙏💐💐💐🙏

பெற்றோர்_கவனத்திற்கு

#பெற்றோர்_கவனத்திற்கு 10 வயது மாணவர்கள் கூட இன்று மாரடைப்பால் இறந்து போனதற்கு வைத்தியர் கூறிய காரணம். (1) காலையில் குழந்தையை எழுப்புவது. (தூக்கம் நிறைவேறாமல்) (2) காலை உணவு இல்லாமல் பாடசாலைகளுக்கு அனுப்புதல். (3) குழந்தையின் எடையை விட பள்ளி புத்தக பையை எடுத்து செல்லுதல். (4) வீட்டு வேலைகளை (Homework) முடிக்க வேண்டும் என்ற ஆசிரியர்களின் அழுத்தம். (5) அதிகமாக குளிர்பானம் குளிர் பக்கட் சாப்பிடுவது. (6) பாடசாலை விட்டு வந்து உடனே குளிப்பது, சாப்பிடுவது, பிரத்தியேக வகுப்புகளுக்கு அதிகமாக ஓடுவது.... 7) வீட்டில் வீட்டு வேலைகளை முடிக்க அழுத்தம் கொடுப்பது அல்லது அவர்களை அதிகமான நேரம் திட்டிய வண்ணம் இருப்பது. நாம் குழந்தைகளின் குழந்தைப்பருவத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவர்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அன்புள்ள பெற்றோர்களே! அப்பாவி குழந்தைகள் மீது கருணை காட்டுங்கள், விளையாடுவதற்கு ஓய்வெடுக்க போதுமான நேரம் கொடுங்கள்.

வாங்கின ஒவ்வொரு அடியும்

*அந்த காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு இப்போ பலருக்கு தெரிய வாய்ப்பில்லை...* ஆனால் வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆக்கிடுச்சு என்பதுதான் இங்க மேட்டரே... 1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி! 2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி. 3. அடி வாங்காமலேயே அழுதா விழும் அடி. 4. பெரியவங்க உக்காந்திருக்கர இடத்ல நின்னுட்டு இருந்தா அடி 5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உக்கார்ந்திட்டே இருந்தா அடி. 6. பெரியவங்க உக்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி. 7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி 8. தட்ல சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி. 9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா,எங்க சுத்திட்டு வர்ரன்னு ஒரு மொத்து. 10.அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு வந்தா அடி 11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி. 12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி. 13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி 14. சின்ன பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டூன்னு கூவினா அடி. 15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி. 16.அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாளும் அடி. 17. காணாது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி. 18. பூரணமா சப்பிடாம இருந்தால் அடி 19.சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி, 20. பேசிட்டே சாப்பிட்டா அடி 21.பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி. 22.விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி. 23. தடுமாறி நடந்து விழுந்தா உதை. 24. பெரியவங்களை முறெச்சு பார்த்தா அடி 25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி 26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி 27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி 28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி. 29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உக்கந்திருந்தாலும் அடி. 30. சாப்பிட்டபின் தட்ட அலம்பலேன்னா அடி. 31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி. 32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டா அடி. 33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி 34.நகத்தை கடிச்சா அடி 34..குளிக்காட்ட அடி. 35.காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல பொளேர் 36. உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா வெளில வந்தவுடன் அடி. 37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி. 