07/11/2010 பாலாஜி பிரியா தம்பதி புதுவரவுக்கொரு பூச்செண்டு


புதுவரவுக்கொரு பூச்செண்டு பூத்துக் குலுங்குகிறது பூமகனே உன் வரவால்...


வளர்பிறையில் வந்தவனேவளமோடு வாழ்ந்திடுவாய்!!மாமா என அழைக்க அருமையாய் வந்தவனே...

நவம்பரில் பிறந்தவனேபுகழோடு வாழ்ந்திடுவாய்!!!மென்னகை புரிபவனே

மேன்மையோடு இருந்திடுவாய்!!மாமா அடிக்க மாட்டேன்

அரளிப் பூச்செண்டாலே அன்பாகத் தந்திடுவேன் அழகான பூச்செண்டு...

பூமகனை ஈன்றெடுத்த பூவைக்கும் ( பிரியா )

பூரித்து நிற்கும் புதுத்தந்தைக்கும் ( பாலாஜி )

மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

(நவம்பர் 7-ல் இவ்வுலகில் அடியெடுத்து வைத்த குட்டிப்பயலுக்கு  மாமாவின் வாழ்த்து

வெற்றி...என்பது...


வாழ்வின் எல்லா நேரங்களும் நமக்கு சாதகமாய் இருந்து விடுவதில்லை. கொஞ்சம் வாழ்வின் பக்கம் வேறு மாதிரி இருந்து விட்டால் விரக்தியும் இயலாமையும் நம்மிடம் வந்து சேர்ந்து விடுகிறது. எதிர்மறையான சூழ்நிலைகளையும் சாதகமாக மாற்றி கொள்வது என்பது ஒரு கலை. அப்படி இருப்பதற்கு நமது மனப்பாங்கும், சூழ்நிலைகளை அணுகும் முறையிலும் திடமான ஒரு பார்வையும் தீர்க்கமான முடிவுகளும் எல்லாவற்றையும் புரட்டிப் போடும்....


ஓரயிரம் வாய்ப்புகள் நம்மிடம் இருக்கும் போது வெற்றிகொள்ளுதல் என்பது எளிது ஆனால்...தனி ஆளாக நின்று சூழ் நிலைகளை எதிர்கொள்ளுதல் என்பதில் வலியும் அந்த வலியின் பின்னால் எதிர் கொள்ளலில் மனோ வலிமையும்தானே இருக்க முடியும். வலைப்பக்கங்களை மேய்ந்து கொண்டிருந்த போது இந்த கட்டுரை கண்ணில் பட்டது.........உத்வேகத்தை கொடுக்க கூடிய இந்த கட்டுரையை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில்  பெருமிதம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வேறு சமயங்களில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஒருவருடைய பிரச்சினையை மற்றவரால் நிச்சயமாக முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. தலைவலியும் திருகுவலியும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும்! பிரச்சினையில் ஒருவர் இருக்கும்போது, மற்றவர் சொல்லும் சமாதான எந்த அளவிற்கு ஆறுதல் தரும் என்பது, பிரச்சினையின் வீரியம் மற்றும் ஆறுதல் சொல்லும் நபரை பொறுத்தது! ஆனால் அதிலிருந்து மீண்டு வருதல் என்பது தன்னம்பிக்கை சார்ந்தது. வாய்ப்புகள் இருந்தாலும் தன்னம்பிக்கை இல்லையென்றால் யாராலும் பிரச்சினையிலிருந்து மீள்வது கடினம்தான்


ஒரு உண்மைக் கதை. ஒரு இளைஞன். அவன் விருப்பப்பட்ட படிப்பு சில காரணங்களால் தடைபட்டது. அடுத்து என்ன செய்வது என்று அவனுக்கு புரியவில்லை. அவனை வீட்டில் யாரும் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் அவனுக்கு தாழ்வு மனப்பான்மை, விரக்தி அதிகமானது. தற்கொலை எண்ணம் கூட வந்தது. ஆனால் அதற்கும் அவனிடத்தில் தைரியம் இல்லை. அவன் நிலை பார்த்து அவன் பெற்றோர் அவனுக்கு ஆறுதல் சொன்னார்கள், ஊக்க்மளித்தார்கள். நாளடைவில் அவன் மனதில் இருந்த துளி தன்னம்பிக்கை விதை மரமாக வளர்ந்தது. தன் இலட்சியங்களை அடைந்து விடுவோம் என்று விடா நம்பிக்கையோடு இன்று வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தன்னம்பிக்கை என்பது தன் மீது வைக்கும் நம்பிக்கை. தன் மீதும் தன்னை சுற்றியுள்ளவர் மீது நம்பிக்கையின்றி காட்வுள் நிறைவேற்றுவார் என சிலர் நம்புவார். அதுவும் தவறில்லை. நம்பிக்கை என்பது எரிபொருள் போன்றது அது இருக்கும் வரை நம்மை இயக்கிக் கொண்டே இருக்கும்.

தன்னம்பிக்கை என்பது இரண்டு விஷயங்களை கொண்டுள்ளது.

1. சுய ஆற்றல் 2. சுய மதிப்பீடு. சுய ஆற்றல் என்பது நம்மிடமும் நம்மை போன்றவர்களிடமும் உள்ள திறமைகளை உணரும்போது, இலக்குகளை அடையும்போது பெறும் உணர்வு. இது பெறப்படும் வெற்றிகளை சார்ந்தது. ஒரு செயலில் வெற்றிகளை பெற்றால் அதை செய்ய முடியும், தோல்வியடைந்தால் செய்ய முடியாது என முடிவுக்கு வருகிறோம். சுய மதிப்பீடு என்பது உங்களை பற்றி நீங்கள் உணரும் உணர்வு. இது மற்றவர்களின் கருத்தையும் சார்ந்தது மற்றவர்களின் கருத்திலிருந்தும் நாம் நம்மை பற்றிய மதிப்பீட்டை செய்கிறோம். தன்னம்பிக்கையின்மை உங்கள் முழுமையான மதிப்பை நீங்கள் புரிந்து கொள்ளாததால் உருவாகிறது.

தன்னம்பிக்கையை வளர்த்தல்-சில வழிகள்:

1. உடைகள் ஒருவர் தன்னைப் பற்றி உணர்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. உங்கள் வெளித்தோற்றம் குறித்து உங்களை விட வேறு யாரும் அதிகம் கவலைப்பட போவதில்லை. நீங்கள் நன்றாக உடையணியாவிட்டால், அது உங்களை மற்றவரிடத்தில் நீங்கள் வெளிப்படுத்துவதில் மாற்றத்தை உண்டாக்கும். குளியல், முகச்சவரம், சுத்தமான உடை, நவீன நாகரீகத் தோற்றம் போன்றவை கூட காரணிகளாக இருக்கலாம். இதற்காக நீங்கள் உடையணிவதில் பெரும் கவனம் செலுத்த வேண்டும் என்றில்லை. உங்கள் உடை உங்கள் மனநிலையில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது. உடல் வெளித்தோற்றம் போன்றே உடல் உள்தோற்றமும் தன்னம்பிக்கை வளர்ப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனது. குண்டான/ஒல்லியான சிலர் தன்னம்பிக்கையின்றி காணப்படுவதை கண்டிருக்கலாம். முடிந்தவரை உடலமைப்பை பேண முயற்சியுங்கள். மேலும் உங்கள் உடலமைப்பை மனதளவில் ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்களும் மற்றவர்களும் சமம் என எண்ணுங்கள்.

2. ஒருவரின் நடையை வைத்தே அவரின் மனநிலையை கண்டறியலாம். தன்னம்பிக்கை உடைய நபர்கள் விரைவாக நடப்பார்கள். அவசரமில்லை என்றாலும் அவர்களின் நடையில் ஒரு துள்ளல், வேகம் இருக்கும். தளர்வாக நடத்தல்/உட்காருதல், மந்தமான அசைவுகள் தன்னம்பிக்கை இல்லாமையை வெளிப்படுத்துகிறது. எப்போது நேராக நின்று/உட்கார்ந்து முகத்தை நேராக வைத்துக் கொண்டு கண்ணுக்கு கண் பார்த்து பேச/கவனிக்க வேண்டும். இது நேர்மறை விளைவுகளை உண்டாக்கும். பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள், பொது உடங்களில் சிலர் முன் வரிசையில் உட்கார தயங்குவார்கள், இது தன்னம்பிக்கை குறைபாட்டை காண்பிக்கிறது. முடிந்தவரை முன்னால் உட்காருங்கள். பல விவாதங்கள், பேச்சுக்கள், ஏன் சாதாரணமாக பொதுமக்கள் கூடி பேசுமிடத்தில் கூட சிலர் பேசாமல் அமைதியாக கேட்க மட்டும் செய்வார்கள். தான் ஏதாவது பேசினால் தன்னை குறைவாக மதிப்பிடலாம் என பயந்து பேசாமல் இருப்பார்கள். உங்கள் கருத்துக்கள் தவறோ சரியோ தைரியமாக பேசுங்கள் மேற்கண்ட அனைத்தும் நம் மனநிலையின் பெரும்காரணிகளாகும் இவற்றை பற்றி வேறொரு பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

