வாங்கின ஒவ்வொரு அடியும்
*அந்த காலத்தில எதுக்கெல்லாம் நாங்க அடி வாங்கி இருக்கோம்னு இப்போ பலருக்கு தெரிய வாய்ப்பில்லை...*
ஆனால் வாங்கின ஒவ்வொரு அடியும் எங்களை புடம் போட்ட தங்கமா ஆக்கிடுச்சு என்பதுதான் இங்க மேட்டரே...
1. அடி வாங்கி ரொம்ப நேரம் அழுதுட்டு இருந்தா மறுபடியும் அடி!
2. அடி வாங்கிட்டு அமுக்கமா அழாமல் இருந்தால் மறுபடியும் அடி.
3. அடி வாங்காமலேயே அழுதா விழும் அடி.
4. பெரியவங்க உக்காந்திருக்கர இடத்ல நின்னுட்டு இருந்தா அடி
5.பெரியவங்க நின்னுட்டு இருக்கும் போது உக்கார்ந்திட்டே இருந்தா அடி.
6. பெரியவங்க உக்கார்ந்து இருக்கும் போது குறுக்காலும் நெடுக்காலும் நடந்தா அடி.
7. விருந்தாளிக்கு சமைத்ததை முன்னதாக சாப்பிட்டா அடி
8. தட்ல சோத்தை வெச்ச பிறகு சாப்பிட மாட்டேன்னு அடம் பிடிச்சா அடி.
9. சூரியன் மறைஞ்ச பிறகு லேட்டா வீட்டுக்கு வந்தா,எங்க சுத்திட்டு வர்ரன்னு ஒரு மொத்து.
10.அடுத்தவன் வீட்ல சாப்பிட்டு வந்தா அடி
11. எப்போ பார்த்தாலும் மூஞ்சியை தூக்கி வெச்சுட்டு இருந்தா அடி.
12. ரொம்பவும் துள்ளிக் குதிச்சாலும் அடி.
13. மூத்தவங்களோட சண்டை போட்டு தோத்தா அடி
14. சின்ன பசங்களோட சண்டை போட்டு ஜெயிச்சிட்டூன்னு கூவினா அடி.
15.ரொம்பவும் மெதுவா சாப்பிட்டா அடி.
16.அவசர அவசரமா அள்ளி போட்டு சாப்பிட்டாளும் அடி.
17. காணாது கண்டது போல கண்டமேனிக்கு சாப்பிட்டால் அடி.
18. பூரணமா சப்பிடாம இருந்தால் அடி
19.சாப்பிட்ட பிறகும் தட்டை சுரண்டிட்டு இருந்தால் அடி,
20. பேசிட்டே சாப்பிட்டா அடி
21.பெரியவங்க எழுந்த பிறகும் தூங்கிட்டு இருந்தா அடி.
22.விருந்தாளிங்க சாப்பிடுவதை பார்த்தால் அடி.
23. தடுமாறி நடந்து விழுந்தா உதை.
24. பெரியவங்களை முறெச்சு பார்த்தா அடி
25. பெரியவங்க பேசும்போது முழிச்சா அடி
26. அவங்க பேசும்போது முழிக்காம வெறிச்சு பார்த்தா அடி
27. பெரியவங்களை ஓரக் கண்ணால பார்த்தால் அடி
28. நண்பர்கள் தெருவில் ஃபுட்பால் ஆடும்போது நாம அவங்களோட சேர்ந்தால் அடி.
29. நண்பர்கள் விளையாடும் போது நாம உம்முன்னு வீட்ல உக்கந்திருந்தாலும் அடி.
30. சாப்பிட்டபின் தட்ட அலம்பலேன்னா அடி.
31. சாப்பிட்ட தட்டை சரியா கழுவலைன்னா அடி.
32. சாப்பிட்ட தட்டை கீழே போட்டு நசுங்கல் ஏற்பட்டா அடி.