38.தெருல போர கார் உறசிட்டு போச்சுன்னா அடி. 39. கார் அடிச்சு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும் அஜாக்கைரதைக்கு நாலு அடி. 40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி 41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி. 42 லேட்டா கோவிலுக்கு போனா அடி. 43ஃப்ரெண்ட்ஸ்ட்டேந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி. 44.அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னா அடி 45. கடைசில அவங்க சூஸ் பண்னின ஷர்ட்டை செலெக்ட் பண்ணினா,இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி 46. வாத்தி சொல்லிகுடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரிஷைல எழுதினா அதே வாத்தி”சொந்தமா என்னடா gas விட்ர”ன்னு சொல்லி அடிக்கும். 47டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும் நாம கர்ரெக்ட் பதில் எழுதினா வாத்திட்ட”நீ பெரிய பிச்தாவா”ன்னு சொல்லி வாங்கும் அடி.. 48.வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா நாம வாங்கும் அடி. 49 சொந்த காரங்கவீட்ல,நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், வீட்ல வந்து வாங்கும் அடி. 50 மூணு தோசை/பூரியை தாண்டி இன்னொண்ணுன்னா வாங்கும் அடி. 51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல பளார். 52.சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி. 53) காரணமும் தாண்டி காரணமே இல்லாமல் வாங்கும் அடி. இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம். ஆனால் கிட்டதட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள்- பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில் *இந்த அடிகள்* வாங்கியது தான் எங்களுக்கு வாழ்வில் முன்னேற உதவின. வாழ்க பெற்றோர்கள்.🍁🍁🍁

மனைவிகளுக்கு மட்டும் இல்லை... கணவர்களுக்கும் தான்...!!*

*இது மனைவிகளுக்கு மட்டும் இல்லை... கணவர்களுக்கும் தான்...!!* அது ஒரு சைக்காலஜி வகுப்பு : ஆசிரியர் வந்து :- இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து, *_இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..."_* என்று பணித்தார். அந்த பெண்ணும் எழுதினார்:- பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்... அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்.. அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார். அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்... இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்... அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்.... இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்... இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்... வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்... மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்... அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்... ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு, "ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... ????? உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர்.!!!! உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. !!! பின் ஏன் ..?" என்று கேட்டார்.. ??? முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது... ?????? அதற்கு அந்த பெண்...." இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... ??? என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ??? ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. !!!! அதனால் தான்...." என்றார்.....!!!!! அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்.... இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... !!! அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...!!!! *...படித்ததில் பிடித்தது மனதில் பதிந்தது ...!!!!* இது மனைவிகளுக்கு மட்டும் இல்லை... கணவர்களுக்கும் தான்...!!* *ஆதலால் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், தங்களுக்கும் பிடித்திருந்தால் அவசியம் பகிரவும்...!!!🙏உங்களின்🙏🤗ஸ்ரீ