3. ஊக்கப்படுத்தும் கட்டுரைகளை படியுங்கள், பேச்சுக்களை கேளுங்கள். இது தன்னம்பிக்கை உண்டாக்கும் முக்கிய வழியாகும். உங்கள் பலங்கள் மற்றும் குறிக்கோள்களை முன்னிலைப்படுத்தும், ஒரு 30-60 நிமிட பேச்சை எழுதுங்கள். பிறகு இதை தன்னம்பிக்கை அதிகப்படுத்த வேண்டும் என நினைக்கும்போது, கண்ணாடி முன் நின்று பேசிப் பாருங்கள். உங்கள் தேவைகளை பற்றி அதிகமாக யோசிக்கும்போது, அவை உங்களிடம் இல்லாததற்கான காரணங்களை மனம் உருவாக்கும். இது உங்களுக்குள் பலவீனங்களை உண்டாக்கும். இதனால் கடந்தகால வெற்றிகள், உங்கள் தனிப்பட்ட திறமைகள், அன்பான உறவுகள், நேர்மறையான நல்ல தருணங்களை நினைத்து பாருங்கள். இவை உங்கள் பலவீனங்களை நீக்கி வெற்றியை நோநோக்கி செல்ல உதவும்.

4. உங்களைப் பற்றி எதிர்மறையாக சிந்திப்பதற்கு பதிலாக, மற்றவர்களை பாராட்டும் பழக்கத்தை உண்டாக்குங்கள். மற்றவர்களை நீங்கள் பாராட்டும்போது, மறைமுகமாக உங்களையும் ஊக்கப்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் பாராட்டு முழுமனதோடு வெளிப்பட வேண்டும். நாம் நம் சொந்த ஆசைகளைப் பற்றி அடிக்கடி சிந்திக்கிறோம். மற்றவர்களின் தேவையை பற்றி போதுமான அளவு சிந்திப்பதில்லை. நம்மை பற்றி சிந்திப்பதை நிறுத்தி விட்டு உலகிற்கு நம்மால் என்ன செய்ய முடியும் என சிந்திக்க ஆர்ம்பித்தால், நம் ஆசைகள் நிறைவேறவில்லையே என்ற கவலை மனதில் தோன்றாது. இது தன்னம்பிக்கையையும் செயல்திறனையும் அதிகப்படுத்தும்.

தன்னம்பிக்கையை வளர்த்தல் என்பது உடனடியாக செய்யக்கூடியது கிடையாது. நாளடைவில் வளர்ப்பதாகும். தன்னம்பிக்கை எப்போதும் சமநிலையில் இருக்க வேண்டும் அது எப்போதும் ஆணவமாக மாறக் கூடாது. உங்கள் தன்னம்பிக்கை மனதில் மட்டும் இருக்க வேண்டும். அது அடிக்கடி வார்த்தைகளில் வெளிப்பட்டால் ஆணவமாக மாறலாம்.

பயணம்...


நெடுந்தூர பயணம்
தொடங்கிய இடம் நினைவில் இல்லை
முடியும் இடமும் தெரியவில்லை

இத்தனை வருட பயணத்தில்
இலக்கை இன்னும் அடையவில்லை
இலக்கே எனக்கு புரிய வில்லை
என்ன கொடுமை சார் இது
எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ?
ஒன்னும் தெரியாமலயே
பயணிக்கிறேன் ........

கடந்து வந்த பாதையை
திரும்பி பார்த்தேன்
தொடங்கிய இடம் தெரியவில்லை

தடுக்கி விழுந்த இடம்
வழுக்கி விழுந்த இடம்
முட்டிக் கொண்ட இடம்
எல்லாம் தெரிகிறது......

எங்கே போகிறேன்
ஏன் போகிறேன்
என்றுதான் தெரியவில்லை......

பெரிய கோயில் 1000 ஆண்டுகள்


அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.


இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்

வளமான நாடுகளுக்கு செல்வோர் ஆய்வு


லண்டன் : அதிகமாக சம்பாதித்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக, தங்கள் சொந்த நாடுகளை விட்டு, வளமான நாடுகளுக்கு செல்வோர், உண்மையில் அப்படி சந்தோஷமாக இருக்கின்றனரா என்று ஓர் ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவு எதிர்மறையாகத் தான் அமைந்தது.

நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் உள்ளவர்கள், பிரிட்டன், அமெரிக்கா போன்ற வளமான நாடுகளுக்குச் சென்று தங்கள் திறமைக்கேற்ப அதிகளவில் சம்பாதித்து அதன் மூலம் வாழ்வில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அந்நாடுகளுக்குச் செல்கின்றனர். சொந்த நாடுகளிலிருந்து அயல் நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து செல்வோரின் வாழ்க்கை சந்தோஷகரமானதாக இருக்கிறதா அல்லது அவர்கள் சென்ற நாட்டில் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனரா என்று சமீபத்தில் ஓர் ஆய்வு நடந்தது.

"பொருளாதார புலம் பெயர்வும் மகிழ்ச்சியும்: தாயகத்தினர் மற்றும் குடியேறுவோருக்கு இடையிலான ஓர் ஒப்பீடு' என்ற தலைப்பில் பிரிட்டனைச் சேர்ந்த சமூகவியலாளர் டேவிட் பர்ட்ராம் என்பவர் இந்த ஆய்வை நடத்தினார். மொத்தம் 1,400 பேர் இந்த ஆய்வில் கலந்து கொண்டனர். ஆய்வின் இறுதியில், குடியேறுவோர் தாங்கள் எதிர்பார்த்த படி மகிழ்ச்சியாக இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து டேவிட் கூறியதாவது: அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது என்பதை தான் இந்த ஆய்வு நமக்கு காட்டுகிறது. அயல் நாடுகளிலிருந்து வளமான நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.

தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். இந்த ஆய்வும், அது புலம் பெயர்வோர் விஷயத்தில் சரி தான் என்பதை காட்டுகிறது. ஆனால், வளமான ஒரு நாட்டில் வந்தேறியாக வாழ்வது என்பது மிகவும் கடினமானது. 

பாருங்கள் வெளி நாட்டில் வாழும் இந்தியர்களின் புலம்பலை இளைய சமுதாயமேய்.இனி வரும் காலங்களில் நமது நாட்டிலை இருந்து குறைவாக சம்பாதித்தாலும் நிறைவாக வாழமுடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதோ என்னுடைய புலம்பல் விடிகாலை எழுந்து கடல்கரை மணலில் நடந்து அந்த இனிமையான காத்தை சுவாசித்து நடக்கும் அலகை தனி.சரியாக ஒன்போது மணிக்கு இட்லி சாம்பார் தோசை என்று சாபிட்டு விட்டு பத்து மணிக்கு வெளியல் செண்டு நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் சுகமை தனி.மதியம் சரியாக ஒருமணிக்கு சுவையான மீன் குழம்பு இரண்டு கூட்டு பொறியல் ரசம் இப்படி சுவையான கெமிகளை இல்லாத சாப்படை சாப்பிட்டு விட்டு .சரியாக மூன்று மணிக்கு ஒரு குட்டி தூக்கம் நான்கு மணியில் இருந்து ஆறுமணிவரை மைதானத்தில் கிரிகெட் விளையாட்டு ஏழு மணியில் இருந்து ஒன்பது மணிவரை மறுபடியும் நண்பர்களுடன் அரட்டை பத்து மணிக்கு ரொட்டியும் குர்மாஉம்.நல்ல தூக்கம் இப்படிபோய் கொண்டிருந்த நமது வாழ்க்கை வெளி நாட்டின் வாழ்க்கை என்பது இயந்திர தனமானது என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த உலகத்தில் நாம் வாழ்வதை கொஞ்ச காலம் தான் அந்த வாழ்கையை நாம் விரும்பும் படி வாழ்ந்து விட்டு போகவிண்டியது தான். இப்படி ஒரு இயந்திர வாழ்க்கை தேவைதானா ஆசை துன்பத்திற்கு காரணம் என்பது உண்மை...

அழகாக இருக்க!- 12 வழிகள்!

                                                                      மாதங்கி


1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.

2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.

3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா? சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.
4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா!

6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே!! கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்!

7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே!!

8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.

9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.

10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.

11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.

12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.

தேன் சாப்பிடுங்க நோயை விரட்டுங்க..






உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும், தேனும் வெந்நீரும் கலந்து அருந்தினால் பருத்த உடல், மெலியும், ஊளைச் சதை குறையும் உடல் உறுதி அடையும்.

தேனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து அருந்தினால் வாந்தி, குமட்டல் ஜலதோஷம், தலை வலி குணமாகும்.

தேனுடன் வெங்காயச்சாறு கலந்து சாப்பிட்டால் கண்பார்வை பிரகாசம் அடையும்.