33. கழுவின தட்டை ஒழுங்கா வைக்கலேன்னா அடி
34.நகத்தை கடிச்சா அடி
34..குளிக்காட்ட அடி.
35.காக்கா குளியலா குளிச்சு உடனே வந்தா முதுகுல பொளேர்
36. உள்ள போயி ஒரு மாமாங்கம் ஆச்சுன்னா வெளில வந்தவுடன் அடி.
37. ஸ்கூல்ல மிஸ்பிஹேவ் பண்ணினேன்னு தெரிஞ்சா வீட்ல அடி.
38.தெருல போர கார் உறசிட்டு போச்சுன்னா அடி.
39. கார் அடிச்சு குத்துயிரும் குலையுயிருமா இருந்தாலும் அஜாக்கைரதைக்கு நாலு அடி.
40. கேட்ட கேள்விக்கு பதில் வரலைன்னா அடி
41. பெரியவங்க பேசும்போது பதில் சொன்னா அடி.
42 லேட்டா கோவிலுக்கு போனா அடி.
43ஃப்ரெண்ட்ஸ்ட்டேந்து ஓஸியா ஷூ வாங்கி போட்டுகிட்டா அடி.
44.அம்மா செலெக்ட் பண்ணின சட்டை பிடிக்கலைன்னா அடி
45. கடைசில அவங்க சூஸ் பண்னின ஷர்ட்டை செலெக்ட் பண்ணினா,இதுக்கு இம்புட்டு நேரமான்னு அடி
46. வாத்தி சொல்லிகுடுத்த ரெண்டுங்கெட்டான் பதிலை பரிஷைல எழுதினா அதே வாத்தி”சொந்தமா என்னடா gas விட்ர”ன்னு சொல்லி அடிக்கும்.
47டீச்சர் தப்பு தப்பா நோட்ஸ் கொடுத்தாலும் நாம கர்ரெக்ட் பதில் எழுதினா வாத்திட்ட”நீ பெரிய பிச்தாவா”ன்னு சொல்லி வாங்கும் அடி..
48.வீட்ல பெற்றோர்கள் இடையில் அல்லது பெருசுங்க சண்டை மூட்ல இருந்தா நாம வாங்கும் அடி.
49 சொந்த காரங்கவீட்ல,நண்பர் வீட்ல பக்கிங்க மாதிரி சாப்பிட்டால், வீட்ல வந்து வாங்கும் அடி.
50 மூணு தோசை/பூரியை தாண்டி இன்னொண்ணுன்னா வாங்கும் அடி.
51 எல்லாத்துக்கும் நெய்யா கேக்குதுன்னு முதுகுல பளார்.
52.சாப்பிட்ட பிறகு தட்டை நக்கினால் அடி.
53) காரணமும் தாண்டி காரணமே இல்லாமல் வாங்கும் அடி.
இன்னிக்கு பசங்களுக்கு இதெல்லாம் அபத்தமா தெரியலாம்.
ஆனால் கிட்டதட்ட கூட்டு குடும்பத்தில் பெரியோர்கள்- பங்காளிகளுடன் வாழ்ந்த அந்நாட்களில் *இந்த அடிகள்* வாங்கியது தான் எங்களுக்கு வாழ்வில் முன்னேற உதவின.
வாழ்க பெற்றோர்கள்.🍁🍁🍁
மனைவிகளுக்கு மட்டும் இல்லை... கணவர்களுக்கும் தான்...!!*
*இது மனைவிகளுக்கு மட்டும் இல்லை... கணவர்களுக்கும் தான்...!!*
அது ஒரு சைக்காலஜி வகுப்பு :
ஆசிரியர் வந்து :- இன்னைக்கி நாம ஒரு கேம் விளையாடப்போறோம் ..." என்று கூறிவிட்டு
ஒரு பெண்ணை அழைத்து,
*_இந்த போர்டில் உனக்கு முக்கியம் என்று தோன்றும் 30 பேர் பெயரை எழுதுங்கள்..."_* என்று பணித்தார்.