இடம்பிடி

ஓ..... மனிதனே... உன்னுடைய மரணம் எப்படியிருக்க வேண்டும்....தெரிந்து கொள்... இந்த உலகம் உன்னுடைய இறந்துபோன உடம்பிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காது... உற்றார் உறவினர்கள் உன் உயிர் போன உடம்புக்கு செய்ய வேண்டிய மத சம்பிரதாயங்களை தெரிந்தவரை செய்வார்கள். அதாவது.... 1. உனது ஆடைகளை களைவர். 2. குளிப்பாட்டுவர். 3. புது துணி அணிவிப்பர். 4. உன்னுடைய வீட்டை விட்டு ஊனுடம்பை வெளியே கொண்டு போவார்கள்.. 5. அடக்க ஸ்த்தலம் என்கிற புதிய இடத்திற்கு உன்னை எடுத்துச் செல்வார்கள். 6. உன் மரணத்திற்காக கூடும் கூட்டம் பெரும்பாலும் உனது அனுதாபத்திற்காக அல்ல. உன் குடும்பத்தினர்கள் தவறாக நினைத்து விடுவார்களோ என்கிற எண்ணத்தினால் தான் என்பதை நினைவு கொள். 7. உனது கூட வரும் பலர் உன்னை அடக்கம் செய்வதிலேயே குறியாக இருப்பார்கள். 8. நீ உபயோகித்த உன்னுடைய உடமைகள், உடைகள், புத்தகங்கள், பைகள், கண் கண்ணாடி, செருப்புகள் எல்லாம் வெளியேற்றப்படும். உன்னுடைய பொருட்கள் உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும் பிரிக்கப்படும். அல்லது வெளியில் வீசப்படும். உன்னை விட்டு நீங்குவது... 1. உன் உயிர் 2. உனது அழகு 3. சொத்துக்கள். 4. பிள்ளைகள் 5. வீடு, மாளிகைகள் 6. மனைவி மற்றும் பிள்ளைகள்..... இதில் உனக்கென்று எதனை தயாரித்து வைத்துள்ளாய்......? 😊உறுதியாக விளங்கிக்கொள். உனது பிரிவால் இந்த உலகம் கவலைப்படாது... பொருளாதாரம் தடைப்படாது. உன்னுடைய உத்தியோகத்தின் வேலைக்கு வேறொருவர் சந்தோசமாக வருவார். உனது சொத்து வாரிசுகளுக்கு போய்விடும். எவ்வளவு சொத்து சுகத்தோடு வாழ்ந்தாலும் வெறும் கையுடன் தான் படுத்திருப்பாய்..... நீ மரணித்தவுடன் முதலில் மறைவது உனது பெயரே.... பிணம் அல்லது சவம் என்று மாறும்..... உன் உறவுகளே இப்படித்தான் அழைப்பார்கள். ● உன்னைப்பற்றிய கவலை மூன்று பங்காக்க பிரிக்கப்படும். 1. உன்னை அறிந்தவர்கள் சொல்வார்கள்.... பாவம் நல்ல மனுசன் போயிட்டான் என்று.... 2. நண்பர்கள் சில தினங்களுக்கு உன்னை நினைப்பார்கள்... 3. உன் குடும்பத்தினர் சில மாதங்கள் கவலைபடுவார்கள் அவ்வளவுதான். பிறகு நீ ஒருத்தன் இருந்ததே மறக்கப்படும். மக்களுடன் உன்னுடைய தொடர்பு முடிந்து விட்டது.... உண்மையான உனது வாழ்க்கை இப்போது தான் ஆரம்பமாகப் போகிறது. ஓ மனிதனே...... உனது குடும்ப கெளரவம், பணம், பட்டம், பதவி என்று வாழும்போதே ''வாழாமல்'' உன்னை நீயே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். உன் மனைவி, குழந்தைகளுக்கு அத்தியாவசிய தேவைக்கு மட்டும் சேர்த்துவை. அதிகமாக உழைத்து உன் வாழ்க்கையை வாழாமல் இழந்து விடாதே... ■ இறுதியில் உன்னுடன் வருவது..... நீ செய்த நற்காரியங்கள்.. நீ நன்முறையில் வளர்த்த உன் பிள்ளைகளின் பிரார்த்தனைகள்... நீ செய்த உதவியும் மற்றும் தர்மங்கள்.... இதை மனதில் நிறுத்தி ஒவ்வொரு நாளும் செயல்பட்டால்... இந்த உலகத்திலும், இறந்த பின்னும் நன்மையடைவாய்..... நல்லவனுக்கு மரணம் முடிவு இல்லை, கொடியவனுக்கு மரணம் முடிவாகும், இன்று தெருவில், ஊரில், அலுவலகத்தில், அண்டை வீட்டில், வயலில், களத்தில்- களத்து மேட்டில் , எங்கும் மனித உள்ளங்களில் வாழ முயன்று பார்... பசிக்கு உணவிடு இல்லார்க்கு உதவிடு எளியோர்க்கு வழி கொடு ஏழைக்கு கல்வி கொடு ஆபத்தில் துணை நில், இதழ்கள் புன்னகை வீசட்டும்இடம்பிடி , அன்பு, கருணை கண்ணில் ஒளிரட்டும், கைகள் உதவிட எழும்பட்டும். உன்னைமரணம் கவ்வுவதற்குள்.... கல்லறை கூட்டுக்குள் உடல் அடங்கும்முன்... அல்லது எரிமேட்டில் புகையாக வெளிப்படும் முன், ஒருபிடி சாம்பலாக மாறும்முன்... அடுத்தவர் உள்ளங்களில் இடம்பிடி...