தேனும், முட்டையும், பாலும் கலந்து சாப்பிட்டுவந்தால் ஆஸ்துமா உபாதையிலிருந்து தப்பலாம்.

இருமல், சளித் தொல்லை நுரையீரல் தொடர்பான நோய் எது இருந்தாலும் பார்லிக் கஞ்சியை வடிகட்டி அதில் தேன் கலந்து சாப்பிட, இருமல் மட்டுப்படும். சளித் தொல்லை குறையும்.

தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இருதய நோய்கள் தீரும்.

உடம்பில் இரத்தக் குறைவு அல்லது சோகை நோய் இருந்தால் தேனும், பாலும் சாப்பிட்டு வந்தால் சோகை நோய் நீங்கும்.

தேனுடன் சுண்ணாம்பைக் கலந்து, நன்றாகக் குழைத்து பழுக்காத கட்டிகள் மேல் பூச கட்டிகள் பழுக்கும்.

மீன் எண்ணெயோடு தேனைக் கலந்து உண்டு வந்தால், ஆறாத புண்கள் ஆறிவிடும்.

கருஞ்சீரகத்தை நீர் விட்டுக்காய்ச்சி அதில் தேன் கலந்து சாப்பிட, கீழ் வாதம் போகும்.

வயிற்றுவலி ஏற்பட்டவர்களுக்குத் தொப்புளைச் சுற்றிலும் தேன் தடவினால் வலி நீங்கும்.

தேனோடு பாலோ, எலுமிச்சம் பழச்சாறோ கலந்து சாப்பிட பித்த நீர்த் தொந்தரவுகள் குறையும். கல்லீரல் வலுவடையும்.

அரை அவுன்ஸ் தேனுடன், அரை அவுன்ஸ் இஞ்சிச்சாறு கலந்து காலை நேரங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வர, இரத்த சுத்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும். நரம்புத் தளர்ச்சிகளும் நீங்கும்.

அல்சர் நோய்க்கு சாப்பாட்டிற்கு முன் இரண்டு கரண்டித் தேனைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, குணமாகும்.

முருங்கைக்காய்ச் சாறுடன் சமளவு தேன் கலந்து பருகினால் நீர்க்கோவை நீங்கும்.

தேன் மிகச் சிறந்த உணவுப் பொருளாகும். தேன் மூலம் எல்லாப் பிணிகளையும் நீக்கமுடியும். அதிகாலையில் வெறும் வயிற்றில் தேனை நாவால் தொட்டுச் சாப்பிட்டு வந்தால் எந்த வியாதியும் நமக்கு வராது.
ஆனால், தேன் சுத்தமான தேனாக இருக்கவேண்டும்.

ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண் காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும் வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும். குளிர்ச்சியால் ஏற்படும் எல்லா வியாதிகளையும் உடல் எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.

அதிகாலையிலும், படுக்கச் செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன், ஏலக்காய், ரோஜா இதழ்கள் சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம் காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகிவிடும்.

என்றும் இளமையுடன் இருக்க வேண்டு-மென விரும்புவோர் தினமும் தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக் கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும் தேனை அருந்திவர வேண்டும்.

சிறந்த மருத்துவரும், மாபெரும் சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107 வயது வரை நோய் நொடியின்றி, திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான். ``ஒவ்வொரு நேரமும், உணவு உண்ணும்போது தேனையும் சேர்த்து உண்டு வந்தேன்'' என்று கூறினார் அவர்.

நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில் சென்று சேருகிறது. அங்கு ஜீரண உறுப்புகளெல்லாம் ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து, பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.

இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச் செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச் சத்து குறைந்திருந்-தால் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின் பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.

ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால் அரை மணி நேரத்தில் நரம்புகள் சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை, கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம் காண்பார்கள்.

மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத் தேய்த்துவிட வேண்டும். அத்துடன் எப்பொழுது உணவு உட்கொண்டாலும் ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள் வலிக்காது.

படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும் பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன் கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில் தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத் தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன், மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில் அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத் தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.

ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்து விடுபட தினமும் தேனைப் பருகி வரவேண்டும்.

120 கிலோ எடையுள்ள ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர் உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத வைத்தியமில்லை. ஆனாலும், உடல் எடை குறைந்தபாடில்லை. பின்னர், தேனை உண்டு வந்தார். சில நாட்களில் அவருடைய உடல் எடை குறைய ஆரம்பித்துவிட்டது.

இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக, தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த நிறத்தில் இருக்கும்.

நமது உடலுக்கு கார்போஹைட்ரேட் சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ, ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை. இதில் இரும்பு, தாமிரம், மங்கனீசு, பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல இரத்த விருத்தி ஏற்படும்.

சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை, அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி, தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல், மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் காலை நேரத் தொல்லைகள், ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில் சர்க்கரைச் சத்து குறைந்த நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த பயனுள்ளது.

ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில் படுக்கும்போது உண்டு. வந்தால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும். நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில் கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம், பிராங்டீஸ் எனப்படும் சுவாசத் தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.

இதனைத் தவறாது உபயோகித்தால் சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும் உடல் தாங்கும் தன்மை பெறும். உடல் ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை

தமிழ் குடிமகன்' ஆக்குங்க : முதல்வருக்கு கோரிக்கை..

   

   கோவையில் செம்மொழி மாநாடு நடந்து முடிந்த, "உற்சாகம்' இன்னும் அங்கு குறையவில்லை. இதை நிரூபிப்பது போல், கோவையில் இருந்து ஒரு வாசகர், முதல்வருக்கு முகவரியிட்டு, தினமலர்க்கு அனுப்பியுள்ள, "இ-மெயில்' கடிதம்: ஐயா, எல்லாரும் வியக்கும்படி, எங்க ஊரில செம்மொழி மாநாடு நடத்துனீங்க... எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்னு மாநாட்டில நீங்க முழக்கமிட்டீங்க... ஆனா, தமிழகத்தில ஒரு இடத்தில மட்டும், சுத்தமா தமிழ் இல்லாம, முழுக்க, முழுக்க இங்கிலீஸ்தான் ஆக்கிரமிச்சு இருக்கு. நீங்கதான் இந்த விஷயத்தில தலையிட்டு, ஒரு நல்ல முடிவா எடுத்து, தமிழ்பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கணும்.

தமிழுக்கு மரியாதை இல்லாத அந்த இடம், "டாஸ்மாக்...' அங்க இருக்கிற சரக்குக்கு எல்லாம், தமிழ்லே பேர் வைச்சு சாதாரண, "குடி'மக்களை, "தமிழ் குடிமக்களாக' மாற்ற வேண்டுகிறேன். அதுக்காக, நானே சில பெயர்களை யோசிச்சு வைச்சிருக்கேன். இதை அப்படியே ஏத்துக்கணும்னு அவசியமில்லை. நீங்க வேணும்னா, இதுக்குன்னு தமிழ் புலவர்களைக் கொண்ட ஒரு குழு அமைச்சு, நல்ல, நல்ல பெயரா வையுங்க...

அவர் அனுப்பியுள்ள பட்டியல்:

சரக்கு பெயர் தமிழ் பெயர்

1. மிடாஸ் கோல்டு - தங்கமகன்

2. நெப்போலியன் - ராஜராஜசோழன்

3. கோல்கொண்டா - கங்கை கொண்டான்

4. வின்டேஜ் - அறுவடைத் தீர்த்தம்

5. ஆபிசர்ஸ் சாய்ஸ் - அதிகாரிகள் விருப்பம்

6. சிக்னேச்சர் - கையொப்பம்

7. ஓல்டு மங் - மகா முனி

8. ஓல்டு காஸ்க் - பீப்பாய் சரக்கு

9. கேப்டன் - தனிச் சரக்கு

10. ஜானிவாக்கர் - வெளியே வா

11. ஓட்கா - சீமைத்தண்ணி

12. கார்டினல் - பொதுக்குழு

13. மானிட்டர் - உளவுத்துறை

14. பேக் பைப்பர் - "ஊத்து'க்காரன்

15. சீசர் - கரிகாலன்

16. மெக்டவல் - "மட்டை' வீரன்

17. டிரிபிள் கிரவுன் - மூணு தலை

18. மேன்சன் ஹவுஸ் - உறுப்பினர் விடுதி

19. ராயல் சேலன்ஞ் - நாற்பதும் நமதே

20. ஹேவார்ட்ஸ் 5000 - ஓட்டுக்கு 5000

21. ஜிங்காரோ - சிங்காரி சரக்கு

22. கோல்டன் ஈகிள் - தங்க கழுகு

23. கிங் பிஷர் - மீன்கொத்தி

24. மார்பியூஸ் - மயக்கி

களவாணி பார்த்தே தீர வேண்டியபடம்

களவாணி படத்தை வீட்டு அம்மாவோடு பார்க்க வேண்டும் என்று இருந்தேன்... இருந்தாலும் படத்தை பற்றிய பேச்சு அதிகமாக இருந்த காரணத்தாலும்,விகடன் வேறு 46 மார்க் போட்டு அப்படி என்ன அந்த படத்தில் இருக்கின்றது என்று பார்க்க வைக்கும் ஆர்வம் காரணமாகவும் அந்த படத்தை நான் தனியாக பாத்து தொலைத்து விட்டேன்... படத்துக்கு அழைத்து போகின்றேன் என்று சொல்லிவிட்டு ...அழைத்து போகவில்லை என்றால்....தாகத்துக்கு தண்ணி கேட்டு அது அரைமணி நேரம் கழித்துதான் என் கம்யூட்டர் டேபிளில் லொட் என்று வைக்கபடும் என்று எனக்கு தெரியும்... இருந்தாலும் நான் உங்களுக்காக ரிஸ்க் எடுத்து இருக்கின்றன்...