அந்த பெண்ணும் எழுதினார்:-
பெயர்களை கவனித்த அவர், "இதில் உங்களுக்கு முக்கியம் இல்லை எனும் ஐந்து பேர் பெயரை அழித்து விடுங்கள்" என்றார்...
அந்த பெண் உடன் பணிபுரியும் ஐந்து பேரின் பெயரை அழித்தார்..
அடுத்து மீண்டும் ஐந்து பேர் பெயரை அழிக்க சொன்னார்.
அந்த பெண் பக்கத்துக்கு வீட்டினர் ஐந்து பேரின் பெயரை அழித்தார்...
இப்படியே அழித்து அழித்து கடைசியில் நான்கு பெயர்கள் மட்டுமே இருந்தன போர்டில்...
அது அவரின் பெற்றோர், கணவர் மற்றும் ஒரே மகன்....
இப்போது மீண்டும் இரண்டு பேர் பெயரை அழிக்க சொன்னார்...
இப்போது தான் அங்கிருந்த அனைவரும் இங்கே நடப்பது வெறும் விளையாட்டு இல்லை என்பதை உணர்ந்தனர்...
வேறு வழியே இல்லாமல் அரை மனதுடன் அவளின் பெற்றோர் பெயரை அழித்தார் அந்த பெண்...
மீண்டும் ஒரு பெயரை அழிக்க சொன்னார் அந்த ஆசிரியர்...
அந்த பெண் அழுது கொண்டே... நடுங்கும் கரங்களுடன் மிகுந்த வேதனையுடன் அவரது மகனின் பெயரை அழித்து விட்டு கதறிவிட்டார்...
ஆசிரியர் அவரை அவரது இருக்கைக்கு போகச்சொல்லிவிட்டு,
"ஏன் உங்கள் கணவர் பெயரை தேர்ந்தெடுத்தீர்கள்... ?????
உங்கள் பெற்றோர் தானே உங்களை பெற்று வளர்த்து ஆளாக்கினர்.!!!!
உங்கள் மகன் தானே உங்களுக்கு தாய்மை அளித்தான். .. !!!
பின் ஏன் ..?" என்று கேட்டார்.. ???
முழு அரங்கமும் ஆவலுடன் அவள் அளிக்கப்போகும் பதிலுக்காக காத்திருந்தது... ??????
அதற்கு அந்த பெண்...."
இருக்கலாம்.. என் பெற்றோர் எனக்கு முன்னமே இறந்துவிட வாய்ப்புள்ளது... ???
என் மகன் படிப்பிற்காகவும், அவனது வாழ்க்கைக்காகவும் என்னை பிரிந்து விட நேரலாம்.... ???
ஆனால் எப்போதும் என் கூட இருந்து தனது வாழ்க்கை முழுமையும் எனக்காக அர்ப்பணிப்பவர் என் கணவர் மட்டுமே.. !!!! அதனால் தான்...." என்றார்.....!!!!!
அனைவரும் எழுந்து நின்று கை தட்டி அவரை பாராட்டினர்....
இது தானே உண்மை .... உங்கள் வாழ்க்கை துணையை எப்போதும் அன்புடனும் மரியாதையுடனும் நடத்த தவறாதீர்கள்...... !!!
அதன் பொருட்டே இறைவன் உங்களை இணைத்திருக்கிறான் என்பதை உணருங்கள்...!!!!
*...படித்ததில் பிடித்தது மனதில் பதிந்தது ...!!!!*
இது மனைவிகளுக்கு மட்டும் இல்லை... கணவர்களுக்கும் தான்...!!*
*ஆதலால் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், தங்களுக்கும் பிடித்திருந்தால் அவசியம் பகிரவும்...!!!🙏உங்களின்🙏🤗ஸ்ரீ
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)