பொதிகைமலை ஆன்மீக பயணம்

பொதிகைமலை நோக்கி ஆன்மீக பயணம் மர்மங்கள் அதிசயங்கள் நிறைந்த திருநெல்வேலி : திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் மலைக்கு மேலே முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் பொதிகை மலையின் உச்சியில் 1868மீட்டர் அதாவது 6129 அடி உயரத்தில் உலக நன்மைக்காகத் தவமிருக்கும் அகத்தியரை நேரில் சென்று தரிசனம் செய்து வழிபாடு செய்ய ஆர்வம் உடையவரா நீங்கள்...!? அகத்தியர் வாழ்ந்து வரும் தென்றல் தவழும் பொதிகை மலையை அகத்தியர்மலை என்று அழைக்கிறோம்.அகத்தியர் வாழும் இப்பொதிகைமலையில் கடல்மட்டத்தில் இருந்து 6132 அடி உயரத்திலுள்ள அகத்தியரை தரிசிக்க செல்வதை சாகசப்பயணம் என்றும் கூறலாம். அபூர்வ மூலிகைகள் மனதை கவரும் அருவிகள் சிற்றோடைகள் ஆறுகள் எங்கு காணினும் இயற்கையின் கொடையான பசுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகள் புல்வெளிகள் ஆகியவற்றை தன்னகத்தே கொண்டுள்ள இப்பொதிகைமலை இயற்கை நமக்கு அளித்த பெருங்கொடை. புலிகளின் பொற்காடு இந்த மலைகளில்தான் இந்தியாவிலேயே அதிக புலிகள் இருந்தது. இது புலிகளின் பொற்காடு என்றும் கூறப்பட்டது. புலிகள் உள்பட காட்டு விலங்குகள் அதிகம் இருப்பதால் இம்மலை ஒன்றும் அந்த அளவுக்கு சுலபமாக ஏறக்கூடியது அல்ல. பொதிகை மலையை எப்படி அடைவது? பொதிகை மலை அல்லது அகத்திய மலையில் இருக்கும் தமிழர்களின் பொக்கிஷங்களைத் தேடி இரண்டு வழிகளில் இம்மலையை அடையமுடியும். அவை தமிழ்நாட்டின் திருநெல்வேலி வழி, கேரளத்தின் திருவனந்தபுரம் வழி. திருநெல்வேலி மாவட்டம் முண்டந்துறை, பாபநாசம், பாணதீர்த்தம் அருவியின் மேற்பகுதி வழியாக இஞ்சிக்குழி, கண்ணிகட்டி, பூங்குளம் வழியாக தமிழகப் பக்தர்கள் பன்னெடுங்காலமாக மிகவும் கடினமாக பயணம் செய்து அகத்தியர் பெருமானைத் தரிசித்து வந்தனர்! இந்த வழித்தடத்தில் பக்தர்கள் சென்று வர கடந்த 1998-ம் ஆண்டு தமிழக அரசு வனத்துறை அனுமதி மறுத்து விட்டது. சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் 1999-ல் பொதிகை மலை செல்ல அனுமதி வழங்கியது. இந்நிலையில், 2009-ல் தமிழக அரசு வனத்துறை தமிழகம் வழியாக பொதிகை மலைக்குச் செல்ல நிரந்தரமாக அனுமதி மறுத்ததுடன், கேரளா வழியாக அகத்திய மலைக்கு செல்லலாம் என அறிவுறுத்தியது! திருநெல்வேலி வழியாக மலையை அடைய வனத்துறை தடை விதிக்க என்ன காரணம் ?மரங்கள் அடர்த்தி, மற்றும் விலங்குகளின் புகலிடமாதலால், ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு பிறகு இந்த மலையில் நடமாடக்கூடாது என்பது சட்டம். மேலும் சிறப்பு அனுமதி பெற்று காடுகளில் சுற்றித் திரியலாம். ஆனால் அந்த அனுமதி அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைப்பதில்லை. வனவிலங்கு ஆர்வலர்கள், விலங்குகள் கணக்கெடுப்பாளர்கள் மட்டுமே