சரி இந்த படத்தை நான் பாக்கவேண்டும் என்று நினைக்க வைத்த இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த படத்தின் டிரைலர்... கட்டிக்கறேன்னு சொல்லு என்று வண்டி துடைத்துக்கொண்டு இருக்கும் போது... அந்த சின்ன பெண்ணிடம் பேசுவதும்.. ஒரே சின்ன பிள்ளையா பார்த்து ஏமாத்தறான் என்ற சொல்லாடலும் என் கிராமத்து பேச்சாக இருந்தது... என் மக்களை எந்த பகட்டும் இல்லாமல் திரையில் பார்த்தது போன்ற உணர்வு அது...
உங்களுக்கு இந்த திரைபடத்தை பற்றிய கதை உங்களுக்கு இந்நேரம் தெரிந்து இருக்கும் அல்லது படித்து இருப்பீர்கள்...

உண்மையான காதலன் என்பவன் யார் தெரியுமா? தான் காதலிக்கும் பெண்ணுக்கு எந்த நேரத்திலும் பிரச்சனையோ அல்லது அவமானமோ எற்படுத்தாதவன்தான் உண்மையான காதலன்...

அந்த பெண் குடும்பசூழ்நிலையில் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டாலும்.. தான் காதலித்த பெண் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவன்தான் உண்மையான காதலன்...

ஆனால் இப்போது பல காதலன்கள் அப்படி இல்லை காதலின் போர்வையில் ஒரு பெண்ணை மயக்கி அந்த பெண்ணை கிரக வைத்து... நம்பிக்கை மொழி பேசி அந்த பெண்ணின் நிர்வாணத்தை கேமரா செல்போனில் பதிவு செய்து.. அதை நண்பர்களுக்கு விருந்தாக்கி...பிறகு அந்த பெண்ணை மிரட்டி விருப்பபட்ட நண்பர்களுக்கு அந்த வீடியோவை காட்டி விருந்து வைத்து...இப்போது கூட ஜுனியர் விகடனில் அண்ணன் தம்பி இருவரும் ஒரு கல்லூரி பெண்ணை ஏமாற்றிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது...

இதுவா காதல்...காதலிக்கு எந்த சிறு அவச்சொல்லும் ஏற்படாமல் பாதுகாப்பவனே உண்மையான காதலன்.... அந்த வகையில் இந்த களவாணி கிரேட்....
ஒரு சின்ன சீன்... சொல்லறேன்...
களவாணி விமல்... தெரிந்து அல்லது தெரியாமல் செய்த களவாணித்தனம் அவன் காதலி மகேஷ்வரிக்கு தெரிந்து விடுகின்றது... அதனால் அவனை பார்பபதை தவிர்க்கின்றாள்... அவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க அவளை சந்திக்க ஒரு திட்டம் போட்டு....

அவளோடு படிக்கும் பெண் வயதுக்கு வந்து விட்டதாகவும் சடங்கு சுத்த போவதாகவும் ஒரு பத்திரிக்கை அடித்து அவள் வீட்டில் கொடுக்க வைக்கின்றான் களவாணி விமல்...
இதை உண்மை என்று நம்பி மகேஸ்வரி வீட்டை விட்டு அந்த பெண்ணின் வீட்டுக்கு சைக்கிளில் வர நடுவில் அவளை மீட் பண்ணி மன்னிப்பு கேட்பது களவாணி விமலின் பிளான்....
களவாணி தன் காதலியை பார்க்கின்றான்.... அவளிடன் தன் தரப்பு நியாத்தை சொல்கின்றான்... அவள் ஏற்றுக்கொள்ளவில்லை... உன்னிடம் இனி நான் பேச போவதில்லை என்று சொல்கின்றாள்...
தன் தங்கை பொய் பத்திரிக்கை காட்டி விட்டை விட்டு போனது தெரிந்து போய் தங்கையை கையும் களவுமாக பிடிக்க முரட்டு அண்ணன் தன் பல்சரில் விரைகின்றான்...
களவாணி தன் காதலியிடம் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் அவள் கோபித்து கொண்டு நடக்க... துரத்தில் அவள் அண்ணன் பல்சரில் வருவதை பார்த்துவிட்டு... காதலியின் அண்ணன் அவனுக்கு தெரிய கூடாது என்பதற்காக பக்கத்தில் கடக்க போகும் மினிபஸ்சில் காதலியை குண்டு கட்டாக தூக்கி ஏற்றி விட்டு, அதே பஸ்சில் ஏறி ஒரு கையால் தன் காதலி வந்த சைக்கிளை பிடித்த்துகொண்டு போக... காதலியின் அண்ணன் அந்த இடத்தை கிராஸ் செய்ததும்...அதுவரை முரண்டு பிடித்த காதலி தன் அண்ணனிடம் இருந்து தன் காதலன் காப்பாற்றியது தெரிந்ததும் அமைதியாவதும் ... அதன் பிறகு எதுவும் பேசாமல் பேருந்து விட்டு இறங்கி களவாணி விமல் நடப்பது கவிதை....

இதை கையினால் பேப்பரில்.... இந்த காட்சியை எழுதிடலாம்... ஆனால் நம்புவது போல் அந்த காட்சியை எடுத்து இருப்பதுதான் சினிமா...அந்த காட்சிக்கு நிச்சயம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்...

தன் பெயரையும் தன் காதலி பெயரையும் ஊர் முழுவதும் எழுதி வைத்திருக்க.... அதனை களவாணி நண்பன் கோபத்தில் இருவர் பெயரையும் எல்லோருக்கு தெரிவது போல் எழுதி விட்டு வந்து மோட்டர் கொட்டகையில், தன் காதலி தன்னை புரிந்து கொள்ளவில்லை என்று உட்கார்ந்து இருக்கும் களவாணி விமலிடம் பெருமையோடு அதை சொல்லும் போது...
கயிற்று கட்டிலில் இருந்து கோபத்தோடு வேட்டி நழுவுவது தெரியாமல் தன் நண்பனை அடித்துவிட்டு.... அந்த பொண்ணு என்னை பத்தி என்ன நினைப்பா? அந்த பொண்ணுக்கு எவ்வளவு அசிக்கம்ன்னு கோபப்படறான் பாருங்க.. அதுதான் காதல் அதுதான்படம்....

இந்த படத்தின் சிறப்பே எல்லா வயதினரும் அந்த அந்த கேரக்டர்களை படத்தில் காணலாம்...அவர்கள் எல்லோரும் வாழ்ந்து இருக்கின்றார்கள்...
களவாணி படத்தின் கதை இதுதான்....

களவாணி தனம் செய்யும் அறிவழகன்(விமல்).. பக்கத்து ஊரில் அடிதடி விஷயத்தில் கொடி கட்டி பறக்கும் ஒருவனின் தங்கையை மகேஸ்வரி (ஓவியா) காதலிக்கின்றான்...அவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான்... கதை..
படத்தின் சுவாரஸ்யங்களில் சில....
1328 முறையாக இந்த கதைகளம் தமிழ் சினிமாவுக்கு இது பழசு...ஆனால் அதனை சுவைபட சொல்லி இருப்பதில் இயக்குனர் வெற்றி பெற்று இருக்கின்றார்...

இரண்டாவது வில்லனுக்கு பழைய ஆட்களை தேடாமல் ரொம்ப இயல்பாய் ஒரு பையனை பிடித்து போட்டு இருப்பது இயக்குனரின் திறமைக்கு அவரின் தன்னம்பிக்கைக்கும் ஒரு சல்யூட்..

விமல் வெற்றிக்கு முக்கியகாரணம் அந்த அலட்சியமான டயலாகடெலிவரிதான்.... சும்மாவே ஆடுவேன்... காலில் சலங்கை வேற கட்டிவிட்டா ஆட்டத்துக்கு கேக்கவா வேனும் என்று சொல்லும் அந்த டயலாக் அற்புதம்....

சின்ன சின்ன விஷயங்களில் கவனித்து அறுவடை செய்து இருக்கின்றார்கள்...

உதாரணத்துக்கு டுடோரியலில் வாத்தியார் சிகரேட் கேட்க... பாக்கெட் புல்லாக வைத்துக்கொண்டு ஒண்ணு தான் இருக்கு சார் என்று சொல்லி விட்டு முழு பாக்கெட்டையும் வீசிவிட்டு... அதன் பிறகு அதை எடுப்பது என்று நிறைய விஷயம் புதிதாய் சொல்லி இருக்கின்றார்கள்...
இளவரசு மற்றும் சரண்யா வாழ்ந்து இருக்கின்றார்கள்... எங்க அப்பன் ஆத்தாளை திரையில் பார்பது போல இருக்கு...அதுதான் அந்த இருவரின் வெற்றி
ஊரில் வம்பு பேசுவது அப்படியே டிஷ் வழியா எல்லாருக்கும் போவது போலான அந்த காட்சி அற்புதம்....
விமலோட தங்கச்சி கேரக்டர்... அதுக்காவே டைரக்டரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்...ரொம்ப இய்ல்பாக அந்த பெண்ணை நடிக்க வைத்து இருக்கின்றர்கள்...அதே போல் கதாநாயகியின் அப்பாவின் கிராமத்து வாசம் அந்த பேச்சிலும் முகத்திலும்... அற்புதமான தேர்வு
படத்தின் ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் படத்துக்கு பெரிய பலம்...ஊர் திருவிழா,டாஸ்மார்க் இன்டோர் மற்றும் நைட் சீன் எல்லாவற்றிலும் உழைப்பு தெரிகின்றது...
டாப் ஆங்கிளில் வயல்களையும் அதில் கருப்பு ரிப்பன் போலான தார் சாலைகளையும் அப்படியே அழகாய் அள்ளி எடுத்து வந்து இருக்கின்றார்கள்...
துரத்தல் காட்சிகளில் எந்த கன்பியசனும் பார்வையாளனுக்கு இல்லை...
அதே போல் ஒரு பாடல்காட்சியில் கோவில் மேல் நடப்பது போலான அந்த காட்சி நல்ல விஷுவல் டேஸ்ட்.. அதே போல் நண்டு வளைக்குள் கேமரா இருப்பது போலான காட்சிகள் என்று நிறைய மெனகெட்டு இருக்கின்றார்கள்...
பிகல் கிராமம் என்றால் இதுதான்.. யமாஹா வைத்து இருக்கின்றார்கள்... டிஷ் வைத்து இருக்கின்றார்கள்...பல்சர் இருக்கின்றது...கோவில் திருவிழாவில் ரீட்டா நடனம் இருக்கின்றது... செல்போன் இருக்கின்றது... பெரியப்பா என்பவர் பேச்சுக்கும், சித்தப்பன் பேச்சுக்கும் சட்டென கட்டுபடுவது...இரட்டை சடையோடு யூனிபார்மில் பள்ளிக்கு போகும் கிராமத்து பெண் பிள்ளைகள்...நைட்டு தற்கொலை செய்து கொள்ளுவாள் என தாவணியை தன் புடைவையோடு படு முடிச்சி போட்டுக்கொண்டு படுப்பது, தண்ணி அடிக்க அலையும் இளைஞர்கள், என டிபிகல் கிராமத்தை கண் முன் நிறுத்துகின்றார் இயக்குனர் சற்குணம்....

வேலை வெட்டி இல்லாத தன் பையனுக்கு காதலால்தான் பயிரை பாதுகாத்தான் என தெரிந்து சட்டென கொதிக்கும் இளவரசுக்கு இந்த படம் அவர் கேரியரில் குறித்து வைத்துகொள்ளகூடிய ஒன்று...
பாடல்களில் டம்ம டும்மா சாங்.. ஒரு நல்லசாங்....
பள்ளி சிருடையில் ஒரு மாதிரி இருக்கும் ஓவியா... மாண்டேஜ் ஷாட்டுகளில் முக்கியமாக விமல் நண்பர்களோடு டீ குடிக்கு அந்த காட்சிகளில் ரொம்ப மெச்சூரிட்டியாக அழகாக தெரிகின்றார்....

ரீட்டா ஆடல் பாடல் காட்சிகளில் கூட தொப்புள் காட்டபடவில்லை... இரத்தம் தொப்புள் என காட்சிகள் வைக்க நிறைய சான்ஸ இருந்தும் ரொம்ப டீசன்டாக படத்தை கொடுத்து இருக்கின்றார் இயக்குனர்...

படம் முடிந்து யாரும் எழுந்து போகாமல் நின்று இளவரசு சரண்யா லுட்டியை பார்த்து விட்டு போவது படத்தின் வெற்றி....
தியேட்டர் டிஸ்க்கி....

தியேட்டரில்தான் டிக்கெட் கிடைத்து...நிறைய காதலர்கள் நிழலுக்கு ஒதுங்க படத்துக்கு வந்து இருந்தார்கள்...
தியேட்டரில் யாராவது நின்னாலே ஸ்கிரின் மறைத்தது....
என் ரோவில் கடைசி சீட்டுக்கு போகும் காதலர்களில் காதலி இருட்டில் தடுக்கி என் மடியில் விழுவது போல் உட்கார்ந்து சட்டென தாங்கி பிடித்து கடைசி சீட்டுக்கு அனுப்பி வைக்க இன்டர்வெல்லில் அந்த பெண் என்னை பார்த்தும் வெட்கத்தில் குனிந்து கொண்டது...
நடு சீட் நம்பர் டிக்கெட் எடுத்து விட்டு ஒரு ஜோடி ஓர சீட்டில் உட்கார பெருமுயற்சி எடுக்க.... ஒழிந்து போங்கள் என தியேட்டர் சிப்பந்தி விட்டார்...
தியேட்டர் முழுவதும் படத்தை உற்சாகமாக பார்த்தார்கள்.... என்ன யாராவது நடந்து போனால் திரை தெரிய மறுக்கின்றது....
================
நீங்க வேன பாருங்க ஆனி போய் ஆவடி முடிஞ்சிதுன்னா அவன் டாப்பா வருவான் என்று சொல்லும் சரண்யா... அப்போது கொஞ்சமும் நினைத்து பார்த்து இருக்கமாட்டார்... இந்த படமும் டாப்பாக ரசிக்கபடும் என்று...

க‌தைய‌ல்ல‌...எச்ச‌ரிக்கை!