சென்று வரமுடியும். கேரளத்தின் வழி டிரெக்கிங் கேரளமாநிலம் திருவனந்தபுரம் வழியாக இம்மலையை அடைவது சற்று சுலபம் என்றாலும், அந்த அளவுக்கு சுலபம் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். வருடத்தில் ஒரே ஒரு முறை ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சீசன் வருகிறது. அப்போது கேரள வனத்துறை இந்த மலையில் ஏறுவதற்கு அனுமதி அளிக்கிறது. அதுவும் சுலபமாக அல்ல. அதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கிறது. மழைக்காலம் மற்றும் வனவிலங்குகளின் வாழ்வாதாரம் கெட்டுவிடக்கூடாது என்பதற்காக மற்ற நேரங்களில் இதுபோன்ற பயணங்களுக்கு அனுமதி அளிப்பதில்லை. சரி நாமும் மலையேறலாமா? இதையடுத்து கேரள வனத்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள வனப்பகுதி வழியாக "eco-tourism சூழலியல் சுற்றுலா"-வாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை அகத்தியர் மலைக்கு பக்தர்கள் சென்று வர அனுமதி வழங்குகின்றனர்! இதற்காக கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் வட்டியூர்காவு PTP நகரிலுள்ள கேரள வனத்துறை அலுவலகத்தில் அகஸ்தியர் கூடம் செல்வதற்கு கட்டணத்துடன் கூடிய அனுமதி ஒவ்வொரு ஆண்டும் January February ஆகிய மாதங்களில் வழங்கப்படுகிறது! தை மாதம் மகரவிளக்கு நாளிலிருந்து மாசி மாதம் சிவராத்திரி வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே பயணம் செய்ய இயலும்!14 வயதிற்கு மேற்பட்ட திடகாத்திரமான ஆண்கள் பெண்கள் இருபாலரும் பயணம் செய்யலாம்! www.forest.kerala.gov.in serviceonline.gov.in/trekking எனும் வலைதளத்தில் சென்று online-ல் booking செய்து பயணம் செய்யலாம்! முதலில் வருவோருக்கு முன்னுரிமை எனும் அடிப்படையில் தினமும் 100 நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்! கேரளத் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து நெடுமங்காடு Nedumangadu - விதுரா Vithura - Bonacaud போனக்காடு Bonakkad பஸ்சில் பயணிக்கலாம்! திருவனந்தபுரத்திலிருந்து தினமும் அதிகாலை 6 மணி முதல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. இல்லாவிடில் நெடுமங்காடு சென்று அங்கிருந்தும் போனக்காடு செல்லலாம்.போனக்காட்டிலுள்ள வனத்துறை சோதனை மையத்தில் அனுமதிச் சீட்டு பெற்று, அங்கிருந்து வாகனம் மூலம் சுமார் 10 கி.மீ. தொலைவு சென்றால் Bonacaud Picket Station போனக்காடு பிக்கெட் ஸ்டேசன் என்ற இடம் வரும்.அங்கிருந்து தனியாக யாரையும் இங்கு மலையேற அனுமதிப்பதில்லை. ஒவ்வொரு குழுவாகவே அனுமதி வழங்கப்படுகிறது.