அவ‌னுக்கு வ‌ய‌து 22. மாநிற‌ம். . அதிர்ந்து பேச‌மாட்டான். மிக‌ அமைதியான‌வ‌ன். சொந்த‌ ஊர் என்ன‌வோ திருவ‌ண்ணாம‌லைதான். ஆனால் வ‌சிப்ப‌து வ‌றுமைக்கோட்டுக்கு கீழே‌. அவ‌னுடைய‌ த‌ந்தை. தேர்ந்த‌ நெச‌வாளி. அவ‌ருக்கு உத‌வியாய் அவ‌ன‌து அம்மா. க‌ல்லூரி செல்லும் வ‌ய‌தில் ஒரு த‌ங்கை. அவ‌னுடைய‌ த‌ந்தை என்ன‌மோ ஸ்ரீபெரும்புதூர் ஜாம்ப‌வான்க‌ளுக்கு அடிப‌ணியாத‌வ‌ர்தான். ஆனால் அவ‌ன் ப‌ணிந்துபோக‌ த‌யாராக‌யிருந்தான். வ‌றுமைக்கோடு. எப்பாடுப‌ட்டேனும் இந்த‌ கோட்டிலிருந்து வில‌கி த‌ன் குடும்ப‌த்தை ஒரு ந‌ல்ல‌ நிலைமைக்குக் கொண்டுவ‌ந்துவிட‌ வேண்டும் என்கிற‌ வெறி. பெரும் முய‌ற்சிக்குப் பின்ன‌ர், துபாயில் ஒரு ப‌ன்னாட்டு நிறுவ‌ன‌த்தில் அவ‌னுக்கு வேலை கிடைத்த‌து. மாத‌ச் ச‌ம்ப‌ள‌ம் ரூ.10000.
பிற‌ந்த‌து முத‌ல், அதிக‌ப‌ட்ச‌ம் இர‌ண்டு நாட்க‌ளுக்கு மேல் த‌ன் பெற்றோரை பிரிந்த‌தில்லை அவ‌ன். ப‌ணியில் சேர்ந்த‌ பின் 2 வருடத்துக்கு ஒரு முறைதான் வீட்டுக்குப் போக‌ முடிந்த‌து. இந்த‌ பிரிவு அவ‌னை வ‌ருத்த‌ம‌டைய‌ச் செய்தாலும், த‌ன் குடும்ப‌ம் ந‌ல்ல‌ பொருளாதார‌ நிலைமைக்கு உய‌ர‌ இது அவ‌சிய‌ம் என்று க‌ருதி த‌ன்னைத் தானே தேற்றிக்கொண்டான்.
ப‌ண‌ம்..ப‌ண‌ம்..ப‌ண‌ம்..இது ஒன்றே முக்கிய‌ம். குடும்ப‌த்தின் வ‌றுமை ஒழிய‌ த‌ன் க‌வ‌ன‌ம் முழுதும் ப‌ண‌ம் ச‌ம்பாதிப்ப‌திலேயே இருக்க‌ வேண்டும் என்ப‌து அவ‌னுடைய‌ ல‌ட்சிய‌ம், வெறி, சித்தாந்த‌ம், கொள்கை, கோட்பாடு எல்லாமே. காலை 6:30 ம‌ணிக்கு அவ‌னுடைய‌ ஷிஃப்ட் துவ‌ங்கும். ஆறு ம‌ணிக்கு முன்னே அலுவ‌ல‌க‌த்துக்குச் சென்றுவிடுவான்.
அன்று திங்க‌ள் கிழ‌மை. ப‌னி வில‌காத‌ காலை நேர‌ம். ஆறாவ‌து த‌ள‌த்தில் உள்ள‌து அலுவ‌ல‌க‌ம். த‌ரைத் த‌ள‌த்தில் லிஃப்ட்டினுள் நுழைந்து 6ஐ அழுத்தினான். ஆறாம் த‌ள‌ம் சென்ற‌டைந்த‌வுட‌ன் லிஃப்ட் க‌த‌வு திற‌ந்த‌போது கீழே விழுந்த‌து அவ‌னுடைய‌ உயிர‌ற்ற‌ உட‌ல்!
அங்கிருந்த‌ செக்யூரிட்டிக‌ள் அவ‌னுடைய‌ டீமுக்கு த‌க‌வ‌ல் அளித்து அவ‌னை ம‌ருத்துவ‌ம‌னைக்குக் கொண்டு செல்ல‌ ஏற்பாடு செய்த‌ன‌ர். ம‌ருத்துவ‌ம‌னையில் ப‌ரிசோதித்த‌ ம‌ருத்துவ‌ர் ம‌றுநொடியே சொன்னார், "ஸாரி ஹி ஈஸ் நோ மோர்". 'டெட் ஆன் அரைவ‌ல்' என்று ரிப்போர்ட்டில் ப‌திவு செய்தார்.
பின்ன‌ர் அவ‌னுக்கு நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் விசாரித்த‌போது தெரிய‌வ‌ந்த‌து. அவ‌னுக்கு புகை, குடி என்று எந்த‌ ப‌ழ‌க்க‌மும் இல்லை. ஒவ்வொரு மாத‌மும் அவ‌னுக்கென்று ரூ.3000 எடுத்துக்கொண்டு மீதி ப‌ண‌த்தை த‌ன் குடும்ப‌த்துக்கு அனுப்பிவிடுவான். அந்த‌ 3500ல் போக்குவ‌ர‌த்து, அலைபேசி, உண‌வு ஆகிய‌வ‌ற்றிற்கான‌ செல‌வுக‌ள் அட‌ங்கும். செல‌வைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ன் மேற்கொண்ட‌ ஒரு முடிவு..தினமும் காலை உண‌வைத் த‌விர்த்து ஒரு நாளைக்கு இரு வேளை ம‌ட்டுமே உண்ணுவ‌து.
இந்த‌ ப‌ழ‌க்க‌ம் வெகு நாட்க‌ளாய்த் தொட‌ர்ந்து உட‌லுக்குள் வாயு உருவாகி அது இத‌ய‌த்திற்குச் செல்லும் குழாயை பாதித்து......22 வ‌ய‌தில் மார‌டைப்பு! இது ஏதோ க‌ற்ப‌னையாக‌ எழுத‌ப்ப‌ட்ட‌ வ‌ரி அல்ல‌. அவ‌னுடைய‌ உண‌வு ப‌ழ‌க்க‌த்தை அவ‌ன் ந‌ண்ப‌ர்க‌ள் கூற‌க்கேட்டு அறிந்த‌ பின் ம‌ருத்துவ‌ர் சொன்ன‌து.
ப‌ண‌ம் ஒன்றையே பிராத‌ன‌மாக‌க் க‌ருதி ப‌ர‌ப‌ர‌வென‌ ப‌ற‌ந்துகொண்டிருக்கும் இந்த‌ யுக‌த்தில், ந‌ம்மில் பெரும்பாலானோர் காலை உண‌வைத் த‌விர்த்துவிடுகிறோம்/குறைத்துவிடுகிறோம். பெரும்பாலும் நாம் சொல்லும் கார‌ண‌ம்.."டைம் இல்ல‌". சாப்பிடுவ‌த‌ற்குக் கூட‌ நேர‌மில்லாம‌ல் அப்ப‌டி என்ன‌ கிழித்துவிட‌ப் போகிறோம்?

இத‌ற்கு மேல் இதைப்ப‌ற்றி நீங்க‌ளே சொல்லுங்க‌ள்!

                       நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
               உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
                                        உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
                 அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்!

வாழ்கையில் வெற்றி பெற....

அறிவாளி,வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வான்.
புத்திசாலி வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வான்!

கடவுளை நம்பு!
அனால்,
கடவுளை மட்டுமே
நம்பிக்கொண்டு இருக்காதே!
நாளை வரப்போகும்
இன்ப துன்பம் அனைத்தும்
நேற்றில் அடங்கியது!
நாளை நமக்காக
காத்து இருக்கிறது!
சோர்வை அகற்றி
நம்பிக்கை வளர்ப்போம்!

விரும்பியதை செய்வது
சுகந்திரம்!
செய்வதை விரும்புவது
சந்தோசம்!

நமது தோற்றம் எதிரே
இருப்பவரின் கண்களை கவரும்;
நடத்தை இதையத்தை கவரும்.

வழியைக் கண்டுபிடி!
அல்லது
உருவாக்கு!

நாளை, நாளை என்று
எந்த ஒரு செயலையும்
ஒத்தி போடுவது
வெற்றிக்கு தடையாகும்!
கவலை
நாளைய துயரங்களை
அழிப்பதில்லை!
இன்றைய வலிமையை
அழித்துவிடும்!
பூனை கருப்ப,
வெள்ளையணு கவலைப்படாதே...
அது எலியைப் பிடிக்கிரதானு
மட்டும் பாரு!
சொர்க்கமோ, நரகமோ
நாம் தேடி கண்டுபிடிக்க வேண்டிய
இடங்கள் அல்ல; நாமே உருவாக்கி
கொள்கிற இடங்கள்!

வீழ்வது வெட்கமல்ல....
ஆனால்,
வீழ்ந்தே கிடப்பது தான்
வெட்கம்.

துணிவுடன் வாழ்க்கையில்
எதையும் செய்-அதன்
தன்மையில் புது அர்த்தங்கள்
மலரும்!

நம்பிக்கையுள்ளவர்
ஒவ்வொரு சிரமத்திலும்
ஒரு வாய்ப்பை காண்கிறார்!
நம்பிக்கை இல்லாதவர்
ஒவ்வெரு வாய்ப்பிலும்
ஒரு சிரமத்தை காண்கின்றார்!
யாரும் உன்னை குறை கூறினால்
அது உண்மையாயின் திருத்தி கொள்!
பொய்யாயின் நகைத்து விடு!

முயற்சிகள் தவறலாம்!
அனால்,
முயற்சிக்க தவறாதே!

முடியும் வரை முயற்சி செய்!
உன்னால் முடியும் வரை அல்ல!
நீ நினைத்த செயல்
முடியும் வரை!

சோகம் எனும் பறவை
உங்கள் தலைக்கு மேல்
பறப்பதை தடுக்க இயலாது!
ஆனால், தலைக்கு மேல்
கூடு கட்டுவதை தவிர்க்கலாம்!
வாழ்க்கையில் நீ சந்திக்கும்
ஒவ்வெரு மனிதனும்
உனக்கு ஆசான்!
அவர்களிடம் நீ கற்றுக்கொள்
ஏதேனும் ஒன்று இருக்கும்!

முயல் வெல்லும்!
ஆமையும் வெல்லும்!
முயலாமை வெல்லாது!

ந‌ட்பு..........

பொதுவாக காதலை ‌விடவு‌ம், உறவுகளை ‌விடவு‌ம் ந‌ட்பை பெ‌ரிதாக சொ‌ல்ல பல‌க் காரண‌ங்க‌ள் உண்டு. தா‌யிடமு‌ம், த‌ந்தை‌யிடமு‌ம், க‌ட்டிய மனை‌வி‌யிடமு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள முடியாத பல ‌விஷய‌ங்களை நா‌ம் ந‌ண்ப‌மரிட‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்வோ‌ம்.

உன் ந‌ண்பனை‌க் கா‌ட்டு.. உன்னை‌ப் ப‌ற்‌றி‌ச் சொ‌ல்‌கிறே‌ன் என்ற பொ‌ன்மொ‌ழி‌யி‌ல் இரு‌ந்தே ந‌ட்‌பி‌ன் வ‌லிமையை நா‌ம் உணரு‌கிறோ‌ம்.

பலரு‌ம் த‌ங்களது வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்ல ந‌ட்பு ‌கிடை‌க்காததா‌ல் ம‌கி‌ழ்‌ச்‌சியையு‌ம், து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ள முடியாம‌ல் வா‌ழ்‌ந்து வருவதை க‌ண்கூடாக கா‌ண்‌கிறோ‌ம். அதே‌ப்போல, ‌தீய ந‌ட்‌பினா‌ல் வா‌ழ்‌க்கையை இழ‌ந்து ப‌ரித‌வி‌க்கு‌ம் ‌நிலையு‌ம் உண்றடு.

முத‌லி‌ல் ந‌ல்லவ‌ர்களை ந‌ண்ப‌ர்களா‌ய்‌த் தே‌ர்‌ந்தெடு‌க்க வே‌ண்டு‌ம் என்றது தா‌ன் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ‌உய‌ர்‌ந்த ‌சி‌ந்தனையு‌ம், உன்‌னத‌ப் ப‌ண்புகளு‌ம் கொ‌ண்டவ‌ர்க‌ள் நம‌க்கு ந‌ண்ப‌ர்களா‌ய் வா‌ய்‌த்தா‌ல் அவ‌ர்‌க‌ளிட‌மிரு‌ந்து நம‌க்கு ந‌ன்மையே ‌கிடை‌க்கு‌ம்.

பா‌ர்‌த்தது‌ம் காத‌ல் வரலா‌ம், ஆனா‌ல் ந‌ட்பு கொ‌ள்ள ‌சில ‌விஷய‌ங்களை அறி்‌ந்து கொ‌ள்ள வே‌ண்டியது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஒரு ‌சில‌ரை‌ப் பா‌ர்‌த்தது‌ம் ‌பிடி‌த்து அவ‌ர்களுட‌ன் ந‌ட்பு கொ‌ள்ள வே‌ண்டு‌ம் என்யறு மன‌ம் சொ‌ல்லு‌ம். அவை ‌வி‌தி‌வில‌க்கு. அப்‌படி இல்டலாம‌ல், ‌விரைவாக துவ‌ங்கு‌ம் ந‌ட்பு ‌விரைவாகவே முடி‌ந்து‌ம் ‌விடு‌ம்.

ந‌ண்ப‌ரி‌ன் பழ‌க்க வழ‌க்க‌ம், குணா‌திசய‌ம் ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். ஏனெ‌னி‌ல், நா‌ம் உள ‌ரீ‌தியாக யா‌ர் ‌மீது அதி‌க அன்‌பு கொ‌ள்‌கிறோமோ அவருடைய தா‌க்க‌ம் ந‌ம் ‌மீது ‌நி‌ச்சய‌ம் படியு‌ம்.

ம‌னித‌ன் த‌ன்னுடைய ந‌ண்ப‌னி‌ன் வ‌ழி‌‌யிலேயே செ‌ல்‌கிறா‌ன். ஆகவே யாருட‌ன் ந‌ட்பு கொ‌ண்டிரு‌‌க்‌கிறோ‌ம் என்று ஒவ்‌வொரு ம‌னிதனு‌ம் கவனமாக இரு‌க்க வே‌ண்டு‌ம்."

இத‌ற்கு ஒரு உதாரணமு‌ம் உண்டு, அதாவது உங்களு‌க்கு இர‌ண்டு ந‌ண்ப‌ர்க‌ள் இரு‌க்‌கிறா‌ர்க‌ள், ஒருவ‌ர் உங்ககளை படி‌க்க அழை‌க்‌கிறா‌ர், ம‌ற்றொருவ‌ர் எங்காவது வெ‌ளியே செ‌‌ல்லலா‌ம் என்கிறா‌ர். இதி‌‌ல் உங்களி‌ன் உள ‌ரீ‌தியான தொட‌ர்பு யா‌ரிட‌ம் அதி‌கமாக உள்ளதோ அவருட‌ன் தா‌ன் ‌நீ‌ங்க‌ள் செ‌ல்‌‌வீ‌ர்க‌ள்.

இதை‌த்தா‌ன் ம‌னித‌ன் த‌ன்னுடை‌ய ந‌ண்ப‌னி‌ன் வ‌ழி‌யிலேயே இரு‌க்‌கிறா‌ன் என்பத‌ன் அர்‌‌த்தமாகு‌ம்.

மேலு‌ம், ந‌ல்ல ந‌ண்ப‌னி‌ன் உதாரண‌ம் நறுமண‌ப் பொருளை ‌வி‌ற்பவ‌ன் போ‌ன்றதாகு‌ம். ‌தீய ந‌ண்ப‌னி‌ன் உதாரண‌ம் இரு‌ம்பை உரு‌க்கு‌ம் உலை‌யி‌ல் உள்ள அடு‌ப்பு ஊது‌ம் குழ‌ல் போ‌ன்றதாகு‌ம். நறுமண‌ப் பொருளை ‌வி‌ற்பன‌னி‌ன் தோழமையா‌ல் உங்களு‌க்கு ‌நி‌ச்சய‌ம் பய‌ன்க‌ள் ‌கி‌ட்டு‌ம். ‌நீ‌ங்க‌ள் நறுமண‌ப் பொரு‌ள்களை வா‌ங்‌கி‌ச் செ‌ல்லலா‌ம். அல்‌லது அந்த நறுமண‌ப் பொரு‌ட்க‌ளி‌ன் இனிய மனமாவது உங்க‌ள் ‌மீது படு‌ம். ஆனா‌ல் அடு‌ப்‌பி‌ல் இரு‌ந்து வெ‌ளி‌ப்படு‌ம் ‌‌தீ‌ப்‌பிழ‌ம்‌பினா‌‌ல் ‌நீ‌ங்க‌ள் வெ‌ப்ப‌த்தை‌த்தா‌ன் பெற முடியு‌ம். அதிகமாக நெரு‌ங்‌கினா‌ல் உங்க‌ள் ஆடையை நெரு‌ப்பு எரி‌‌த்து‌விட‌க் கூடு‌ம்.

எனவே யா‌ரிட‌ம் ந‌ட்பு கொ‌ள்‌கிறோ‌ம் என்பது தா‌ன் ந‌ட்புற‌வி‌ல் ‌மிக‌வு‌ம் மு‌க்‌கியமாக நோ‌க்க வே‌ண்டியதாகு‌ம்.

ந‌ண்ப‌ர்களு‌க்கு‌ம், ந‌ட்பு‌க்கு‌ம் ‌உரிய ம‌தி‌ப்ப‌ளி‌க்க வே‌ண்டு‌ம்

பிரியம்

. தன்னையறியாமல் மனம் அடுத்தவரை நாடுவது பிரியம் எனப்படும்.
.பிரியம் உணர்ச்சிக்குரியது; அன்பு ஆத்மாவுக்குரியது.
.பிரியம் பிரியமுள்ளவரை நாடும்.
.அன்பு அனைவரையும் நாடும். பிரியம் குறிப்பிட்டவரை நாடும்.
.அனைவரையும் நாடும் பிரியம் அன்பு.
.பிரியம் வரும், போகும் என்பது வழக்கு.
.வருவதும், போவதும் ஆசை, பாசம், பற்று; பிரியமில்லை.
.இருந்து போனது பிரியமில்லை.
.இல்லாமல் உற்பத்தியாகக் கூடியது பிரியம்.
.பிரியத்தில் உண்மை தவிர மற்றவை கலக்கக்கூடாது.
.நடிப்புக்காகப் பிரிந்திருக்கலாம் என்ற நண்பர்கள் உண்மையிலேயே பிரிந்தனர்.
.நடிப்பையும் ஏற்க முடியாதது பிரியம்.
.தம்பதிகள் பிரியமாக இருப்பார்கள்; இல்லாமலிருப்பார்கள்; ஒருவருக்கு மட்டும் பிரியமிருக்கும்.
.அவர்களும் நடிப்பாக 1 மணி நேரம் பழகினால், பேசினால், அது மறக்க முடியாததாகிவிடும்.
.நடிப்பால் பிரியம் எழாது என்பது உண்மை.
.அன்னைச் சூழலில் நடிப்புமூலம் நல்லது வருவதும் பெரியது.
.பிரியமேயில்லாத சிடுமூஞ்சி தம்பதிகள் 1 மணி நேரம் பிரியமாக நடித்தால், அதன்வழி அன்னை செயல்பட்டு அவரிடையே பிரியம் நிலையாக எழும்.
.அன்னைக்கு ஒத்து வாராத பொய், நடிப்பு, ஏமாற்றம், சூது, வாது, கபடு,திருடு நாம் விலக்க வேண்டியவை.
மனத்தின் ஆழத்தில் இத்தனை தவற்றுக்குப் பின்னும் உண்மையிருந்தால் அன்னை அதன் மூலம் செயல்பட்டு வாழ்வை மாற்றிவிடுவார்.
நமக்கில்லையென்றாலும் அன்னைக்கிருந்தாலும் அப்படி வாழ்வு மாறும்.
.அன்னை செய்பவற்றை மகாபாரதத்தில் காண முடியாது.
.உலகமே எதிரியானாலும் அன்னை பலிக்கும்.
.உடையவரே எதிரியானாலும் அன்னை பலிக்கும்.
.அன்னை தவறுவதேயில்லை; தவறியதேயில்லை.
.அன்னையிடம் வந்து, அன்னை பலிக்கவில்லை என்றவரில்லை. அன்னையை விலக்கியவருண்டு.
.அப்படிப்பட்டவரும் வாழ்வு ஜீவனற்றதாக இருந்தால் 1 மணி நேரம் பிரியமாக நடித்துப் பேசிப் பழகி, அன்னைக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம்.
.அன்னையை முழுவதும் அறிய முயல்வது ஒரு பெரிய யோகம்.
.அன்னைக்கு நிகராக எவரையும் கூற முடியாது. அவரே அவருக்கு நிகர்.
.அவர் செயல் வழி வரும் அருள் பேரருளாகும்பொழுது, அது அன்னையையும் மிஞ்சும்.
                                                                       ****