இதற்காக வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ள வழிகாட்டிகளுடன் இரண்டு அல்லது மூன்று நாள் பொதிகை மலை ஆன்மிக நடைப்பயணம் தொடங்கும்! போனக்காட்டில் காலை 8 மணிக்கு பயணம் ஆரம்பமாகும்! பயணம் ஆரம்பித்த அரைமணி நேரத்தில் முதலில் விநாயகர் கோயிலை அடையலாம். அங்கிருந்து சுமார் ஒரு மணி நேர பயணத்தில் கரமனையாறு என்ற இடத்தை அடையலாம். பகலையே இரவு போல் காட்டும் அடர்ந்த வனப்பகுதி இங்கிருந்துதான் தொடங்குகிறது! சுமார் 8 கி.மீ. தூரமுள்ள இந்த வழித்தடத்தில் சுமார் 6 மணி நேரம் நடந்து சென்றால் மாலை வேளையில் Athirumalai Estate அதிருமலை எஸ்டேட் என்ற இடம் நம்மை வரவேற்கும்! அங்கு கேரள வனத்துறையினர் பக்தர்கள் தங்குவதற்காகக் கட்டியுள்ள அதிருமலை கேம்ப் ஷெட்டில் முதல் நாள் இரவு தங்க வைக்கப்படுவர்! மறுநாள் அதிகாலையிலேயே அகத்தியக் குறு முனிவரின் வழிபாட்டுக்குக் கொண்டு செல்லும் பூஜைப் பொருள்களை எடுத்துக் கொண்டு, "அதிருமலை"யின் காவல் தெய்வத்தை வணங்கி விட்டு அடுத்த 8 கி.மீ.க்கான அடுத்தக்கட்ட ஆன்மிக நடைபயணம் ஆரம்பமாகும்.சுமார் 1 மணி நேர நடைப்பயணத்தில் பொதிகை மலையின் அடிவாரத்தை அடையலாம். அங்கு சிறிது நேரம் ஓய்வு! இரண்டாம் நாள் தமிழகத்தில் உள்ள நெல்லை மாவட்டத்தில் நுழைவோம். பொதிகை மலைக்கு வருவோரை வரவேற்கும் திருநெல்வேலி மாவட்டம் : அங்குள்ள தென் பொதிகை மானசரோவரில் சிறு குளியலை முடித்துவிட்டு, மீண்டும் நடைபயணம் தொடர்ந்தால் 15 நிமிடத்தில் தமிழக வனப்பகுதி எல்லையான நெல்லை மாவட்டம் "சங்கு முத்திரை" என்ற இடம் வரவேற்கும்!இரண்டாம் நாள் பயணம் அடுத்த நாள் பயணம்தான் முதல் நாளை விட சவாலானது. பின்னாடி வரும் நபரையே முகம் தெரியாதமாதிரி ஆக்கிவிடும் இங்குள்ள மேகங்கள். அந்த உயரத்துக்கு மேல் அனைத்தும் மேகங்கள்தான். குளிரைத் தாங்கிக்கொண்டு, சரிவான பாதைகளில் கயிற்றைப் பிடித்துக்கொண்டு பயணிக்கவேண்டும் இரண்டாம் நாள் நெல்லையின் சிகரத்தை நோக்கி நடைப்பயணம் சங்குமுத்திரை இது கடல்மட்டத்தில் இருந்து சுமார் 4,000 அடி உயரம் கொண்டது. சங்கு போன்ற அமைப்பை உடையதால் சங்கு முத்திரை. கேரளத்தினர் இப் பகுதியை "பொங்காலைப்பாறை" என்று கூறுகின்றனர்.இந்த சங்குமுத்திரை வனப்பகுதியின் மற்றொரு புறம் உள்ள கிடுகிடு பள்ளத்தாக்கில் வற்றாத ஜீவநதியான "பொருநை" என்று அழைக்கப்படும் தாமிரபரணி உற்பத்தியாகும் "பூங்குளம்" என்ற சுனை தெரியும்! திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் என 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு ஜீவநாடியாக விளங்கும் அகத்தியர் தந்த தாமிரபரணியின் பிறப்பிடத்தை கண் குளிர தரிசித்து வணங்கி விட்டு பொதிகை மலை பயணத்தைத் தொடர வேண்டும்! செங்குத்தான பகுதியில் மலையில் கட்டப்பட்டுள்ள கயிறு மற்றும் இரும்புக் கயிறுகளைப் (ரோப்-Rope) பிடித்துக் கொண்டு (ஒருபுறம் கால் சிறிது இடறினால் கூட கிடுகிடு அதள பாதாளத்தில் விழ நேரிடும்) மிகவும் கவனத்துடன் நான்கு கால்களையும் ஊன்றி நிதானமாக ஏறிச் சென்றால் கடல் மட்டத்தில் இருந்து 6129 அடி அதாவது 1868 மீட்டர் உயரமுடைய "பொதிகை மலை" உச்சியை சிகரத்தை நாம் அடையலாம்! பொதிகை மலை உச்சியில் குறுமுனி அகத்தியரைப் போலவே மிகவும் குட்டையான மரங்களைக் கொண்ட சிறு சோலையில் குறுமுனிவர் அகத்தியரின் ஏகாந்த சிலையை தரிசிக்கும்போது... நாம் மிகவும் சிரமப்பட்டு மலை ஏறி வந்த சிரமங்கள் எல்லாம் மறந்து, இந்த அதி அற்புதமான நெஞ்சத்தைக் கொள்ளை கொள்ளும் வந்தாரை வாழ வைக்கும் சித்தர்களுக்கெல்லாம் சித்தராகிய அகத்தியர் பெருமானின் ஆனந்தத் தரிசனத்துக்குத்தானா இப்பிறவி எடுத்தோம் என்கின்ற உச்சக்கட்ட பரவச நிலை உண்மையான பக்தர்களாகிய நமக்குத் தோன்றும்! ஆனைமலைத் தொடரின் ஒரு பகுதியாகவும், மகேந்திரகிரி மலை, முண்டந்துறை வனப்பகுதியின் தலையைப் போலவும் விளங்கும் பொதிகை மலை உச்சியில் திடீர் திடீரென வெயிலும் சில நேரங்களில் உடலை நடுநடுங்கச் செய்யும் அளவுக்கு பலத்தக் குளிர்காற்றும், சில நேரம் மழையும், சாரலும் பெய்யும்! ஆன்மிக மணமும் மனமும் நிறைந்த ஆனந்த அனுபவத்துடன் அகத்தியப் பெருமானுக்கு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்து வழிபாடு செய்த பின்னர் உள்ளம் நிறைவுடன் மீண்டும் நம் இல்லம் நோக்கியப் பயணம் இனிதே ஆரம்பமாகும்! அகத்தியர் மலை ஏற்றத்தைப் போலவே மிகவும் கவனமாக கீழே இறங்கத் தொடங்கி, சுமார் மூன்று மணி நேரம் நடந்தால் மீண்டும் அதிருமலை கேம்ப் ஷெட்டை அடையலாம். அதிருமலை கேம்ப் ஷெட்டில் உணவருந்தி விட்டு, சிறிது நேரம் ஓய்வுக்குப் பின்னர் இரவு 7 மணிக்கு அங்கே கூட்டுப் பிரார்த்தனை நடைபெறும்! முதல் நாள் இரவைப் போலவே, இரண்டாம் நாள் இரவும் அங்கேயே தங்கி விட்டு, மறுநாள் மூன்றாம் நாள் காலையில் அதிருமலை காவல் தெய்வத்தையும், பொதிகை சிகரத்தையும் வணங்கிவிட்டு சுமார் 5 மணி நேரம் நடந்தால் போனக்காடு பிக்கெட் ஸ்டேஷனில் பொதிகை மலை பயணம் நிறைவு பெறும்! மிகவும் வேகமாக நடைபயணம் செய்பவர்கள் சிலர் இரண்டாம் நாள் அதிகாலையிலேயே புறப்பட்டு அகத்தியரைத் தரிசித்து விட்டு விறுவிறுவெனக் கீழிறங்கி அதிருமலையிலிருந்தும் கீழிறங்கி போனக்காடு பிக்கெட் ஸ்டேஷன் வந்தடைவோரும் உண்டு! இந்த மூன்று நாள் பயணத்தின்போதும் சுத்தமானக் காற்று, மூலிகை கலந்த நீர் இவையெல்லாவற்றையும் விட செல்போன் தொந்தரவே இல்லாமல் பார்க்கும் இடங்கள் எல்லாம் பசுமை நிறைந்து மனதைக் கவரும்! உடலும், உள்ளமும் புத்துணர்வு பெறும்! ஒவ்வொரு ஆண்டும் தமிழ்க் குறுமுனி அகத்தியர் பெருமானைத் தரிசிக்க ஜனவரி மாதம் தை மாதம் மகரவிளக்கு முதல் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் மாசி மாதம் சிவராத்திரி வரை அனுமதி வழங்கப்படுகிறது! நேரிலும் ஆன்லைனிலும் இதற்கான அனுமதியைப் பெறலாம்! www.forest.kerala.gov.in serviceonline.gov.in/trekking ஆகிய website-ல் apply பண்ணலாம்! இந்த 2022-ஆம் ஆண்டிற்கான பயணத்தில் பொதிகை மலை செல்ல விரும்புகிறவர்கள் ஆன்லைனிலும் நேரில் சென்று கேரள வனத்துறையிலும் பதிவு செய்யலாம் எனக் கேரள வனத்துறை அழைப்பு விடுத்திருந்தது .