வடுவூர் இராமர்

கோயில் பெயர்      : அருள்மிகு கோதண்டராமர் திருக்கோயில்,வடுவூர்
இறைவன் பெயர் : கோதண்டராமர்
தலமரம்                      : மகிழம்
தீர்த்தம்                        : சரயு தீர்த்தம்
நகரம்                           : வடுவூர் - திருவாரூர்
விழாக்கள்                  : ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.
பூசை நேரம்              : காலை 7.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
சிறப்புகள்                  :மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். ராமரின் பிறந்த நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள். அன்று மாலையில் இவர் சீதையுடன் புறப்பாடாகிறார். ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த்திருவிழா நடக்கிறது. ஐந்தாம் நாளில், இவர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருளுவது விசேஷம். அட்சய திரிதியை அன்று ராமர் கருடசேவை சாதிக்கிறார்.
மற்ற தகவல் :முன்மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் சிலை வைக்கப்படும் முன்பு இவரே மூலஸ்தானத்தில் இருந்தார். பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இவ்வூர் "தெட்சிண அயோத்தி' என்றும் அழைக்கப்படுகிறது.மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்பக விமானம் எனப்படுகிறது. பிரார்த்தனை ராமரிடம் வேண்டிக்கொள்ள பெற்றோர் சொல் கேட்கும் குழந்தைகள் பிறப்பார்கள், நியாய சிந்தனை உண்டாகும் என்பது நம்பிக்கை
 
இராமர் என்றது நினைவுக்கு வருவது வடுவூர் தான் இதோ சில வடுவூர் இராமர் அருட்கோலங்கள்.


மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவயிறுவாய்த்தவனே!


தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய்! செம்பொன்சேர்


கன்னிநன்மாமதிள்புடைசூழ் கணபுரத்தென்கருமணியே
என்னுடையவின்னமுதே! இராகவனே! தாலேலோ.




ஸ்ரீராம நாம மகிமை

மும்மைசால் உலகுக்கெல்லாம் மூல மந்திரத்தை முற்றும்

தம்மையே தமர்க்கு நல்கும் தனிப்பெரும் பதத்தைத் தானே

இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை இராமன் என்னும்

செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்

பறவைகள் சரணாலயம் : Vadoovur Birds Sanctuary

தஞ்சாவூரை விட்டு கிளம்பிய 30 நிமிடங்களுக்குள்ளாகவே வழியில் ஒரு பெரிய ஏரி.  ஆஹா! என்று வாயை அகல விரித்துக் கொண்டே,  ரசித்துக் கொண்டு வரும் பொழுது அப்படியானதொரு நீர் நிலையை கண்டால் வாய் பிளப்பதில் என்ன ஆச்சர்யமிருக்கக் கூடும்.

எனவே கண்களுக்கு விருந்தாக அந்த ஏரி முழுக்கவுமே சின்னதும் பெரிதுமாக கருப்பு, வெள்ளை, பழுப்பு என நிறைய பறவைகள் மிதந்து கொண்டும், கரைகளில் ஒதுங்கி அடிமேல் அடி வைத்துக் கொண்டுமென காட்சியளித்தது. அது போதாதா, "நிறுத்துங்கப்பா வண்டியை" என்று கூவிக் கொண்டே கீழே இறங்கி அது என்ன இடம் என்று விசாரிக்கும் பொழுது வடுவூர் என தெரிந்து கொண்டேன். இந்த வடுவூர் மன்னார்குடிக்கும் தஞ்சாவூருக்குமான நெடுஞ்சாலையில் உறைந்து கிடக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 25கிமீ தூரத்திலும், மன்னார்குடி மாவட்டத்தின் ஆளுமைக்குள்ளும் வருகிறது.

அங்கேயே நின்று சில பறவைகளின்
அனுமதியின்றியே புகைப்படங்களை
தட்டிக்கொண்டு இன்னும் கொஞ்சம் தூரம் மெதுவாக வாகனத்தை உருட்டிக் கொண்டே வந்தால், ஒரு பெரிய நுழைவு வாயில் கண்ணில் தட்டுப்பட்டது.

அட! என்று கீழே இறங்கி பார்த்தால், அது
"வடுவூர் பறவைகள் சரணாலயம்" என்று வளைத்து வளைத்து கூறிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் எனது இரண்டு நண்பர்களுமே தஞ்சாவூரிலேயே இப்பொழுது வசிக்கிறார்கள். இரண்டு பேருக்குமே தெரிந்திருக்கவில்லை, இப்படி ஒரு பறவைகள் சரணாலயம் இருப்பது. எனக்கு அதிர்ச்சி தாங்க முடியவில்லை. ஏனெனில், எனக்கு முன்னால், கண்ணுக்கு எட்டும் தொலைவு வரைக்குமாக ஏரி பரந்து விரிந்து கிடக்கிறது. அவை முழுக்க பல வகையான பறவைகளை தன் மீது கிடத்தியவாறே. கண் கொள்ளாத காட்சி!

நான் மேலும் புகைப்படம் எடுப்போமென்று எண்ணினால் எங்களின் கோடியக்கரை நோக்கிய பயணம் வெகு இரவினில் விழுந்து விடும் என்ற அச்சத்தால் ஒரு அரை கிலோமீட்டர்கள் மட்டுமே நடந்து கண்ணுக்கும், கேமராவிற்கும் சிக்கிய சில பறவைகளை நெஞ்சுக்குள்ளும், மெமரிகார்டுக்குள்ளும் அடக்கிக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறி மனசே இல்லாமல் என்னை வைத்து அடைத்துக் கொண்டேன். கண்டிப்பாக இன்னொரு முறை சீசன் நேரத்தில் நான் அங்கு இருக்குமாரு ஒரு வாய்ப்பும்கிட்டினால் சூரியன் கிளம்பி, படுக்கச் செல்லும் வரைக்குமான நேரத்தில் அங்கே கிடந்து உருள வேண்டுமென எண்ணிக் கொண்டே பயணத்தை தொடர்ந்தேன்.

இது போன்ற எதிர்பாராத காட்சிகளும், சந்திப்புகளும்தான் நம்மை இயற்கையின் முன்னால் நிராயுதமாக நிற்க வைத்து, இன்னும் அனுபவிப்பதற்கு எவ்வளவு விசயங்கள் பூமி முழுதும் விரவிக் கிடக்கிறதென்று பறைசாற்றிக் கொண்டுள்ளன. தஞ்சாவூருக்கு அருகே வசிப்பவர்களும், அந்த ஏரியின் வழியாக பயணிக்க நேரும் வெளி ஊர் மக்களும் சற்று நிறுத்தி, நிதானித்து அவசியம் குழந்தை 'குட்டி'களுடன் சென்று பார்க்க வேண்டிய இடம். ஒரு முக்கியமான விசயம் உள்ளே செல்வதற்கு அனுமதி இலவசம்!

அன்று நான் பார்த்த பறவைகள்: கூட்ஸ், மூர்ஹென், ஜாக்கானா, கார்மோரண்ட்ஸ், நெல் வயல் ஹெரான், பெரிய வகை ஹெரான், பெயிண்டட் ஸ்ட்ரோக், வாத்து வகைகளில் சில... பைனாகுலர் கைவசம் எடுத்துச் செல்லவில்லை அம்பூட்டுத்தான் வெறும் கண்ணால பார்த்து அடையாளப் படுத்த முடிஞ்சது...

கீழே இருக்கிற கண்கானிப்பு தாத்தா என்னய ஒரு படம் எடுங்க, எடுங்கன்னு கேட்டாரா பார்க்கவும் ரொம்ப வித்தியாசமா இருந்தாரா, பிடிச்சுட்டேன் இந்தாங்க அவரும்..