தற்போது கொரனா காரணமாக பொதிமலை யாத்திரை முன்பதிவை நிறுத்தி வைத்துள்ளது. 14 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் ஒவ்வொரு நபருக்கும் ரூபாய் 1100-ம் இந்தியர் அல்லாத வெளிநாட்டவராக இருப்பின் ரூபாய் 2200-ம் அனுமதி கட்டணமாக வசூலிக்கப்படும்.ஒன்று முதல் ஐந்து பேர் வரை உள்ள குழுவினருக்கு சேவைக் கட்டணமாக 50 ரூபாயும் பத்து பேர் வரை உள்ள குழுவினருக்கு சேவைக் கட்டணமாக 70 ரூபாயும் கூடுதலாக வசூலிக்கப்படும்!அதி அற்புதங்கள் ஆனந்தங்கள் நிறைந்த, அரிய பொக்கிஷங்களைக் காணக் கிடைக்கும் ஒரு புதிய இனிய ஆன்மிக பயண அனுபவத்தைப் பெற விரும்புகிறீர்கள் என்றால் நீங்கள் உடனடியாக பொதிகை மலைக்கு உடனடியாகக் கிளம்பி விடலாம்! குறிப்பு :மிகவும் அடர்த்தியான மரங்கள் இருப்பதனால் பட்டபகலிலேயே இருள் சூழ்ந்து காணப்படும் இடங்களும் இங்குள்ளன. ஏறுவதற்கு கடுமையான பாறைகளும் இருப்பதால், முடிந்தவரை வயதானவர்கள் இங்கு செல்வதை தவிர்க்கவேண்டும். பொதிகை மலை பயணம் தொடரும். பொதிகைமலை சிறப்புகள் குறித்து அடுத்த பதிவில்

குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*

நீரால் கோலம் போடாதே நெற்றியைக் காலியாய் விடாதே குச்சியைக் கொளுத்தி வீசாதே இரவில் ஊசியை எடுக்காதே கால் மேல் காலைப் போடாதே கவட்டையில் துணியை சொருகாதே காலையில் அதிகம் தூங்காதே மாலையில் அதிகம் சிரிக்காதே தொடையில் தாளம் போடாதே தரையில் வெறுமென கிடக்காதே மலஜலம் அடக்கி வைக்காதே மார் தட்டி பேசாதே நகத்தை நீட்டி வளர்க்காதே ஆலயம் செல்லத் தவறாதே அளவு இல்லாமல் உண்ணாதே அள்ளிக் கொடுக்க மறவாதே அனைத்தையும் உண்ணத் தவறாதே அதிகமாக பேசி நோகாதே எண்ணெய் தேய்க்க மறக்காதே முச்சந்தியில் நீயே உண்ணாதே விரிப்பைச் சுருட்ட மறக்காதே பகலில் படுத்து உறங்காதே இரவில் உறங்காமல் இருக்காதே குளிக்கும் முன்பு புசிக்காதே ஈரம் சொட்ட நிற்காதே திரு நாமம் சொல்ல மறக்காதே நல்ல குடியைக் கெடுக்காதே தீய வார்த்தை பேசாதே தீமைக்கு துணை போகாதே தீயோர் சொல் கேட்காதே நின்று தண்ணீர் குடிக்காதே எதையும் காலால் தட்டாதே எச்சில் பட்டதை திண்ணாதே 40ல் 50 போகாதே... கொண்டோரே, சான்றோரே, ஆண்டோரே, எல்லாம் சொல்லிக் கொடுத்தாரே எம் மூத்தோரே இப்போது எல்லாம் கேட்டு தெரிந்தும் நோய் நொடியில் சிக்கி தவித்தீரே சிந்தனை செய்ய மறந்தீரே புத்தியை தீட்ட தவரிட்டீரே வந்தவன் போனவன் ஆண்டானே... ஆண்டவன் எந்நாட்டவன் தெரியாதே. *என்ன அழகான வரிகள் இதை முதலில் நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்கலாமே*